அன்னையவள் அடிவயிற்றில்
அலுமினிய குண்டு துளைத்தபோதும்
அவள் குருதி சிந்தி
குற்றுயிராய் தவித்தபோதும்
கூக்குரலிட்டு அழவில்லை
பச்சிளங் குழந்தையது
பாலுக்கு ஏங்கி அழுதபோதும்
முலையிருந்தும் முடிச்சவிழ்க்க முடியாது
மூச்சடக்கி மார்பில்
முழலையவன் முகம் புதைத்தேன்
முடிந்தது குண்டு முழக்கம் மட்டுமில்லை
முத்துப் பிள்ளையிவன்
மூச்சுக் காற்றும் தான்
கண்னே நீயும் கதறி அழுதிருந்தால்
கர்ப்பினி உன் அன்னை நானும்
கண்டியிலே கற்பிழந்திருப்பேன்
தாய் மானம் காத்திட என் தங்கமே
காவல் தெய்வம் நீ எனக்கு
காத்திருப்பேன் உன் வரவிற்கு
என் கருவறையில் மீண்டும்
நீ உதிப்பதற்கு...
RSS feed for comments to this post