எங்கள் தெருவில்
ஓர் அரசமரம் உண்டு.
நான் பார்த்திராத‌
என் தாத்தா பாட்டியை
அது பார்த்ததுண்டு.

நான் பார்த்திராத‌
எங்கள் வீதியில்
ஒரு காலத்தில்
வாழ்ந்து இறந்த‌
தேவதாசியின் நாட்டியத்தை
அது கண்டதுண்டு.

வெள்ளம், கொலை,பேய்
என அனைத்தும்
அது அறிந்ததுண்டு.

இவ்வ‌ள‌வு தெரிந்தும்
எப்போதும் அமைதியாகவே
நிற்கிற‌து.

0

வ‌ண்ண‌ மீன்


தொட்டியின்
நீள‌ அக‌ல‌ங்க‌ளை
வெகு நாட்க‌ளாய்
அள‌ந்து கொண்டிருக்கிற‌து
ஒரு வ‌ண்ண‌ மீன்.

Pin It