[குறிப்பு : தமிழ்நாட்டில் பேராய, திராவிடக் கட்சிகளின் இந்திய தேசிய, திராவிடத் தேசியக் கருத்தியலுக்கு மாற்றாக தமிழ்த் தேசியம் என்னும் கருத்தாக்கத்தை நிறுவியவர் ம.பொ.சி. தமிழ், தமிழகம், தமிழர் உரிமைக்கெனவே வாழ்நாள் முழுவதும் உழைத்தவர், போராடியவர். சென்னை மாநகரை, ஆந்திரர்கள் கைப்பற்ற முயன்றபோது, அது பறிபோக விடாமல் மீட்டு தமிழர்களுக்குத் தந்தவர். இப்படிப்பட்ட இன்னும் பல்வேறுவிதப் பெருமைகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் உரிய ம.பொ.சி. தமிழக வரலாற்றில் முற்றாக மறைக்கப்பட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டும், இன்றைய இளம் தலைமுறையினர்க்கு அவர் யார் என்றே தெரியாதிருந்து வரும் சூழலில், அவருடைய பழைய படைப்புகளை தமிழுலகு அறியச் செய்யும் முயற்சியில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் புதிய தெம்போடும் புரிதலோடும் முகிழ்த்து வரும் தமிழ்த் தேசியச் சிந்தனை இந்தத் தேவையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிந்தனைதான் சென்னையை மீட்ட ம.பொ.சி.க்கு சென்னையில் சிலை வைக்கும் கோரிக்கையையும் முன் வைத்தது. அது நீண்டகால தாமதத்துக்குப் பிறகு தற்போது நிறைவேறியுள்ளது.

ம.பொ.சி.யின் இரத்த உறவு வாரிசுகள் எனப் பலர் இருந்த போதிலும், தனக்குப் பிறகு தன் சிந்தனைகளைக் கொண்டு செல்பவர் யாராக இருப்பார் என்ற கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கையில், எனக்குப் பின் என் சிந்தனைகளைப் ‘பரமு’தான் கொண்டு செல்வார் எனப் பதிலிறுத்திருக்கிறார். அப்படி ம.பொ.சி.யால் செல்லமாக ‘பரமு’ என்று அழைக்கப்பட்டவரும், ம.பொ.சி.யின் மகன் திருஞானத்தின் வழிப் பெயர்த்தியுமான தி.பரமேஸ்வரி, உத்திரமேரூர் அருகே மானாம்பதி அரசு மேநிலைப் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கவிதைகள், கட்டுரைகள் வழி தன் கலையார்வத்தை வெளிப்படுத்தும் இவர் சிலை திறப்பு நிகழ்வின் மீதான தனது உணர்வுகளை இங்கே பதிவு செய்கிறார்.] 

பொத்தான் அழுத்தப்பட்ட தும் திரை மெல்ல உயரத் தொடங்கி யது. மனம் ஒரு புள்ளியில் லயித்து மௌனித்தது. சிந்தனையற்று உற்று நோக்கிய கண்களுக்குச் சிலை துலக்க மாகத் தெரியத் தொடங்கியதொரு கணத்தில் மறைந்தது. பனித்திரை படர்ந்தது. என்னையறியாமல் விழி களில் அமிழ்தமெனக் கண்ணீர் பெருக் கெடுத்தது. எத்தனை முயற்சி! எத் தனை பேரின் ஆர்வம்! எத்தனை நாள் தவம்!

எனக்கு முன்னமிருந்தே குரல் கொடுக்கத் தொடங்கிய எம் மூத்தவர் களைச் சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன். வடவென்னை மா. பொ. சி. நற்பணிப் பேரவையிலிருந்து திரு. சுந்தரபாபு மனுக்கள் பல அனுப்பி, அதற்காக அலைந்து, ஜூனியர் விகடன் இதழில் சிலை தொடர்பான ஒரு பேட்டியில் மனம் குமுறியிருக்கிறார். அதுமட்டு மின்றி, தன் தனித்த முயற்சியில் தாத்தா, தொடக்க காலத்தில் வாழ்ந்த வட சென்னையில் சிலை வைக்கும் எண் ணத்தில் இருப்பவர்

குரோம்பேட்டையில் தீவிரமாக இயங்கி வரும் சிலப்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி தமிழ்ப்பேரவை யின் திரு. இராமானுஜன் ஒவ்வொரு ஆண்டும் தாத்தாவை நினைவுகூர்ந்து சிறப்பாக விழா நடத்துபவர்கள்; அங்கே மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்பவர்கள்...

அண்ணா நகரில் தெய்வ நெறி மையம் நடத்தும் திரு. சூர்யசந்தி ரானந்தா, தொடர்ச்சியாக ம.பொ. சி.க்கு மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்ட வீரர்களையும் நினைவு கூர்ந்து இன்றும் தொடர்ந்து விழா நடத்துபவர்.

