இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 13வது தமிழ்நாடு மாநில மாநாடு செப். 2427 ஆகிய தேதிகளில் பள்ளிப் பாளையம் வேலுச்சாமி நினைவரங்கத்தில் (கல்பனா திருமண மண்டபம்கோவை) நடைபெற்றது. இம் மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வில் கல்வி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பாரதி தாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக்குமரனும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் கலந்து கொண்டு பேசினர்.

சமச்சீர் கல்வி எதிர்பார்ப்பும் அமலாக்கமும் என்ற தலைப்பில் முனைவர் ச.முத்துகுமரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

கட்டாயக்கல்வி உரிமை சட்டம்2009 அனைவருக்கு மான கல்வியை வலியுறுத்துகிறது. அனைவருக்குமான கல்வி என்றால், அது தரமானதாக இருக்க வேண்டும். 1950ஆம் ஆண்டில் இருந்து இது குறித்து பேசப்பட்டாலும், தமிழ் நாட்டில் தற்போதுதான் சமச்சீர் கல்வி அமலாக்கத்திற்கு வந்துள்ளது. இதுவும் கூட நீண்ட நெடிய போராட்டத் திற்கு பிறகே வந்துள்ளது. தரமான கல்வியை வழங்க போதிய ஆசிரியர்கள் உள்ளார்களா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தரமாக வழங்க எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழு மிக முக் கியமான 109 பரிந்துரைகளை வழங்கியது. இதில் முதன் மையான 15 பரிந்துரைகள் வரை குறிப்பிடத்தக்கது.

1.பாடநுல்கள், ஆசிரியர்கள், அடிப்படை கட்ட மைப்புகள் குறித்தது.

2. கல்வியின் பயன்கள் அறிவு வளர்ச்சி சமூக பயன் பாடு வளர்ச்சி சார்ந்தது பொருள் ஈட்டுவது குறித்தது.

3. மழலை கல்வி முதல் 5ம் வகுப்பு வரை செலவு களை அரசே ஏற்பது.

4. தாய்மொழி வழி கல்வியை ( தமிழ்மொழி ) உறுதி செய்வது. குறிப்பாக, அதற்கான பயிற்சியை உறுதிப்படுத்துவது.

5. 10 சதம் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது.

6. பள்ளியை நடத்துபவர்களே ஆய்வு செய்பவர் களாக உள்ளனர். இதனை நிர்வாகம், ஆய்வு என இரண் டாக பிரித்து அமைக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் தரம் குறித்த ஆய்வுகள் முழுமையானதாக இருக்கும்.

7. மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தை 30:1 எனவும், 30 பள்ளிக்கு ஒரு ஆய்வாளர் எனவும் இருக்க வேண்டும்.

8. கல்வித்துறை கையேடு வெளியிட வேண்டும்.

9. கிராமக்கல்விக்குழு

என்பன உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டது. தற்போதைய சூழலில் பள்ளியின் அடிப்படை வசதிகள் அடிப்படை கட்டமைப்புகள் மேம் படுத்த வேண்டும். ஜூலை 8ம் தேதி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வெளி வந்தது. அதன்தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் இசை, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கி தரத்தை மேம்படுத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

சென்னையில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளின் தரத்தை ஒட்டு மொத்தமாக எப்படி மேம்படுத்துவது என யோசிக்க வேண் டியுள்ளது. இந்நிலையில் மாதிரி பள்ளிகள் தொடங்கப் படும் என்ற அறிவிப்பு ஏமாற்று வித்தைதானே தவிர வேறில்லை.

மாணவர்கள் வரவில்லை அதனால் மாநகராட்சி பள்ளி மூடப்படுகிறது என்ற செய்தியின் பின்புலம் என்ன?

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், இந்தியாவில் 12 லட்சம் ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுள்ள பத்திரிகைகள் அதே பக்கத் தில் 600 பள்ளிகள் மூடப்பட்டதாகவும் வெளியிட்டுள் ளன. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 3.50 லட்சம் ஆசிரி யர்கள் பதிந்து வேலைக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.

