கீழடி - ஒரு வாரமாக அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக இருக்கும் விடயம்!! பல ஆண்டுகளாக கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆராய்ச்சியின் நான்காம் கட்ட முடிவை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. மிக முக்கியமாக கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கல்வியறிவு பெற்றிருந்திருக்கின்றனர் என இந்த ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வை எவ்வளவு தடுக்க முடியுமோ, அவ்வளவு தூரம் தடுத்து வந்த இந்திய அரசின் தொல்லியல் துறையைத் தாண்டி, மாநில அரசின் தொல்லியல் துறை இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருப்பது உள்ளபடியே பாராட்டுதலுக்குரியது.

keezhadi excavationஇந்த ஆய்வு முடிவுகள் மூலம் ஏற்கனவே இந்திய வரலாற்றையே மாற்றி அமைத்த ஹரப்பா, மொகஞ்சதாரோ வரிசையில் இன்று கீழடி நாகரீகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. 1921 ஆம் ஆண்டு இன்றைய பாகிஸ்தான் அருகில் ஹரப்பா நாகரீகம் அன்றைய பிரிட்டிஷ் அரசின் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு 1922 ஆம் ஆண்டு இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியில் மொகஞ்சதாரோ நாகரீகம் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரண்டு ஆய்வு முடிவுகளையும் 1924 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசு வெளியிட்டது...

இந்த இரு ஆய்வு முடிவுகளும் அதுகாலம் வரை வேதத்தை மையமாக வைத்து இந்திய துணைக் கண்டத்தின் தொன்மையை வரையறுத்து வந்த ஆரிய பார்ப்பனக் கூட்டத்திற்கு பேரிடியாய் விழுந்தது. வேத நாகரீகத்தின்படி ஆரிய பார்ப்பனர்களே படிப்பறிவுள்ள நாகரீகமான கூட்டமென்றும், அவர்களைத் தவிர்த்த திராவிட இன மக்கள் எல்லாம் படிப்பறிவில்லாத காட்டுமிராண்டிகள் என்றும், நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டமென்றும் வரலாற்றை நிலைபெறச் செய்திருந்த ஆரிய பார்ப்பனக் கூட்டத்திற்கு ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வு முடிவுகள் என்பது நிச்சயம் பேரிடி தான்...

காரணம் இந்த நாகரீகம் தான் இந்த நிலப்பரப்பின் மிகவும் தொன்மையான நாகரீகம் என்றும், இந்த நாகரீகத்திற்குச் சொந்தமானவர்கள் திராவிட இன மக்கள் தான் என்றும் அறுதியிட்டுக் கூறியது... இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட திமிலுள்ள காளை வடிவ சிற்பங்கள் எல்லாம் திராவிட நாகரீகத்தையே பறை சாற்றுவதாக இருந்தன. ஆனால் இதை ஒரு துளி கூட ஜீரணித்துக் கொள்ள முடியாத பார்ப்பனக் கூட்டம் இந்த நாகரீகம் ஆரிய நாகரீகம் தான் என்றும், அது காளை அல்ல, குதிரை தான் என்றும் பல குப்பை நூல்களை எழுதித் தள்ளின. ஆய்வு முடிவு வெளியாகி 94 ஆண்டுகளானபோதும் ஆரிய பார்ப்பனக் கூட்டம் இந்தப் பொய்யை சொல்லிக் கொண்டே தான் உள்ளது. இப்படியிருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள கீழடியில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது தான் வேடிக்கை!!

கீழடிக்கும், ஹரப்பா நாகரீகத்திற்குமான தொலைவு கிட்டத்தட்ட 1900 கிலோ மீட்டர்கள். அதே போல ஹரப்பாவிற்கும், மொகஞ்சதாரோவிற்குமான தொலைவும் கிட்டத்தட்ட 1900 கிலோ மீட்டர்கள். அதாவது சுமார் 4000 கிலோ மீட்டர்கள் திராவிடத் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என இந்த மூன்று ஆய்வு முடிவுகள் நிறுவுகின்றன..

ஆக இந்த ஆய்வு முடிவுகளில் இருந்து நமக்கு எழும் அடிப்படை கேள்விகள் என்ன? 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் எப்படி தமிழ்நாடு என்ற சிறிய பகுதியில் வாழும் மக்களாக மாறினார்கள்? எப்படி 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளில் பேசப்பட்ட தமிழ் மொழி இன்று தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படும் மொழியாக மாறியது? 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கல்வியறிவோடு இருந்திருக்கின்றனர் என்றால், இடையில் அவர்களின் கல்வியைப் பறித்தது யார்? என்பது எல்லாம் தான் நமக்கு எழ வேண்டிய அடிப்படைக் கேள்விகள்!!

