lovers on beach
சலனப்பட்டு அமர்ந்தேன்
தோளில் சாய்ந்து
தோழன் என்றாள்;
இப்பொழுது
சலனம் சங்கடப்பட்டது
_________________

காலங்காலமாக
பறையடிப்பவனுக்கு
வராத சாமி
பார்ப்பவனுக்கு
வந்து விடுகிறது
_________________

அம்மாவின் விருப்பத்தை
செவி சாய்த்ததே இல்லை
இருப்பினும்
சபை நடுவே அப்பா
சொன்னார்
அவள் தான் எஜமானி

- ந.சுரேஷ், ஈரோடு