இராஜபாளையத்தில் நடைபெற்ற மாநாட்டு நிறைவு பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் தா.பாண்டியன் பேசியதாவது,

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைளோடு, அந்நிய நாடுகளின் ஏவுகனைகளை குறுக்கே பாயந்து தடுக்கும் ஏவுகனைகளையும் இந்தியாவில் தயாரித்துள்ளனா. ஆனால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டு, கொல்லப்படும்போது இந்த ஏவுகனைகள் எங்கே போனது. மனித குலத்தின் எதிரியான ராஜபக்÷க்ஷவோடு சேர்ந்து ஈழத்தில் தமிழ் மக்களை கொன்றனா?. மத்திய காங்கிரஸ், திமுக அரசுகள் மக்கள் விரோத அரசுகள் என பகிரங்கமாக அறிவிக்கிறோம். இடதுசாரி ஜனநாயக சக்திகள் இணைந்து போராடவேண்டும்.

parattu_370போட்டி போட்டு வீட்டில் விளக்கை அணைத்து வருகின்றனா?. கடந்த ஆட்சியில் தீர்வு காணத தால் தான் அனைவரும் சேர்ந்து ஆட்சியை மாற்றினோம். கூட்ட மேடையில் தலைவர் களோடு நம்பித்தான் வாக்குறுதிகளை அளித்தோம். ஆனால் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்யவேண்டும். தவறை சுட்டிகாட்டி பலவீனத்தை நியாயப்படுத்தக் கூடாது.

வாக்களிக்க லஞ்சம் கொடுப்பவர்களால் ஊழலை ஒழித்துவிடமுடியுமா? ஊழலுக்கு ஆட்படாத கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால் தான் ஊழலை ஒழிக்க முடியும். ஆற்று மணல்கள் இயற்கை படைத்தது. ஆனால் அதை கொள்ளையடிக்கிறார்கள். தென்னக நதிகளை இணைத்தால் ஒன்றரை கோடி ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும், குடிதண்ணிர் பிரச்னைக்கு வாய்ப்பில்லை.

வெளிநாட்டு வங்கிகளில் 45 லட்சம் கோடிக்கும் மேல் பணம் இருக்கும் என சிபிஐ இயக்குநர் தெரிவித்துள்ளார். சுரண்டல் போர் வழிகளை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இந்தியாவிலும், தமிழகத்திலும் மாற்றத்தை கொண்டுவர கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். மக்களின் கண்ணீரைத் துடைக்க கம்யூனிஸ்ட்  கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தும் என்றும் அவர் பேசினார்.

Pin It