உனக்கும் எனக்குமான
இடைவெளியில்
இடையில் நிற்கிறது மெளனம்;
மௌனத்தை மொழிபெயர்க்கையில்
வார்த்தையால் வசீகரிப்பதும்
வாளால் வெட்டுண்டு போவதும்
நிகழுமாகையால்
விட்டு விடுகிறேன்
சத்தக் கூடுகளின் சஞ்சாரத்தை விட
மௌனமே
மொழிகளில் சிறந்த மொழியென்று!
- ந.சுரேஷ், ஈரோடு