கடைசி வரை
நடக்காத கடவுளை
தூக்கியே சுமந்த
திருவிழாவை கேள்விகளோடே
கடந்து விட்டான்
சற்று முன் தொலைந்தவன்....
-------
சலித்து விட்ட புள்ளிக்குள்
பறவைகளாகிவிட்டதாக
நம்பத் தொடங்கிய
செம்மறியாட்டுக் கூட்டத்தில்
கடைசியாக பறந்தவன்
மேய்ப்பவன்...
-------
வழக்கமான
பாதைதான்...
மறந்து விட்டு நினைவு
படுத்திக் கொள்கிறது
வழக்கத்துக்கு மாறானவைகள்...
-------
எனது கவிதைகளை
யார் வேண்டுமானாலும்
ஆரம்பிக்கலாம்...
முடிப்பது கண்டிப்பாக
நான் மட்டும்தான்...
- கவிஜி