சில ஆய்வுகளின் தன்மை எப்படி இருக்குமென்றால், அவை பரவலாக நிலவும் கருத்துக்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு புதிய பார்வையை முன்வைக்கும். அந்தப் பார்வை நமது வரலாற்றுப் புரிதலை மட்டும் மாற்றாமல், நமது எதிர்காலப் பார்வையையும், நாம் செயல்படவேண்டிய திசையினையும் காண்பிக்கும். அவ்வாறான ஆய்வுகள் வெகு அபூர்வமாகவே நிகழும். அதுபோன்ற ஒரு ஆய்வினையே ஆழி செந்தில்நாதன் அவர்கள் அண்மையில் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்[1]. அவருடைய உரையிலிருந்து சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்து மேலும் ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

periyar anna ki veeramaniதிராவிட நாடு கோரிக்கைத் தோற்றுப் போவதற்கு முக்கிய காரணாமாக ஆழி செந்தில்நாதன் அவர்கள் கூறுவன:

   ஆழி அவர்களின் இக்கருத்துக்கள் தேசியம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களின், குறிப்பாக பார்த்த சட்டர்சியின் [3], கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. பார்த்தா சட்டர்சியின் கருத்துக்களை ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். அதைக் கீழுள்ள சுட்டியில்[2] பார்க்கவும். அவற்றின் முக்கியம் கருதி மீண்டும் தருகிறேன்:

ஆசியா ஆப்பிரிக்கா நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த தேசியப் போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தா சட்டர்சி [2] அவர்கள் கீழ்காணும் கருத்துக்களை முன்வைக்கிறார்:

தேசியம் முற்றிலும் ஒரு அரசியல் செயல்பாடு என்பது அடிப்படையில் தவறான பார்வை. காலனி ஆட்சியில் அரசியல் செயல்பாடுகளுக்கு வெகு முன்னதாக, தேசியம் தனக்கென ஒரு சுதந்திரமான தளத்தை அமைத்து வெற்றியடைகிறது. அவ்வெற்றிக்கு பின்னரே முழு சுதந்திரத்திற்கான அரசியற்போர் நடைபெறுகிறது. இதனை ஒரு தேசிய இயக்கம் தன்னுடைய தேசிய செயல்பாடுகளை அகம் புறம் என இரண்டாகப் பிரித்து செயல்படுத்துகிறது

அகம்: ஒரு தேசத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், தொன்மங்கள் என்று எவையெல்லாம் தேசிய அடையாளம் சார்ந்ததோ, அவை அகம் என்று அடைப்புக்கள் கொண்டு வரப்பட்டன. அகம் என்பது அடையாளம் என்பதனால், தேசியம் இந்த அடையாளத்தைப் பாதுகாத்தது, குறிப்பாக காலனி ஆட்சியின் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அடையாளத்தை தொடமுடியாதவாறு செயல்பட்டது. அதற்காக பண்பாட்டை மாற்றாமல் இருந்தது என்று சொல்ல முடியாது. தேசியம் இந்த அகத்தில்தான் முழு வீச்சில் தேசிய வரலாற்றிற்கேற்ப, மேற்குலக பண்பாடு அற்ற, ஒரு நவீன பண்பாட்டை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. உணர்வுப்பூர்வமாக மக்களை தாங்கள் ஒரு தேசியம் என்று உணர வைக்கிறது. இத்தளத்தில் தேசியத்தின் முக்கிய செயல்பாடுகள்:

அகத்தில் வெற்றியை உறுதி செய்து தன் இறையாண்மையை நிலைநாட்டியபின், தேசியம் புறத்தில் இறங்குகிறது.

புறம்: இது பொதுவெளி. இங்கே காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான தத்துவங்களான விடுதலை, உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசியம் போராடுகிறது. இந்த தளத்தில் மேற்குலக முறைகள், தத்துவங்கள் தாராளமாக பின்பற்றப்படுகின்றன.

ஆழி அவர்களின் ஆய்வையும் பார்த்த சட்டர்சியின் ஆய்வையும் இணைத்துப் பார்க்கும்பொழுது, எந்த செயல்பாடுகளில் திராவிடம் இயக்கம் தோற்றுப்போனது, இன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்றும் ஓரளவுத் தெளிவாகப் பார்க்கலாம்.

உசாத்துணை:

  1. ஆழி செந்தில்நாதன், காணொளி, https://www.youtube.com/watch?v=t4YCC5NetFQ&feature=share
  2. சு. சேது, பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்

3. Chatterjee, Partha. The nation and its fragments: Colonial and postcolonial histories. Vol. 11. Princeton, NJ: Princeton University Press, 1993.