பசு இறைச்சி
பன்றி இறைச்சி
எதுவாயினும்
செரித்துவிடுகிறது
இரைப்பை .......
கடவுளால் விலக்கப்பட்ட
உணவையும்
கடவுளாய்
வணங்கப்படும் எதையும்
செரித்துவிடும்
எங்கள் பசிகொண்ட
இரைப்பை .......
பசி
பாழாய்போன
பண்பாடுகள்
மதவாத மூடத்தனங்கள்
அனைத்தையும்
செரித்துவிடும்
உணவுகளை
இரைப்பையால்
மட்டுமே
செரிக்கமுடியும்
மதக்கோட்பாடுகளை
சுமந்துகொண்டுள்ள
மூளையால் அல்ல
மரணத்தின் பின்னர்
விலக்கப்பட்ட
உணவை
உண்டதற்காக
உங்களின்
இறைவன்
எங்களுக்கு
நரகம் தரலாம் .....
நரகத்திலேனும்
பசியற்ற வயிற்றை
படைக்கச்சொல்லுங்கள்
உங்கள் இறைவனை
இல்லையெனில்
உங்கள்
இறைவனே
எங்களுக்கு
இரையாகலாம்
எச்சரிக்கை ....