கடந்த 2007ம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க மக்கா மஸ்ஜித்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக் கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன் னாள் உறுப்பினர்கள் இருவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் கீழ் கோர்ட் ஒன்றில் வழங்கப்பட்ட பிணையை கடந்த வியாழன் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களான லோகேஷ் சர்மா மற்றும் தேவேந் தர் குப்தா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்ட பிணையை செசன்ஸ் கோர்ட் மறு ஆய்வு செய்யவும் ஆந்திர உயர் நீதிமன் றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தேசிய புலனாய்வு நிறுவ னத்திற்கு ஒரு நிம்மதியை ஏற்படுத் தியுள்ளது என்றால் அது மிகையா காது. ஏனெனில் கீழ் கோர்ட்டின் பிணை விடுதலை தேசிய புல னாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ. அந்த குண்டு வெடிப்பு சம்மந்த மாக நடந்து வரும் புலன் விசார ணையை இந்த தீர்ப்பு பாதிக்கும் என்று முன்பு எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய புலனாய்வு அமைப்பு கூறும்போது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மாலே கான், அஜ்மீர் மற்றும் சம்ஜவ்தா விரைவு ரயில் போன்ற பிற குண்டு வெடிப்பு தீவிரவாத செயல்களி லும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் இவர்கள் இரு வரையும் பிணையில் விடுவதென் பது மேற்கூறப்பட்ட வழக்குகளி லும் பெரும் பின்னடைவை ஏற்ப டுத்திவிடும் என் றும் வாதித்தது.

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மக்கா மஸ்ஜித்தில் கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் கொல் லப்பட்டனர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

மேலும் ஆந்திராவின் உயர் நீதிமன்றம் கடந்த டிச. 24, 2012 அன்று செசன்ஸ் கோர்ட் வழங் கிய தீர்ப்பையும் தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னாள் உறுப்பினர்களான ஷர்மா மற்றும் குப்தாவோடு சேர்த்து சுவாமி அசி மானந்த் மோகன்லால் ரத்தேஸ் வர், தேஜாராம், ராஜேந்தர் சவுத்ரி ஆகியோரும் புலனாய்வு அமைப் பால் கைது செய்யப்பட்டு நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டுள் ளனர்.

மேலும், சந்தீப் வி. டாங்கே மற்றும் ராமச்சந்திர கல்சங்கரா ஆகிய இருவரும் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். மேலும், இதே வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் கடந்த டிசம்பர் 2007ல் தனது சகாக்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pin It