இந்தியா நம் எதிரி நாடு! இந்தியர்கள் அனைவரும் நம் எதிரி! இந்திய விடுதலை நாள் நம் துக்க நாள்! எனும் முழக்கத்தோடு தமிழ் நாட்டை வென்றெடுக்க களத்தில் முனைப்புடன் செயலாற்றும் நாம், தோழர்களின் மரணத்தின் மூலமாக பல்வேறு அச்சுறுத்தல்களை இவ் ஏகாதிபத்திய அடிவருடிகள் வரலாற்றின் வழி எங்கும் பொதுமக்களுக்கு நிகழ்த்திக் காட்டிக் கொண்டே வருவதின் மூலமாக தேசிய இன விடுதலைக் கருத்தியலை பொதுமக்களின் மனம் நாடாமல் செய்யும் கருவியாகப் பயன்படுத்தி வருவதைக் காணலாம். அவற்றில் முதன்மையான தாக போலி மோதல் படுகொலையும், அரசப் பயங்கரவாதத்தின் மற்றொரு வகையான தூக்கு தண்டனையும் ஆகும்.

தற்போது போலி மோதல் படுகொலைக்கெதிராக பல்வேறு மனித உரிமை இயக்கங்களும், வழக்கு மன்றங்களும் தலையிட்டு போராடி கண்டிப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பூதம் எப்போது அரசதிகாரத்திற்கு தேவைப்படு கிறதோ அப்போது திடீரெனக் கிளம்பும். இது இவ்வாறிருக்க தற்போது உலகில் 136 நாடுகளில் தூக்குத் தண்டனையை நிறுத்தி விட்டாலும், இன்னமும் ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடி களும், அவர்களுக்கெதிராக பொதுமக்களும், போராளிகளும் கிளர்ந்தெழும்போது அவர்களை அச்சுறுத்தி அடக்குவதற்கு தூக்கு எனும் அரசப் படுகொலையை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு செய்யப்படும் கொலைகளில் ஒரு சிலவற்றின் உண்மைகளை அன்றைக்கு எவ்வாறு யார் யார் பார்த்தனர் என்றும் இன்று எவ்வாறு யார் யார் பார்க்கின்றனர் என்றும் பார்த்தோமானால் மிகவும் பிரமிப்பாகவும், தூக்கிலிடும்போது பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவார்கள்.

அதே நிகழ்வு காலம் மாறும்போது அவர் இன்றைய அரசு அமைப்பதற்கான போராளியாகவும் ஈகியர்களாகவும் வரலாற்றுப் பாட நாயகர்களாகவும் போற்றப்பட்டு கற்பிக்கப்படுவார்கள்.

ஆனால் அவ்வாறு போற்றப்படுகிற அந்த நாயகர்களின் வழியில் நாளைய அரசமைப்பதற்கும் பொதுமக்களின் உரிமைகள் பாதுகாத்து நிலைநிறுத் தப்பட வேண்டுமென்பதற்காகவும் இன்று அரச பயங்கரவாதிகள் உண்மையானவர்களைப் பயங்கர வாதிகளாகவும், தீண்டத்தாகதவராகவும் பொதுமக் களிடமிருந்து பிரித்து முந்தைய ஏகாதிபத்தியம் என்ன செய்ததோ அதையே இவர்களும் செய்கின்றனர்.

எடுத்துக்காட்டாக இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போரில் தனது இளம் வயதில் ஈடுபட்டு வெள்ளை அதிகாரியை தனது துமுக்கியால் சுட்டு வீழ்த்தி தனது 23ம் அகவையில் ஏகாதிபத்திய தூக்கு கயிறை முத்தமிட்ட தோழர்கள் திருவாளர்கள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோர் இன்று இந்திய ஒன்றியத்தில் ஒப்பற்ற விடுதலை வீரராகவும், உலகப் போராளிகள் போற்றப்படும் போராளியாகவும், போற்றப்படுகிறார்கள்.

