ஆகி விட்டன
ஆறு ஆண்டுகள்
தாத்தா இறந்து
விட்டுச் சென்ற
நிலங்கள்
வீட்டு மனைகளாகி விட
வங்கிச் சேமிப்புகள்
வாரிசுகளின்
கடனடைத்து விட
நிர்வகித்த
நிறுவனம்
அவர் பெயர்
சொல்வதை
நிறுத்தி விட
அவ்வப்போது
பிள்ளையிடம்
அம்மா காணும்
அடையாளமாய்
“அப்படியே
தாத்தா கோபம்”
- க. ஆனந்த்