(ஆந்த்ரே ழீத் - பிரஞ்சு இலக்கியவாதி 1947இல் நோபல் பரிசு பெற்றவர். பரிசு பெறக் காரணமான நூலை ஆங்கிலத்தில் பி.ஏ. லென்ஸ்கியும் தமிழில் ம.இலெ.தங்கப்பாவும் [‘மண்ணின் கனிகள்’] மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பெழுதி வைக்கும் வழக்கமுடையவர் ஆந்த்ரே ழீத். ஆங்கிலத்தில் ஜஸ்டின் ஓ’பிரியன் மொழிபெயர்ப்பில் இக்குறிப்புகள் பல பாகச்ங்களாக வெளிவந்துள்ளன.)

ஏப்ரல் 10,1942.

பிரான்ஸில் பிள்ளைகள் மிக மோசமாக வளர்க்கப்படுகிறார்கள் என்று நான் எப்பொழுதும் நினைப்பேன். அது சம்பந்தமாக, பிரெஞ்சுக் குடும்பங்களைக் குறை கூறுவதுண்டு..

பொதுமக்களின் பூங்கா சிதைக்கப்படுகிறது. பாதுகாப்பில்லை. குழந்தைகள் புல்வெளிகளின் குறுக்கும் மறுக்கும் ஓடுவதோடு அவற்றின் சீரான தன்மையைச் சிதைக்கவும் செய்கின்றனர். மரங்களின் கிளைகளை ஒடித்து வீசுகின்றனர். பூத்திருக்கிற புதர்ச்செடிகளின் பூமொட்டுக்களைப் பிடுங்கி வீசுகின்றனர்.

பெற்றோர் எவரும் இந்த அக்கிரமத்தைக் கண்டு கொள்வதோ, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுவதோ இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பூங்காவின் அழகை நுகரும் பக்குவம் இல்லை.

அவர்கள் பிள்ளைகளின் செயல், பிறருக்கும் சொந்தமான எதையும் ‘சும்மா’ அழிக்கின்ற செயலே. பிரெஞ்சுக் குணம் என்று இதை நாம் கொள்ளக் கூடுமா? இல்லை.. “பிரெஞ்சுக் காரர்களுக்குப் பிள்ளைகள வளர்க்கத் தெரியவில்லை - அவ்வளவுதான்!” என்று விட்டுவிடலாமா?

ஒரு தேசம் - தான் பெற்ற சுதந்திரத்துக்கு இப்படிப்பட்ட பிள்ளைகளாலும் பெற்றோராலும் தகுதி அற்றுப்போனது.

அதனால்தான் பிரஞ்சுக்காரர் ஒருவர், எங்கும் எப்பொழுதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு, காவல்துறையைத் தேடித் தேடிப் போக வைக்கிறது. அதுமட்டுமா? எங்கு பார்த்தாலும் வகைவகையான வேலிகளைப் போட வைக்கிறது.

“இங்கே இதைச் செய்யாதீர்!” அறிவிப்புப் பலகைகளை எங்கு பார்த்தாலும் மாட்டி வைக்கச் செய்கிறது. 

- தேவமைந்தன்