ஆனால் இன்று ஈழத்தில் தங்கள் இன வழி தேசியத்திற்காக தனது வாழ் நாளை அர்ப்பணித்து போராடி வந்த தோழர்கள் சாந்தனும், முருகனும், தாயக தமிழகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவத் திலும் ஈடபடா நோக்குடன் தனது தலைமைக் கட்டளையை ஏற்று தமிழகம் வழியாக வெளிநாடு செல்ல வந்த சாந்தனும், பெயர் குழப்பத்தினாலும் (திருச்சியில் இறந்த சாந்தன் எனும் போராளியின் செயல்களையெல்லாம் இவர் மீது சுமத்தி சென்னை போன்ற ஒரு பெருநகரில் பழக வேண்டும் என்பதற்காக பயிற்சி யெடுக்க சென்னை வந்த முருகனும், திராவிட கழக மரபில் வந்து இயற்கையிலேயே தமிழ் தமிழர் ஆதரவாளராக வளர்ந்த ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டு இளைஞர் தோழர் பேரறிவாளனும் சோனியாவின் கணவன் இராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு மொத்தமாக 21 ஆண்டுகளாக தனிமைச் சிறை கொட்டடியில் அடைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். இந்திய ஒன்றியத்தின் குடியரசு தலைவர்களான திருவாளர்கள் கே.ஆர். நாராயணன், ஏ.பி.சே. அப்துல் கலாமாலும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து நடுவணரசு சிபாரிசை புறக்கணித்து தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பியனுப்பியதால் 2வது முறையாக ஏ.பி.சே. அப்துல் கலாமை குடியரசு தலைவராக தேர்ந் தெடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்பினாலும்,

எங்கு அவர் வந்தால் தங்களது ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று கருதி மராட்டிய மாநிலத்தி லிருந்து தங்கள் சொல்லைத் தட்டாத திருமதி பிரதீபா பாட்டீலை இந்திய ஒன்றியத்தின் முதல் மகளாக்கி அவரின் மூலம் தங்களின் ஆசையான நம் தோழர் களின் உயிரை சட்டத்தின் மூலம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கச் செய்து விட்டு அமெரிக்கா சென்று ஓய்வெடுத்துள்ளார்கள் தாய் சோனியாவும், மகன் இராகுலும். நாமோ தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து தூக்கு தண்டனையை நிறுத்தச் சொல்லியும், தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றச் சொல்லியும் கூக்குரலிடுகிறோம்.

கண்ணாடி மாளிகையில் இருக்கும் அவர்களுக்கு நம் கூக்குரல் எங்கே கேட்கப் போகிறது. மேலும் நம் எதிர்ப்பலையைக் கண்டு எங்கு திருவாளர், கலைஞர் அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் இன்று நேர்ந்துள்ள கதி நாளை நமக்கும் நம் தோழி குடும்பத்திற்கும் நேர்ந்துவிடக் கூடாது எனக் கருதி, பல்வேறு சட்ட நிபுணர்களும் தூக்கி நிறுத்த, இரத்து செய்ய தமிழக மக்கள் மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என பல சட்டப் பிரிவுகளையும், பல முன் மாதிரிகளையும் கூறியப் பிறகும், செவிடன் காதில் ஊதிய சங்காக தமிழக மக்கள் மன்றத்தின் விதி எண் 110 ன் கீழ் தனக்கு அதிகாரமில்லை எனும் பார்ப்பனிய நயவஞ்சகத்தோடு அறிவிக்கிறார் மாண்புமிகு செல்வி செயலலிதா அவர்கள்.

ஆனால் மறுநாளே நமது தோழி செல்வி செங்கொடி ஏற்றிய பெரு நெருப்பில் எங்கு நாம் எரிக்கப்பட்டு விடுவோமோ எனப் பயந்து சட்டமன்றத்தில் ஒப்புக்கு ஒரு தீர்மானம் போட்டு அனுப்பி விட்டு என் கடமை முடிந்து விட்டது என உட்கார்ந்து விட்டார். ஏனெனில் கடந்த காலங்களில் போட்ட தமிழக மக்கள் மன்றத் தீர்மானத்தின் மதிப்பு தெரியாதவரா அவர்.