இந்தக் கேள்விகளுக்கான ஒற்றைப் பதில் - ஆரியப் பார்ப்பனர்கள் என்பதே!! அவர்கள் தான் மண்ணின் மைந்தர்களான தமிழ் பேசும் திராவிட மக்களை தென்னகம் வரை ஒடுக்கியவர்கள்... அவர்கள் தான் சமஸ்கிருத மொழியை தமிழ் மொழியோடு கலந்து தமி்ழ் மொழியை பல்வேறு மொழிகளாக சிதைத்தவர்கள்... திராவிடத் தமிழர்களின் கல்வியை, அடிப்படை உரிமைகளைப் பறித்து நான்காம் தர சூத்திரர்களாக ஆக்கியவர்கள்...

ஆக இந்த கீழடி முடிவு என்பது முழுக்க முழுக்க ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரானது என்பது தான் வரலாற்றின் தொடர்ச்சியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது...

அப்படி என்றால் இந்த கீழடி ஆய்வு முடிவைத் தொடர்ந்து அனைத்து தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று ஆரிய பார்ப்பன இனத்தை நோக்கி தங்கள் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்... அது தான் 2000 வருட ஒடுக்குமுறைக்கு, துரோகத்திற்கு தமிழ் சமூகம் ஆற்ற வேண்டிய குறைந்தபட்ச எதிர்வினையாக இருக்கும்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? ஆரியத்திற்கு எதிராக அணி திரண்டிருக்க வேண்டிய தமிழ்ச் சமூகத்தை பெரியாரை நோக்கித் திருப்பி உள்ளது ஒரு புல்லுருவிக் கூட்டம்!!

அதுவும் 6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு பெற்றிருந்த தமிழர்களை திராவிடர் இயக்கமா படிக்க வைத்தது என படு மொக்கையான ஒரு வாதத்தை நாம் தமிழர் என்ற கட்சியைச் சேர்ந்த அனைத்து இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நபர்களும் கேட்டுள்ளனர். இவ்வளவு அறிவுபடைத்த அனைவரும் ஒரு கொடையின் கீழ் திரண்டிருப்பது சீமானுக்குக் கிடைத்த பேறு என்றே சொல்ல வேண்டும். அரசியல் அரிச்சுவடி அறியாத சாமானியன் கூட கேட்கத் துணியாத படுகேவலமான வாதத்தை நாங்கள் தான் "அறிவின் டிப்போ" என பீற்றிக் கொள்ளும் கூட்டம் கேட்டிருப்பது நகை முரண்!!

(6 ஆம் நூற்றாண்டில் படித்த தமிழர்களை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான் படிக்க வைத்ததா எனக் கேட்பவர்கள் தங்களது தாத்தா, கொள்ளுத் தாத்தாவின் டிகிரி சர்டிபிகேட்டை பொது வெளியில் வெளியிட்டு இக்கேள்வியை கேட்டிருக்க வேண்டும்)

ஆனால் இப்படியொரு வாதத்தை வைத்த இந்தக் கூட்டத்தை சாதாரணமாகக் கிண்டலடித்து நகர முடியவில்லை. இந்தக் கூட்டம் செய்வது எவ்வளவு பெரிய பச்சைத் துரோகம் என நினைக்கையில் இனத் துரோகிகளுக்கு இந்த இனத்தில் 2000 ஆண்டுகளாக பஞ்சமே இருந்ததில்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது...

அடுத்து இந்தக் கூட்டம் ஆரிய பார்ப்பனர்களைக் காப்பாற்ற முன் வைக்கும் வாதம் "இது திராவிடர் கலாச்சாரமல்ல, தமிழர் கலாச்சாரம்" என்பது. எந்த திராவிடர் இயக்கத்தினரும் இதை தமிழர் கலாச்சாரம் எனச் சொல்வதை எதிர்க்கவோ, முரண்படவோ இல்லை... ஆனால் நாம் இதிலிருக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரான அரசியலை முன் வைக்க "திராவிடர் கலாச்சாரம்" என்ற வார்த்தையை முன் வைக்கும் போது, பார்ப்பனர்களை முந்திக் கொண்டு வந்து குட்டையைக் குழப்புகின்றனர்... ,

இந்த கீழடி ஆய்வு முடிவையொட்டி ஆரிய பார்ப்பனர்களை நோக்கி தங்கள் சுண்டு விரலைக் கூட நீட்டத் துணியாத கூட்டம், இன்னொரு பக்கம் ஆரியத்திற்கு எதிரான அரசியல் சொல்லான திராவிடத்தை எதிர்க்க முதல் ஆளாய் ஆஜராவதிலிருந்தே இவர்கள் யாருக்காக வேலை செய்கின்றனர் என்பது அம்பலமாகிறது...