2010 செப் 4ம் தேதி ஆசிரியர் நியமனத்திற்கான பணி யாணையை ஒருவர் பெற்றுக் கொண்டு அந்த பள்ளிக்கு சென்றால் அங்கு அப்படியரு பள்ளியே இல்லை. தமி ழகத்தில் இப்படித்தான் ஆசிரியர் பணி நியமனம் உள்ளது. நல்ல சட்டங்களை கொண்டு வருவதோடு அதை நடைமுறைப்படுத்தும் போதுதான் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கு அவர்களின் திறமை அடிப்படையில் பயிற்சி கொடுக்க வேண்டும்: கொடுக்கப்படுகிற பயிற்சி அவர் களின் வளர்ச்சிக்கான களமாக இருக்க வேண்டும். அறி வியல், தொழில்நுட்பம், மொழி, கணிதம், சமூக அறிவி யில் பாடங்களை தவிர வேறு ஒன்றும் இல்லையா? கலை, உடற்பயிற்சி, சுகாதாரம், அமைதி, சுற்றுச்சூழல், ஒழுக்கம், வாழ்க்கை, தொழிநுட்ப கல்வி என கற்று கொடுக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு தனிப் பட்ட கவனம் தேவைப்படும். அப்படிப் பட்ட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அக்குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளை அரசே ஏற்க வேண்டும். கல்விச் சூழலை மாற்ற கல்வி நிலையங்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு:

1950ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட போது ஷரத்து 45ன் படி அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளில், 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும், கட்டாய இலவச கல்வி வழங்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. அரசியல் சாசனத்தின் 21(ஏ) பிரிவில் கல்வி பெறும் உரிமை குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிஜேபி ஆட்சிக் காலத்தில் 86 வது அரசியல் சாசன திருத்தத்தின் மூல்ம் 6முதல் 14 வயது வரை இலவச கல்வி என்று கொண்டு வந்தனர். இதன் மூலம் மழலையர் கல்வியை கேள்விக் குள்ளாக்கினார்கள். 1 முதல் 18 வயது வரை குழந்தை கள் என வரையறை செய்யப்படுகிறது. 14 வயது வரை மட்டுமே இலவச கல்வி என்றால் குழந்தைகல்வி உரிமை என்பது என்ன ஆவது. இன்று இந்தியாவில் 10 சதம் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். 90 சதம் குழந்தைகள் மேற்கல்விக்கு வருவதில்லை, அது குறித்த ஆய்வுகள் தேவை. ஒடுக்கப்பட்ட மக்கள் தான் உழைப்பை செலுத்தும் மக்களாக உள்ளனர். இன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சத் தான ஊட்ட சத்துக்கள் மறுக்கப்படுகிறது. மழலையர் களுக்கு தரமான ஆரம்பகல்வியும் மறுக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சி என்பது அதன் ஆரம்ப காலத்தில் சத்தான உணவும், தரமான கல்விச் சூழலும், கல்வி வழங்குவதுமாகும். ஆனால் இவற்றை திட்டமிட்டு மறுத்துவிட்டு பிரதமரும், கல்வி அமைச்சரும் புலம்புகின்றனர். சமமும் சீரும் இல்லாத சட்டத்திற்கு இன்று சமச்சீர் கல்வி சட்டம் என அழைக்கப்படுகிறது. கல்வி உரிமை இல்லை என்று சொல்ல ஒரு கல்வி உரிமைச் சட்டம். அரசியல் சட்டத்தின் முகவுரைக்கு எதிராக 86 வது அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று கல்வியில் பிரைவேட், பொது, மற்றும் பார்ட்னர்சிப் மூலம் ( பிபிபி) வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கல்வி உரிமை சட்டத்தை யுனிசெப் வரவேற்கிறது. பல நாடுகளில் இதை வரவேற்பது அந்தந்த நாட்டுகளை பெருக்கி கொள்ளதான். மில்லேனியம் ஆண்டில் குழந்தைக்கான வரையறை 18 வயது வரை என அமெ ரிக்காவின் முனமொழிவோடு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 வரையான கல்வி ஆரம்ப கல்வி என்றும், 6 முதல் 8 வரை நடுநிலைக் கல்வி இரண்டாவது நிலைக் கல்வி என அழைக்கப்படு கிறது. இதில் பிஜேபி அரசு செய்தது 1 முதல் 8 வரைக் கான கல்விக்கே அரசு பொறுப்பு என அறிவித்தது. மழ லையர் கல்வியை கண்டுகொள்ளவில்லை. மேல்நிலை கல்வியையும் கண்டு கொள்ளவில்லை.

மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் கல்வி கற்பதை வளர்ந்த ஏகாதிபத்திய, மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை, மூன்றாம் உலக நாடுகளில் கல்வி மறுக்கப்பட்டால்தான் அடிமைகள் கிடைப்பார்கள்.

கல்வி உரிமைச்சட்டம் சொல்வது என்னவென்றால். 60 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்களும், 200 மாணவர்கள் இருந்தால் 5 ஆசிரியர்களும்இருப்பார்கள். பாடவாரியாக ஆசிரியர் கிடையாது. இசை, ஒவியம், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். பொது வாக இச்சட்டம் குறித்த பார்வையில் காங்கிரஸ் பிஜேபி இரண்டு கட்சிகளின் முகம் தான் வேறு, சிந்தனை ஒன்றே ஆகும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண் டர்சனுக்கு வழக்காடியவர்தான் சிதம்பரம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழக்காடியவர் கபில்சிபல், உலக வங்கி மேசையில் அமர்ந்து பணி செய்தவர்தான் பிரதமர் மன்மோகன்சிங் இவர்களால் எப்படி குழந்தைகளுக்கான முழுமையான சட்டம் வரும்?

இச்சட்டத்தில் பெற்றோர்கள் நிர்வாகத்தினை நிர்வாகிக்க நிர்வாகக்குழு அமைக்கவேண்டும் அதில் 70 சதம் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். அதில் 50 சதம் பெண்கள் இருக்க வேண்டும. 25 சதம் ஏழை குழந்தை களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணங்கள் கேட்கக் கூடாது. இருந்த போதும் இது போன்ற சட்டங்கள் வருவதற்கான போராட்டத்தை நடத்தி யதில் மாணவர், வாலிபர் சங்கங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. அரசின் பொறுப்பில் கல்வித்துறை இருந்தால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். கிராமத்தில் வேலை செய்ய மருத்துவர் இன்று இல்லை. காரணம் தாய் மொழியில் மருத்துவம் படிக்க ஏற்பாடு இல்லை. இத னால் பெரும் பகுதி மருத்துவர்கள் நகர்புறம் சார்ந்தே பணியாற்றும் நிலை உள்ளது. எனவே தாய்மொழிகல்வி, அருகமைப்பள்ளி, அரசுப்பள்ளியாகவே இருப்பது நல்லது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்த போது நோய் தடுப்பு மையங்களை மூடினார். அந்த மைங்களை திறப்பதற்கான போராட் டத்தை நடத்தி திறக்க வைத்த அமைப்பு டிஒய்எப்ஐ. அதுபோல் இந்த கல்வி உரிமைச்சட்டத்தில் முறைகேடு இல்லாமல் முறையாக அமலாகவும், கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிரான சட்டத்தை முறையாக நடை முறைப்படுத்தவும் உரிய போராட்டங்களை தொடர்ந்து டிஒய்எப்ஐ , எஸ்எப்ஐ அமைப்புகள் நடத்திட வேண்டும் என கூறினார்.

Pin It