நான் அண்மையில் ரவி வைத்தீசு[1] அவர்களின் தமிழ்த்தேசியம் பற்றிய நூலையும் மற்றும் தேசியம் சார்ந்த சில நூல்களையும்[2,3] படித்தேன். அவற்றிலிருந்து சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்வதுதான் இந்தக்கட்டுரையின்  நோக்கம்.

maraimalaiadikal bookதமிழ்த்தேசியம் என்பது பொதுவாக  நீதிக்கட்சி , சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாட்டாக மட்டுமே அறியப்படுகிறது.  ஆனால் தமிழ்த்தேசியம் அரசியல் தளத்தில் செயல்படுவதற்கு முன்பாக பண்பாட்டுத்தளத்தில் பெரிய அளவில் செயல்பாடுகள் இருந்தன. இச்செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுகொண்டதில்லை. அண்மையில் மானிட்டோபா பல்கலையில் பணியாற்றும் இணைப்பேராசிரியர்  ரவி வைத்தீசு அவர்கள் தமிழ்த்தேசிய  ஆரம்பகால வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, தமிழ்த்தேசியம் எவ்வாறு பண்பாட்டு தளத்தில் துவங்கியது என்றும் அதில் மறைமலை அடிகள் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தார்   என்றும் அவருடைய நூலில் விளக்குகிறார்.  

மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப்பொதுவாக அறியப்படுகிறார். ஆனால் இது அவரின் தமிழ்த்தேசிய பங்களிப்பை சுருக்குவதாகும்.  வைத்தீசு அவர்களின் ஆராய்ச்சியின்படி தமிழ்த்தேசிய பண்பாட்டுத்தள ஆரம்பத்தில், அடிகள் அவர்கள் மையப்புள்ளியாக விளங்குகிறார். அடிகளின் தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ்த்தேசிய பங்களிப்பில் ஒரு பங்குதான். அவரின் முழு பங்களிப்பைப் பற்றி அறிய, தேசியம்  எவ்வாறு செயல்படுகிறது என்ற புரிதல் அவசியம். அதனால் முதலில் அடிகளின் பங்களிப்பை விளக்கும் முன், தேசியம் எவ்வாறு செயல்படுகிறது என்ற நான் கற்ற நூல்களிலிருந்து மூன்று முக்கிய கருத்துக்களை எடுத்து வைக்கிறேன். பல ஆராய்ச்சியாளர்கள் இக்கருத்துக்களை தெளிவாக விளக்கியுள்ளதால், நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் கூறிய முக்கியமானவற்றை அப்படியே தருகிறேன்.  

1. இறந்தகால வரலாறு தேசியத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கிறது.

கார்ல் மார்க்சு:   மனிதர்கள் தங்கள் எதிர்கால வரலாற்றை தாங்களே படைக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை எப்படி வேண்டுமானாலும் படைப்பதில்லை. அவர்கள்  நிகழ்கால சூழ்நிலையையும், முன்னோர்கள் அவர்களுக்களித்த இறந்தகால வரலாற்றையும் கொண்டே எதிர்காலத்தை படைக்கிறார்கள். முன்னோர்களின் பாரம்பரியம் வாழும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து அவர்களை ஆட்டுவிக்கிறது.

புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஏரிக்கு ஆப்சுபாம்:  வரலாறு இல்லாத தேசம் என்பது முரண், ஒரு தேசத்தை உருவாக்குவதே அதன் இறந்தகால வரலாறுதான்.

அந்தோணி சுமித்து:

2. தேசிய அறிவுசீவிகளின் பங்கு அதிமுக்கியம்

தேசிய இயக்கமென்பது அறிவுசீவிகளால் நடத்தப்படுவது[3]. ஒரு தேசம் தேசிய இயக்கத்தை உருவாக்குவதில்லை.  தேசிய இயக்கம்தான்  தேசத்தை உருவாக்குகிறது.  அறிவுசீவிகளின் முக்கிய செயல்பாடுகள்:

3. தேசிய செயல்பாடுகளை அகம் புறம் என இரண்டாகப் பிரித்தல்

ஆசியா ஆப்பிரிக்கா நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த தேசியப்போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தா சட்டர்சி [2] அவர்கள் கீழ்காணும் கருத்துக்களை முன்வைக்கிறார்:

தேசியம் முற்றிலும் ஒரு அரசியல் செயல்பாடு என்பது அடிப்படையில் தவறான பார்வை. காலனி ஆட்சியில் அரசியல் செயல்பாடுகளுக்கு வெகு முன்னதாக, தேசியம் தனக்கென ஒரு சுதந்திரமான தளத்தை அமைத்து வெற்றியடைகிறது. அவ்வெற்றிக்கு பின்னரே முழு சுதந்திரத்திற்கான அரசியற்போர் நடைபெறுகிறது. இதனை ஒரு தேசிய இயக்கம் தன்னுடைய தேசிய செயல்பாடுகளை அகம் புறம் என இரண்டாகப்பிரித்து செயல்படுத்துகிறது 

