சி.எப்.எல். பல்புகள் பளிச்சென்ற வெளிச்சத்துடன் மின்சாரத்தை சேமிக்கும் என்றாலும் அதில் மிகப் பெரிய ஆபத்தும் மறைந்திருக்கிறது. இந்த பல்புகளின் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் பொருட் கள் மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது.

இந்த சி.எப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்து விட் டால் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை சில முன்னெச்ச ரிக்கை டிப்ஸ்களை வெளியிட்டி ருக்கிறது.

சி.எப்.எல். பல்பு  உடைந்தால் உடனே அந்த இடத்தை விட்டு  வெளியேறி விட வேண்டும். ஏனென்றால், இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்குரி திரவம், ஆர்சானிக் மற்றும் துத்தநாகத்தை விட அதிக விஷத்தன்மை வாய்ந்தது.

இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது இந்த திரவம் சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலை வலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படும்.

அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படும்.

பல்புகள் உடைந்தால் செய்ய வேண்டியது என்ன?

உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும். அந்த நெடியை சுவாசிக்கக் கூடாது. பல்பு உடைந்து 15 நிமிடங்கள் ஆன பின் அப்புறப்படுத்தலாம்.

நொறுங்கிக் கிடக்கும் கண் ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேக்வம் கிளீனரால் சுத்தப்ப டுத்தக் கூடாது. அதன் துகள்கள் வேக்வமால் உறிஞ்சப்பட்டால் அது உள்ளே ஒட்டிக் கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது அந்தத் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோச மான உடல் உபாதைகளை ஏற்ப டுத்தி விடும்.

கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக் கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்த வேண்டும்.

உடைந்த துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, "சீல்' செய்யவும். சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் கார்ப்பரேஷன் ரீ சைக்ளிங் குப்பைத் தொட்டியில் கொண்டு சேர்த்தால், அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்து வார்கள்.

Pin It