உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள சுமார் 5 நீதிபதி பதவிகளை நிரப்ப, உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் (Collegium) என்ற நான்கு மூத்த நீதிபதிகள் அமர்ந்து, நான்கு நீதிபதிகளை பரிந்துரைத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒவ்வொரு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகளாக (Chief Justices in many Highcourt) பணியாற்றுகிறவர்கள். இவர்களில் தாழ்த்தப்பட்ட சிறுபான்மை வகுப்பினைச் சேர்ந்த, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மிகவும் திறம்படப் பணியாற்றியவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய மூத்த நீதிபதிகளில் ஒருவருமான ஜஸ்டிஸ் திரு. பி.டி. தினகரன் அவர்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலத் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று சிறப்பாக பணிபுரியும் நிலையில், பணிமூப்பு மற்றும் திறமையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்திருக்கின்றது.
வீண்பழி சுமத்தும் பார்ப்பனர்கள்
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நுழைய முடியாத கோயில் கர்ப்பக்கிரகம் போல வைத்திருந்த உச்ச நீதிமன்றத்தின் தன்மை மாறுகிறதே, தம் இனத்தவருக்கு உள்ள ஏகபோகம் குறைகிறதே என்பதற்காக வீண் பழி தூற்றி, சேற்றை வாரி இறைத்து ஜஸ்டிஸ் பி.டி. தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் போகாமல் தடுப்பது எப்படி என்பதில் பார்ப்பனக் கூட்டம் அவர்களில் சில உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சில ஊடகங்கள், ஆங்கில, தமிழ் நாளேடுகள், வார ஏடுகள் ஈடுபட்டுள்ளன.
சாந்திபூஷன் என்ற டில்லியில் வாழும் ஒரு பார்ப்பன வழக்கறிஞர் இதை தனது பெரும் பணியாக எடுத்துக்கொண்டு, அளவுக்கு மீறி நீதியரசர் தினகரன் சொத்து சேர்த்தார் என்று ஒரு பொய்க் குற்றச்சாற்றை, வீண் பழியை அள்ளி வீசி, அவரது நியமனத்திற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் என்பதால், இன்னமும் அவாளின் வெறுப்புப் போகவில்லையே! அவர்மீது ஆதாரபூர்வமாக_ அவர் லஞ்சம் வாங்கினார் என்றோ, ஒழுக்கக்கேடாக நடந்து சொத்து சேர்த்தார் என்றோ நிரூபிக்க முடியுமா?
பார்ப்பனர்களின் உள்நோக்கம்
அவருக்குள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை, 48 ஏக்கர் நிலங்கள் அவரது பூர்வீக சொத்து அதன் விரிவாக்கம் குறித்து அவரே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து சொத்து விவரங்களை அளித்து, அவரது வங்கிக் கணக்குகள் முதலியவற்றை ஆதாரபூர்வமாக நேரில் விளக்கி தன்மீது வேண்டுமென்றே அபாண்டமாகக் குற்றச்சாற்றுகளை ஒரு சிலர் கூறுகின்றனர் என்று கூறியுள்ளதோடு, தான் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, எந்த சொத்தும் சேர்க்கவில்லை என்றும் திட்டவட்டமாக குற்றச்சாற்றுகளை மறுத்துள்ளார். அவரது சொத்து விவரங்கள் குறித்து பெங்களூர் மிரர் என்ற ஆங்கில ஏட்டின் இணைய தளத்தில் வெளியான தகவல் தனியே தரப்பட்டுள்ளது.
இவர்களது உள்நோக்கம், அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக வராமல் தடுத்தால், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு பார்ப்பன நீதிபதிக்கு அதுவும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்ற ஒரு காரணத்தைக் காட்டி, சீனியாரிட்டியில் 5 ஆவது, 6 ஆவது இடத்தில் உள்ளவர், மற்ற உயர்நீதிமன்ற பெண் நீதிபதிகளின் சீனியாரிட்டியைவிடக் குறைந்தவர் இவர் என்ற போதிலும், ஒரு பகீரதப் பிரயத்தனம் நடக்கிறது போலும் என்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
சாந்திபூஷன் என்ற பார்ப்பனரின் அபாண்ட பழி
சாந்தி பூஷன் என்ற உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், மிக மோசமான ஒரு குற்றச்சாற்றை வீசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் (17.9.2009) வெளிவந்துள்ள செய்தியை அப்படியே தருகிறோம்.
