வீடு புகுந்து கொல்வதை
தேடுதல் வேட்டை என்று சொல்லுங்கள்
முதுகில் குத்துவதை
மோதல் என்று சொல்லுங்கள்
உரிமைக்குப் போராடுபவனை
பயங்கரவாதி என்று சொல்லுங்கள்
பொதுமக்கள் செத்துப்போனால்
தியாகம் என்று சொல்லுங்கள்
சொந்த சகோதரர்களைக் கொல்வதை
வீரம் என்று சொல்லுங்கள்
இல்லையென்றால் உங்களை
நாட்டுப்பற்றில்லாதவன் என்று சொல்லி விடுவார்கள்...