இந்த இரவை
கம்பளிகளால் போர்த்தியிருக்கிறேன்
கம்பளிக்குள் ஒரு இரவு இருந்தது
அதனை இமைகளால் போர்த்தினேன்
மனது வானத்தை
நினைத்தபடி கிடந்தது
வெளிறிய மேகங்கள் உலவின
நிலவிலிருந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது
கருத்த மேகங்கள் கம்பளியைப் போல்
நிலவினை மூடியதும்
ஆகாயமே இருண்டுக் கிடந்தது
நான்
நிலவுக்குள் இருக்கிறேன்.
- ப.செல்வகுமார், பெரம்பலூர்