Former law minister Shanti Bhushan on wednesday (16.9.2009) delivered a below: the beltremark when he accused the CJI (ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன்) of having a “soft corner’’ for Dinakaran as like him, the Karnataka CJ was also a “Dalit’’.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரான சாந்திபூஷன் மிகவும் நியாயமற்ற ஒரு குற்றசாற்றினை புதன்கிழமை அன்று (16.9.2009) கூறினார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன்) ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் (தலித்) என்பதால், மற்றொரு தலித்தான பி.டி. தினகரன்மீது மிகவும் ஆதரவான போக்கைக் கடைபிடிக்கிறார் என்று கூறியுள்ளார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 17.9.2009 சென்னை பதிப்பு, பக்கம் 11).
இது எவ்வளவு மோசமான உள்நோக்கம் கொண்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாற்று? ஒரு கல்லில் இரண்டு பறவைகளைக் கொல்லுவது போன்ற செயல் அல்லவா?
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கவேண்டிய ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களைத் தடுத்துத் தடுத்துப் பார்த்து அதையும் மீறி அவர் அப்பொறுப்பேற்றவுடன், அவர்மீதும் இதே கூட்டம் வம்பு வல்லடி வழக்குப் போட்டு கடைசியில் அம்முயற்சியில் தோற்றன. இப்போது அவர் தலித் - தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவருக்கு இப்படி ஒரு உள்நோக்கம் கற்பிப்பதைவிட மிக மோசமான செயல் உண்டா? தலைமை நீதிபதியைப்பற்றி ஒரு மூத்த வழக்குரைஞர் இப்படிப் பேசினால், அது உச்சநீதிமன்ற நீதி பரிபாலனத்தினையே கேவலப்படுத்துவதாகாதா?
நான்கு நீதிபதிகளும் தாழ்த்தப்பட்டவர்களா?
அவர் மட்டும் தனியாகவா பரிந்துரை செய்தார்? அந்த கொலிஜியத்தின் குழுவில் மற்ற 4 நீதிபதிகளில் யாராவது தாழ்த்தப்பட்ட தலித் உண்டா? ஜஸ்டிஸ்கள் பி.என். அகர்வால், எஸ்.எச். கபாடியா, தருண் சாட்டர்ஜி, அல்தாமா கபீர் ஆகியவர்களுடன் கலந்து தானே (கொலிஜியம்) அந்தப் பரிந்துரை நடந்துள்ளது?
பார்ப்பன ஆணவம் காரணமாக தலித் - தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் கேட்க நாதியற்ற சமுதாயத்தவர் என்ற நினைப்பா? எவ்வளவு பெரிய நிலைக்குச் சென்றிருந்தாலும் அவர்களைப்பற்றி தாறுமாறாக இப்படிப் பேசுவது பச்சைப் பார்ப்பனத்தனம் அல்லவா? வாய்ப்பற்ற சமூகம் வரக்கூடாதா?
கர்நாடக வழக்கறிஞர்களில் ஒரு சிலர் அதிருப்தியாளர்களாக இருக்கலாம்; அவர்களில் எவராவது மொட்டை கடிதங்களைப்போல ஏதாவது கூறினால் அதை உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ பொருட்படுத்தலாமா? பி.டி. தினகரன் தலைமை நீதிபதியாக வந்து விடுவார் என்பதால் இந்தப் பழிதூற்றலா?
இன்னொரு சிந்தனையும் முக்கியம் என்கிறார்கள்! பல வழக்கறிஞர்கள். இப்படி இவர்களில் சிலர் பழிதூற்றி, பழி தூற்றி தடுப்பதற்குக் காரணம், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வேறு ஒரு நீதிபதி சில மாதங்கள் தலைமை நீதிபதியாக வரக்கூடும். அதற்குப்பின் ஜஸ்டிஸ் சதாசிவம் தலைமை நீதிபதியாக வரும் வாய்ப்பு உண்டு. அவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்; அவரது நேர்மையும், திறமையும் எவராலும் குறைகூற முடியாது.
அதற்கு அடுத்தபடியாக ஒருவருக்குப்பின் பி.டி. தினகரன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக வரும் வாய்ப்பும் இருப்பதால், இப்போதே இதைத் தடுத்துவிடவேண்டும். வயதில் மிகவும் குறைந்த ஒரு மராத்திப் பார்ப்பனரை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தால் அவர் தலைமை நீதிபதியாக பல ஆண்டுகாலம் இருக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்பதும் காரணமாக இருக்கலாம் என்ற பேச்சும் சென்னை வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசப்படுவதாகத் தெரிகிறது.
சென்னையிலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம்
எனவே, இந்த அநீதியைக் கண்டித்து, பார்ப்பன வழக்குரைஞர்கள், ஊடகங்களின் போக்கைக் கண்டித்து வரும் 25.9.2009 அன்று சென்னையிலும், மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்_ நடைபெறும். தலித் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் கொடுமையைத் தடுப்பது என்பதோடு, உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ இப்படிப்பட்ட அவதூறுகளைத் தூக்கி எறியவேண்டும் என்று வற்புறுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைவரும் இதில் கலந்துகொள்ள முன் வரவேண்டும்.