இத்தனை ஆண்டுகள் திராவிடர் இயக்கம் என்ன அரசியலை முன் வைத்ததோ, அதைத் தான் இன்றைய கீழடி ஆய்வும் உறுதிபடுத்துகிறது. "ஆரிய பார்ப்பனர்கள் தான் மண்ணின் மக்களாகிய நம்மை வடக்கிலிருந்து துரத்தியடித்தவர்கள்... ஆரிய பார்ப்பனர்கள் தான் சாதியற்ற சமூகமாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் சாதியப் பிளவுகளை ஏற்படுத்தியவர்கள்... நான்காம் தர சூத்திரர்களாக, பஞ்சமர்களாக அடிமையாக்கியவர்கள்... நமது பண்பாட்டை ஆரிய மையமாக்கியவர்கள்... நமது மொழியை சிதைத்து பல்வேறு மொழிகளாக உடைத்தவர்கள்... மீதமிருந்த தமிழ் மொழியையும் சமஸ்கிருத மயமாக்கியவர்கள் என இத்தனைக் கொடுமைகளையும் தமிழ்ச் சமூகத்திற்கு 2000 வருடங்களாக செய்து வருபவர்கள் ஆரிய பார்ப்பனர் தான்" என திராவிடர் இயக்கம் கூறியது இன்று உறுதியாகியுள்ளது... நம் இனத்தின் முதன்மை எதிரி ஆரிய பார்ப்பனக் கூட்டம் தான் என கீழடி மெய்ப்பித்திருக்கிறது... ,

இப்படி இருக்க ஆரிய பார்ப்பனர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கும் திராவிடர் என்ற சொல்லை பார்ப்பனர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முற்படுகையில் இவர்கள் ஏன் பதறுகிறார்கள்? ஆம் கீழடி ஆய்வு முடிவுகளைக் கண்டும் ஆரிய பார்ப்பனர்களின் மீது சிறு விமர்சனமும் வைக்காத அந்த இனப்பற்றாளர்கள் தான் திராவிடர் என்ற சொல்லுக்கு மட்டும் எதிராகப் பொங்குபவர்கள்...

பெரியார் திராவிடர் என்ற சொல்லை ஆரிய பார்ப்பனர்கள் தவிர்த்து ஏனையோர்களை குறிக்கப் பயன்படுத்தினார்... ஆனால் இந்த சொக்கத் தங்கங்கள் ஒரு பக்கம் தமிழினத்தின் 2000 ஆண்டுப் பகைவர்களாக இருக்கும் ஆரிய பார்ப்பனர்கள் இங்கே தமிழ் மொழி பேசுகிறார்கள் என்ற காரணத்தால், அவர்களை சுத்த தமிழர்கள் என சான்றிதழ் கொடுத்துவிட்டு வந்து தான், இந்தப் பக்கம் ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரான அரசியல் சொல்லான திராவிடர் என்ற சொல்லை எதிர்க்கின்றனர்...

இவர்களுக்கு குறைந்த பட்ச அறிவு நாணயம் இருந்திருந்தால், பெரியார் என்ன காரணத்திற்காக திராவிடர் என்ற சொல்லை முன் மொழிந்தாரோ, இந்த வாதத்தை தமிழ் என்ற சொல் கொண்டு பொய்யாக்கிவிட்டு, திராவிடர் என்ற சொல்லை எதிர்த்து அரசியல் செய்திருக்க வேண்டும். பெரியார் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை மிகத் தெளிவாகவே விளக்கிவி்ட்டு சென்றுள்ளார்.. "இங்கே தமிழினத்தின் ஒற்றை எதிரியாக ஆரிய பார்ப்பனர்களும், இங்கே தமிழ் மொழி பேசி தமிழர்களாகவே தான் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்க தமிழர் என்ற சொல் கொண்டு பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழின விடுதலை அரசியலை முன் வைக்க முடியாது... காரணம் நாமும் தமிழன் தான் என பாப்பானும் வந்து நிற்ப்பான். ஆக அவனை உள்ளே விடாமல் தடுக்க ஆரியத்திற்கு நேர் எதிர் சொல்லான திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்" என 70 வருடத்திற்கு முன்பாகவே தெளிவுபடுத்திவிட்டார்...

ஆனால், இந்தக் கூட்டமோ தமிழினத்திற்கு 2000 வருடங்களாக தொடர் துரோகத்தையும், வஞ்சகத்தையும் செய்து வருகின்ற ஆரிய பார்ப்பனர்கள் தங்கள் வீடுகளில் தமிழ் பேசுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறி, அவர்களை பச்சைத் தமிழர்கள் என அங்கீகரிக்கிறது. பிறகென்ன யோக்கியதை இருக்கிறது, உங்களுக்கு திராவிடர் என்ற சொல்லை எதிர்க்க என்பது தான் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தை நோக்கி வைக்க வேண்டிய கேள்வி!!

