Fish hooksஒவ்வொரு
கணப்பொழுதும்
ஏதாவதொரு மீன்
தூண்டிலில் மாட்டிக் கொண்டுதானிருக்கிறது.
ஒவ்வொரு
கணப்பொழுதும்
எவனாவதொருவன்
மீன் எதுவும் சிக்காத விரக்தியில்
தூண்டிலை சுருட்டிக் கொண்டும் இருக்கிறான்.

மீன் கிடைத்தவன்
கடவுளுக்கு நன்றி சொல்கிறான்
மீன் கிடைக்காதவன்
கடவுளைச் சபிக்கிறான்
சிக்கிய மீன்
கடவுளை சபிப்பதுமில்லை
தப்பிய மீன்
கடவுளுக்கு நன்றி சொல்வதுமில்லை!

- சேயோன் யாழ்வேந்தன்