ஆனால் அத் தீர்மானத்தை விட அமைச்சரவை தீர்மானம் மிக முக்கியம் என பல நிபுணர்கள் கூறிய போதிலும் அதைப் பற்றி இன்றுவரை வாய் திறக்க வில்லை. நாமும் ஒற்றை சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் விடிவு கிடைத்து விடும் என்றெண்ணி, அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டோம். இது போதாதா பார்ப்பன பனியா கும்பலுக்கு.

சரி கண்ணாடி மாளிகையில் மயக்கத்திலிருக்கம் கோமாளிகளிடமிருந்து நம் கண் முன்னே சாவின் விளிம்பில் இருக்கும் தோழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் உயிரையுமாகட்டும், அல்லது இனி வரும் காலங்களில் நம் தோழர்களின் உயிரை எடுக்க எவரும் எண்ணாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென சிந்தித்த வேளையில் கிடைத்த ஓர் தகவல் என்னவெனில்,

தோழர்கள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வெள்ளைய ஏகாதிபத்தியம் நாள் குறித்த செய்தி கேட்டவுடன் அவர்களின் உயிரை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்து கிளம்பிய மக்கள் பெரு வெள்ளம் ஏகாதிபத்திய அடக்கு முறைக் கருவிகளால் பலமான கருவியான சிறைக் கொட்டடி மதில் சுவர்களை தகர்த்து கொட்டடி இரும்புப் பூட்டுகளை சிதறடிக்கப் போகிறது எனும் செய்தி ஏகாதிபத்திய காதுகளை எட்டியவுடன், உடனே அவசர அவசரமாக தோழர்கள் மூவரையும் நயவஞ்சகமாகக் குறித்த நாளுக்கு முந்தைய மார்ச் 23ம் நாளில் தூக்கின் மூலம் கொலை செய்யப்பட்டனர். இது அன்று அவர்களுக்கு தண்டனை நமக்கு கொலை.

அதேதான் இன்று தோழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் நிலையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் சிறிது ஏமாந்தாலும் ஏமாற்றப்படுவோம். அதனால் தோழர்களே சிறைக் கொட்டியை நோக்கி பயணித்து அதன் மதில் களையும், திமிர்களையும் தகர்த்தெறிந்து நம் தோழர்களைக் காப்போம்.

சரி இது வன்முறை செயல் என்று சில அதி மேதாவிகள் பொய் அரசியல் பேசலாம். ஆனால் வரலாற்றின் அடிப்படையில் அது வன்முறையா என்றால் இல்லை. ஏன் இல்லை என்றால், இதை நாம் சொல்லவில்லை இந்திய ஏகாதிபத்திய மகாத்மா என்று போற்றப்படுகிற கரம்சந்த் மோகன்ராம் காந்தி அவர்கள் சொல்கிறார்கள். இதோ அவர் கூறுவதைப் பார்ப்போம்.

1942ம் ஆண்டு நடைபெற்ற ஆகத்துப் புரட்சிக்கு முன்பு தனது ஏடான அரிசனில் அகிம்சையின் தந்தை எனும் திருவாளர் காந்தி அவர்கள் திருவாய் மலர்ந்தது என்னவென்றால், முடிந்தவரை இப்போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவே நான் முயற்சிப் பேன். ஆனால் பிரிட்டிசு அரசை இப்போராட்டம் கவரத் தவறினால் அதன்பின் இந்தியாவில் நடைபெறுகின்ற காரியங்களுக்கு நான் பொறுப்பல்ல என்கிறார். அதே ஏட்டில் அவர்களின் மாணவரான திரு. கிசோரிலால் மக்ரூவாலா என்பவர் சதி செயல்களும், பாலங்களை தகர்ப்பதும், தந்தி தபால் தொடர்புகளை துண்டிப்பது சாத்வீக போராட்டத் திற்கு உட்பட்டது தான் என்று எழுதுகிறார்.