தமிழினத்தின் ஒற்றை எதிரியான ஆரிய பார்ப்பனர்களை சுத்த தமிழர்கள் என ஏற்றுக் கொள்ளும் இந்தக் கூட்டம், இன்னொரு பக்கம் அந்த ஆரியப் பார்ப்பனர்களால் சிதைக்கப்பட்ட தமிழ் மொழியின் எச்சத்திலிருந்து உருவான மக்களை வந்தேறிகள் எனக் கூறி, எதிரிப் பட்டியலில் சேர்க்கத் துடிப்பது தான் மாபெரும் கேலிக் கூத்து... நியாயத்திற்கு பேரினமாக வாழ்ந்து வந்த தமிழினத்தை சிதைத்த ஆரிய பார்ப்பனர்கள் மீது தான் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உலக மகா இன உணர்வாளர்களுக்கு ஆரிய பார்ப்பனர்கள் மீது கொள்ளைப் பாசம்!! ஆனால் ஆரிய பார்ப்பனர்களிடம் பலியான மக்கள் தான் எதிரிகளாம்!!

அதுவும் கர்நாடகாவில், ஆந்திராவில், கேரளாவில் வாழும் மக்கள் மட்டுமல்ல... தமிழ்நாட்டிலேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தாலும் எதிரிகள் தானாம்!! 2000 வருடங்களாக தமிழினத்தின் எதிரிப் பட்டியலில் இருக்கும் பார்ப்பனர்களைக் காப்பாற்ற, பாவம் வேறு வழி தெரியவில்லை எளிய தமிழ்ப் பிள்ளைகளான நாம் தமிழர் கும்பலுக்கு.

இவர்களிடம் நாம் முன் வைக்கும் அடிப்படைக் கேள்வி, இவர்களால் வந்தேறிகள் என அடையாளப்படுத்தப்படும் மக்கள் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படும்போது தமிழ்நாட்டிற்காக போராட்ட களத்தில் இருந்துள்ளனர். தமிழ் மொழிப் போரில் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஈழ விடுதலைக்காய் தங்கள் இன்னுடலை தீக்கு தின்னக் கொடுத்துள்ளனர். தமிழர்களின் எல்லா உரிமைப் போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றுள்ளனர். இன்றும் கூட சிறையில் வாடும் பல பேரை உதாரணமாகக் கூறலாம். கடைசியாக நடைபெற்ற ஸ்டெர்லைட் படுகொலையில் கூட இரண்டு தோழர்கள் இந்தக் கும்பலின் வரையறைப்படி வந்தேறிகளே!!

இப்படி தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்து, தமிழர்களாக தங்களை உணர்ந்து, வாழ்ந்து வரும் மக்கள் வந்தேறிகளாம்!! போங்க சார்!! உயிரக் கொடுத்ததுக்கு எல்லாம் தமிழரா ஏற்க முடியுமா எனக் கேட்க கூச்சப்படாது இந்தக் கும்பல்.

சரி அது இருக்கட்டும்!! நீங்கள் சுத்த தமிழர்கள் சான்றிதழ் கொடுக்கும் ஆரிய பார்ப்பனர்களில் ஒருவராவது மொழிப் போரில் உயிர் நீத்ததுண்டா? ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்ததுண்டா ?? உயிர் கொடுக்க வேண்டாம், குறைந்த பட்சம் தமிழரின் வாழ்வாதாரப் பிரச்சனை முதற்கொண்டு, மொழிப் பிரச்சனை வரை ஏதேனும் ஒரு பிரச்சனையில் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததுண்டா? இல்லவே இல்லை... மாறாக தமிழர்களின் எல்லாப் பிரச்சனையின் போதும் ஆரிய பார்ப்பனர்கள் எதிராகவே நின்றுள்ளனர். மொழிப் போராட்டம் துவங்கி, ஈழ விடுதலைப் போராட்டம், இந்தித் திணிப்பு, நீட், ஸ்டெர்லைட் வரை தமிழர்களுக்கு எதிராக நிற்பது தான் அவர்களுக்கான எழுதப்படாத விதி!! அனிதாவின் மரணத்தைக் கேலி செய்த பார்ப்பனக் கும்பலின் ஈவு இரக்கமற்ற செயலை இன்னும் நாம் மறக்கவில்லை...

ஆக ஆரிய பார்ப்பனர்களுக்கு பேரிடியாய் விழுந்துள்ள கீழடி ஆய்வு முடிவை இந்தக் கும்பல் எதற்காக பெரியாருக்கு எதிராகவும், திராவிடத்திற்கு எதிராகவும் திசை திருப்புகிறது என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன், ,

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்