சோளிங்கரிலிருந்து எங்களுக்கு அவ்வப்போது மடல் எழுதும் கொண் டபாளையம் திரு. ரங்கநாதன், கடிதத் தோடு நிற்காமல் எம்.எல்.ஏ. போன்ற அரசு இயந்திரத்தின் வெவ்வேறு பாகங் களுக்குத் தவறாமல் கடிதங்கள் மூலை சிலையை நினைவூட்டி வந்தவர்.

ம.பொ.சி. நூற்றாண்டு விழா நடத்திய நாங்கள் முயற்சித்து முடி யாமல் கைவிட்ட விழா மலர் வெளி யிடும் பணியை, தனியருவராகவே நின்று தாத்தாவின் மணிமொழிகளைத் தொகுத்து விழா மலராக வெளியிட்ட தேப்பெருமாநல்லூர் திரு. உப்பிலி. அவருக்கு உதவிய அவருடைய மகன்

திரு. நரசிம்மன்...

இன்னும் வெவ்வேறு ஊர் களில் இருந்து சிலை வைப்பது தொடர்பாகவே பேசிய, இயங்கிய, போராடிய, வருந்திய உள்ளங்கள¢ ஓராயிரம். அவர்கள் அத்துணை பேரையும் இந்த நேரத்தில் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறேன். ம.பொ.சி. இந்த மூன்றெழுத்தில் தமிழகத்தின் அரை நூற்றாண்டு வர லாறு அடங்கி இருக்கிறது. செய்த சாத னைகள், நடத்திய போராட்டங்கள், முழங்கிய முழக்கங்கள், அவருடைய எழுத்துகள், ஏன் சறுக்கல்களையும் கூடப் பேசிக் கொண்டே போகலாம். அந்த மாமனிதருடைய நூற்றாண்டு விழா 2006-இல் நெருங்கியபோது, எங்கள் குடும்பத்தார் விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று முடிவு செய்தனர். அப்படி முன்னெடுக்கப் பட்டு, முடிவெடுக்கப்பட்டபோதே தவிர்க்கமுடியாமல் எங்கள் முன் னெழுந்த பெயர் கலைஞர் கருணாநிதி. அவருடைய சொற்களிலேயே சொல்ல வேண்டுமானால், ஆயிரம் முரண்கள் இருப்பினும் கூடப் பல காலம் இணைந்து செயல்பட்டவர்கள்; போற் றியும் தூற்றியும் கொண்டவர்கள்.

இந்த இடத்தில் அய்யா பெ.சு. மணி, திரு. சின்னக்குத்தூசி ஆகியோருக்கு நிச்சயமாக நாங்கள் நன்றி பாராட்ட வேண்டும். முதல்வர் கலைஞர் அவர்களை அணுகி அழைக்க உதவியவர்கள். அவர்களின் உதவியின்றி ம.பொ.சி. நூற்றாண்டு விழா அத்துணை கோலாகலமாகச் சாத்தியப் பட்டிருக்காது.

மிகச் சிறப்பாக நடந்த விழாவில் முதல்வர் அவர்கள் நாங்கள் மனம் மகிழும்படியாக ம.பொ.சி.யின் நூல்களை நாட்டுடைமையாக்குதல், அஞ்சல் தலை வெளியிடுதல், சென்னை நகரின் மையமான ஒரு இடத்தில் சிலை நிறுவுதல் என்ற எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அந்த விழாவிலேயே அதனை அறிவிப் பாகவும் வெளியிட்டார். ம.பொ. சியின் நூல்கள் நாட்டுடடைமை யாக்கப்பட்டு, ரூ.20 லட்சம் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆகஸ்டு 15 அன்று சென்னை கோட் டையில் ம.பொ.சி. நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. சிலைக் கான பணியும் தொடங்கப்பட்டு விட்டதாகக் கேள்விப்பட்டு அக மகிழ்ந்தோம்.

இடையில் தம்பிகள் திரு ஞானம். ஞானசிவம் இருவரும் சிலை யைப் பார்த்து ஆலோசனையும் வழங்கிவிட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட புழுதிப் பரப்பொன்று கண் களை மறைத்தது போல் பிறகு சிலை பற்றிய செய்தியும் மறைந்து, மறந்து போனது. எங்களுக்குள் பேசினோம்; பரிதவித்தோம்; காலணாத் தொண்டர் களென்று பிற கட்சியினரால் அன்று கேலி பேசப்பட்ட, எங்கள் உறுப்பினர் களாகவே நாங்கள் கருதும் எங்கள் தமிழரசுக் கழகத் தோழர்கள் எங்களை விடவும் மிக அதிகமாக வேதனைப் பட்டனர்.