ஆகத்து 7ல் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் திருவாளர் காந்தி அவர்கள் அரசு என்னை முன் கூட்டியே கைது செய்தால் பலாத்கார செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடித்தெழும். வன்முறை புரட்சி ஏற்பட்டால் நான் அதைக் கட்டுப்படுத்த மாட்டேன் என்றும் மேலும் நியூசு(ஸ்) கிரானிக்கல் எனும் பத்திரிகையில் பொதுமக்கள் இயக்கத்தில் வன்முறை போராட்டங்கள் உட்பட்டவைதான் அங்கீகரிக்கப்பட் டவைதான் என உறுதிபட கூறுகிறார்.

மேலும் காந்தியின் நெருங்கிய நண்பர் பட்டாபி சீத்தாரமையா ஆந்திர சுற்றறிக்கை எனும் ஓர் அறிக்கையை அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பி அதில் கூறப்பட்டுள்ள போராட்ட வழிமுறைகளான தந்தி கம்பிகளை அறுக்கவும், தபால் நிலையங்களை கைப்பற்றவும், தண்டவாளங்களையும், பாலங்களை யும் வெடி வைத்து தகர்க்கவும் எனவும், அதை அனுமதிக்குமாறும் காங்கிரசு தலைவர்களுக்கு அனுப்பினார்.

ஆகத்து 8 அன்று காந்தி கைது செய்யப்பட்டவுடன் கோவை விமான நிலையம் கொளுத்தப்பட்டன. காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. தாலுகா அலுவ லகங்கள், தொடர் வண்டி நிலையங்கள் கைப்பற்றப் பட்டன. வழக்கு மன்றங்கள் கைப்பற்றப்பட்டு வெள்ளைய நடுவர்கள் துரத்தப்பட்டனர். போராட்ட வீரர்களே நடுவர்களாக அமர்ந்து வெள்ளை நடுவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரித்தனர். வீடுகள் தோறும் வெடிகுண்டுகள் தயாராயின.

கொல்லு பட்டறையில் துமுக்கிகள் தயாரிக்கப் பட்டு போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. தந்திக் கம்பங்கள் தபால் அலுவலகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பெருமைமிகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மன்றத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. அவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறைக் கொட்டடி மதில்கள் உடைக்கப்பட்டு கொட்டடி இரும்புக் கம்பிகள் தகர்க்கப்பட்டு போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆக ஒரு இன விடுதலைப் போராட்டத்தில் பொய்யான நவீன பார்ப்பனர்கள் பேசும் அகிம்சை வழிப் போராட்டத்தினால் நம் தேச விடுதலையும் கண் முன் உள்ள தோழர்களையும், இனிவரும் தோழர்களையும் காக்க முடியாது. அவ்வாறு காக்கத் தவறினால் நம் போராட்டத்தை நடத்தவோ, இலக்கை அடையவோ முடியாது.

ஆகவே தோழர், தமிழரசன் வழிகாட்டியுள்ளார் என்று கூறி தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பிக்க ஓர் வழியை மகா ஆத்மா வழங்கி உள்ளது. ஆகவே மேலே அவர் காட்டிய சிறை உடைப்பு தகர்ப்புப் போராட்டத்தினால் நமது நாட்டை நமதாக்கி, நம் விடுதலைப் பூட்டை நாமே திறப்போம்.

தோழர்களே! விடுதலை என்பது கெஞ்சி பெறுவதில்லை. மிஞ்சி பெறுவது எனும் தொடரை நெஞ்சிலேற்றி விடுதலை கனலை மூட்டுவோம்! மூன்று தமிழர் உயிரை மீட்போம்!