அகம்: ஒரு தேசத்தின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், தொன்மங்கள் என்று எவையெல்லாம் தேசிய அடையாளம் சார்ந்ததோ, அவை அகம் என்று அடைப்புக்கள் கொண்டுவரப்பட்டன. அகம் என்பது அடையாளம் என்பதனால், தேசியம் இந்த அடையாளத்தை பாதுகாத்தது, குறிப்பாக  காலனி ஆட்சியின்  சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்  அடையாளத்தை தொடமுடியாதவாறு செயல்பட்டது. அதற்காக பண்பாட்டை மாற்றாமல் இருந்தது என்று சொல்ல முடியாது. தேசியம் இந்த அகத்தில்தான் முழு வீச்சில் தேசிய வரலாற்றிற்கேற்ப, மேற்குலக பண்பாடு அற்ற, ஒரு நவீன பண்பாட்டை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. உணர்வுப்பூர்வமாக மக்களை தாங்கள் ஒரு தேசியம் என்று உணரவைக்கிறது. இத்தளத்தில் தேசியத்தின் முக்கிய செயல்பாடுகள்:

அகத்தில் வெற்றியை உறுதி செய்து தன் இறையாண்மையை நிலைநாட்டியபின், தேசியம் புறத்தில் இறங்குகிறது.

புறம்: இது பொதுவெளி. இங்கே காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகில்  ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான தத்துவங்களான விடுதலை, உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசியம் போராடுகிறது. இந்த தளத்தில் மேற்குல முறைகள், தத்துவங்கள் தாராளமாக பின்பற்றப்படுகின்றன.

தமிழ்த்தேசியம்:

இனி எவ்வாறு அடிகளின் தமிழ்த்தேசிய பண்பாட்டு செயல்பாடுகள் அமைந்திருந்தன என வைத்தீசு அவர்களின் நூலின் அடிப்படையில் பார்ப்போம். நான் மேலே கூறிய மூன்று தேசிய செயல்பாடுகளில்,  தமிழ்தேசியத்தை  உருவாக்கிய அறிவுசீவி பாத்திரத்தை  வகித்தவர் அடிகள் என்றால் மிகையில்லை. திராவிடக்கருத்தியலின் பெரும்பங்கு அடிகளிடமிருந்து வந்ததே என்பதை அவரின் பங்களிப்பை அறியும்பொழுது உணரமுடியும். வைத்தீசு அவர்களின் நூலில் கூறப்பட்ட முக்கிய கருத்துக்கள்:

 ஒரு தேசியமமைக்கை அறிவுசீவிகளின் பங்கை மேலே பார்த்தோம். அந்த அறிவுசீவிப் பங்கை வகித்தவர் அடிகள். அவரில்லாமல் தமிழ்த்தேசிய கருத்தியல் இல்லை. அவரின் பங்களிப்பை செந்தமிழ்ச்செல்வி இதழில் காணப்படும் இரங்கல் மிகத்தெளிவாக தெரிவிக்கிறது: செந்தமிழ்ச்செல்வி நூல் என்னிடம் இல்லாததால் ரவி வைத்தீசு அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவ்வாறே தருகிறேன்:

 “There can be few among us who would deny the greatness of Maraimalai Adigal. A greater challenge is to correctly assess his supreme contribution to Tamil people. The Tamil we speak, the Tamil we write are all his gifts. Even our Tamil knowledge, our very Tamil patriotism and nationalism, our current Tamil leaders, intellectuals, creative writers, and our contemporary tamil patriots are all rivers and streams that have flown from this great mountain called Maraimalai”.

என்னுடைய பார்வையில் வைத்தீசு அவர்களின் ஆராய்ச்சி தமிழ்த்தேசியத்தை அறிந்துகொள்ள மிக முக்கியம் எனக்கருதுகிறேன். தமிழ்த்தேசியம் என்பது ஒரு அரசியல் செயல்பாடு மட்டுமே என்ற கருத்தை உடைத்து பண்பாட்டுத்தளத்தின் முக்கியத்துவத்தையும் அறிவுசீவிகளின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள உதவியிருக்கிறார். பார்த்தா  சட்டர்சியின் ஆராய்ச்சியின் உதவியுடன் பார்க்கும்பொழுது, முதலில் பண்பாட்டுத்தள வெற்றியே பின்வரும் அரசியல் வெற்றியை தீர்மானிக்கிறது என்பது புலனாகிறது.

பயன்படுத்திய நூல்கள்:

பின் குறிப்பு:

இந்தக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் தேசியம் பற்றிய தத்துவங்கள் பார்த்தா சட்டர்சி அவர்களின் தத்துவங்களை  முதன்மைப்படுத்தி, ரவி வைத்தீசு அவர்களின் தமிழ்த்தேசிய பண்பாட்டுத்தள ஆராய்ச்சியின்  துணைகொண்டு விளக்கப்பட்டுள்ளது.  இந்த கருத்துக்கள் ஒரு நிலைப்பாட்டின்  அடிப்படையில் மட்டுமே விளக்கப்பட்டுள்ளது. தேசியம்பற்றிய ஆராய்ச்சியில் பல நிலைப்பாடுகள்  உள்ளன. காரல் மார்க்சு, பெனெடிக்டு அர்னால்டு, எரிக்கு ஆப்சுபாம் ஆகியோரைப்பற்றி நான் இங்கு கூறினாலும், அவர்களின்  தேசியம் பற்றிய நிலைப்பாடுகள் வேறானவை. இவற்றைப்பற்றி மேலும் கற்க  அந்தோணி சுமித்து நூலைப்  படிக்கவும்.

சு.சேது