பிறகு தொடங்கியது மனு யுத்தம்; ஓயாத நினைவூட்டல். தின மணியில் எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்தபோது சென்னையில் வைக்கப்பட வேண்டிய மா.பொ.சி சிலையை எனது கட்டுரையின் மூலப் பொருளாகக் கொண்டேன். அக்கட் டுரை மண்மொழியிலும் தோழர் இராசேந்திர சோழனால் மீள் பதிவு செய்யப்பட்டது. எழுத்தாளர் பிர பஞ்சன், குடும்ப நண்பர் கோபாலபுரம் செல்வதுரை ஆகியோரும் அவர்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண் டனர்.

பிறகு ஏற்பட்டதொரு நீண்ட அமைதிக்குப் பிறகு, கவிஞர் அமுத கீதன், திரு. எக்பெர்ட் சச்சிதானந்தம், காஞ்சி அமுதன் ஆகியோரின் முயற்சி யின் பேரில் அவர்கள் தொடங்கியுள்ள இலக்கியக் களம் என்னும் அமைப்பின் மூலம் காஞ்சிபுரத்தில் ம.பொ.சி.- நாம் அறிந்ததும் அறியாததும் என்னும் தலைப்பின் கீழ் அரைநாள் கருத்தரங்க மொன்றை நடத்தினர்.

பின்னர் தோழர் யுவபாரதி மூலமாக, என்னுடைய வலைப்பூவைப் படித்த தோழர் வெற்றிவேலின் உறு துணையுடன் நண்பர் ஆனந்த் செல் லையா மனம் வருந்தும் ம.பொ.சி குடும்பத்தைக் குமுதத்தில் வெளிச்ச மிட்டுக் காட்ட, மாயமானதொரு காட்சி போல் அடுத்த சில நாட்களில் சிலை பற்றிய அறிவிப்பினை அரசு வெளியிட்டது. ஆனந்த அதிர்ச்சி. அதிர்ச்சிக் கடல் என எத்தனைச் சொற்களை இட்டு நிரப்பினாலும் அந்த நேரத்து என்னுடைய மகிழ்ச் சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

09.02.11 அன்று சிலை திறப்பு என்ற அறிவிப்பு வெளியான கணத்தில் என் அலைபேசி அழைப்புகளாலும் குறுஞ்செய்திகளாலும் நிரம்பியது. கிண்டி, விவேகானந்தர் இல்லம் எனப் பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப் பட்டுத் திடீரென்று தி.நகர்- போக் ரோடு சந்திப்பில் என்று அந்த அறி விப்பு சொன்னது. பணிபுரியும் இடத் துக்கும் சென்னைக்குமான இடை வெளி தொடர்ந்த என் பயணங்களால் நிரப்பப்பட்டது. சென்னையின் அனல் என்னைப் பொறுத்தவரை மறைந்த குளிர் பனியென மனது நிரம்பித் தளும்பத் தொடங்கியது. அந்த நாளும் வந்திடாதோ என்று நான் ஏங்கிய அந்த நாளும் வந்தது. மனம் என் வீட்டில், என்னிடம் இல்லாமல் எனக்கு முன்னரே தி. நகருக்குப் பயணப்பட்டு விட்டது.

அரசின் சடங்கு, சம்பிரதாயங் கள் ஒவ்வொன்றாய் நிறைவேறின. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், அமைச்சர் பெருமக்கள், நகரத்தின் முக்கிய மனிதர்களென விழா நடக்குமிடம் நிரம்பியது. பின் னால் ஒரு மக்கள் கூட்டம் குழுமம் தொடங்கியது. தாத்தாவின் நண் பர்கள், அன்பர்கள் என ஒவ்வொரு வராய் வரத் தொடங்கினார். நான் அங்கே இருந்தேன்; அங்கே இல்லை. ஒவ்வொருவருடனும் பேசினேன், கை குலுக்கினேன், வணங்கினேன். எதை யும் செய்யாமல் உட்கார்ந்துமிருந் தேன். ஏதோ ஒன்று என்னிலிருந்து பிரிந்து, மறைக்கப்பட்டு, அலங்கரிக்கப் பட்டிருந்த சிலைக்குள் சென்று விட்டது.

முதல்வர் வந்து, பெருமக்கள் உரையாற்றிய பின் சிலை வெளிப் படையாய்த் திறந்து வைக்கப்பட்டது. கண்கள் பெருக்கெடுக்கத் தொடங் கியது. மனம் விம்மியது. மறைந்த என் தந்தை ம.சி.திருநாவுக்கரசுவை நினைத்துக் கொண்டேன். சில்லிட் டிருந்த என் கரங்கள் கண்மலர்களைத் தாங்கிக்கொண்டது. நான் அவ்விடத் தில் என் தாத்தாவுடன் வழக்கம்போல் பேசியபடி இருப்பது போன்றதொரு உணர்வு.

என் வாழ்வின் பொருளில் ஒரு பாதியை நான் அடைந்து விட்டதான எண்ணம்; மகிழ்ச்சி; மனம் ஆனந்தப் பெருக்கில் லயித்தபடி; நானும் என் தாத்தாவும்.

Pin It