இது ஜஸ்டிஸ் பி.டி. தினகரன் என்கிற ஒரு தனி நபர் உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் அறப்போர் அல்ல; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமையை நிலை நாட்டிட பொங்கி எழவேண்டிய கடமை என்ற முறையில் சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் நடத்துகிறோம்.
(கருநாடக மாநில தலைமை நீதிபதியாக இருக்கும் நீதியரசர் பி.டி. தினகரன் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படும் ஒரு சூழலில், அவர்மீது வீண் பழி சுமத்தி அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக வராமல் தடுக்கும் பார்ப்பன சக்திகளைக் கண்டித்தும், அவதூறுகளைப் புறந் தள்ளி, அவரை உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிப்பதில் எந்தவித மாற்றமும் இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் இதற்காக நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை)
-----------------------------------------
“சமூக நீதியும், கழகத்தின் குரலும்” என்ற தலைப்பில் விடு தலை ஏடு (செப். 22) தலையங்கம் ஒன்றை தீட்டியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக மாநில தலைமை நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவத ை பார்ப்பன ஊடகங்கள் எதிர்ப்பதாகவும் இதை எதிர்த்து சமூகநீதிக்காக போராடும் இயக்கமாம் திராவிடர் கழகம் தனது கடமை முத்திரையை பதிக்க களத்தில் இறங்குவதாகவும் இந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது . இதே கோரிக்கைக்காக மதுரையிலும் சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டு , பின்னர் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டு ள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி யில் 18.9.2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையிலும் இந்தப் பிரச்சனையை பிரதானமாக விவாதித்திருக்கிறார்.
நீதிபதி தினகரன் மீது பொய் யான புகார்களை எழுப்பியுள்ள தாகவும் ஒரு தாழ்த்தப்பட்டவர ் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக் கப்படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு அவதூறு பரப்பப்படுவ தாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.டி.தினகரனை அமர வைக்கும் வரை இந்தப் பிரச்சனையை திரா விடர் கழகம் உட்பட சமூகநீதி அமைப்புகள் விடப்போவதில்லை என்றும் ஓயப்போவதில்லை என் றும் அவர் கூறியுள்ளார்.
நீதிபதி தினகரன் மீது கூறப்பட்டுள்ள புகார் என்ன?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்திற்குட்ப ட்ட காவேரி ராஜபுரம் கிராமத்தில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட ்டுள்ளன. தரிசு நிலங்கள் நீர்நிலை, நீர்வரத்து, மேய்ச்சல், புறம்போக்கு நிலங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட ்டுள் ளன. இதில் நீதிபதி தினகரன் மற் றும் அவரது குடும்பத்தினர் மட்டும் சுமார் 550 ஏக்கர் நிலத்தை ஆக்கி ரமித்துள்ளதாகவு ம் இந்த ஆக்கிர மிப்பில் இரண்டு ஏரி, குளமும் அடங்கும் என்று புகார் எழுந்துள்ளது.
காவேரிராஜபுரத்த ில் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் எஸ்.கே. மகேந்திரன் எம்எல்ஏ மற்றும் தலைவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் அரசு இதுவரை எடுக்கவில்லை.
காவேரிராஜபுரம் நில ஆக்கிர மிப்பை அகற்றக்கோரி திருவள்ளூ ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனு மதித்த காவல்துறை, பின்னர் அதை ரத்து செய்து ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்ற தலைவர்களை யும் ஊழியர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தது. ஆனால் புறம் போக்கு நிலத்தை வளைத்து போட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை.
காவேரிராஜபுரத்த ில் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள் பூர்வீகமானவை என்று நீதிபதி தினகரன் கூறியுள்ளார். ஆனால் இந்தக்கிராமத்தி ல் அவருக்கு பூர்வீக சொத்து எதுவும் இல்லை என்றும் 18 ஆண்டுகளுக்கு முன்னால்தான் அவர் இந்த கிராமத்தில் கால்பதித்தார் என்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வி.எம்.ராமன் என்பவர் கூறியுள்ளார். (மெயில் டுடே).
மெயில் டுடே செய்தியாளர் எழுதியுள்ள கட்டுரையில், தினகரன் மற்றும் குடும்பத்தினரின ் ஆக்கிரமிப்பால் நிலம் இழந்துள்ள பெரும்பாலானோர் தலித்துகள் தான் என்று குறிப்பிட்டுள்ள ார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற தலித் முதியவர் கூறுகையில், “எனது சிறுவயதில் இந்த நிலத்தில்தான் ஆடு, மாடுகளை மேய்த்துள்ளேன். புல் அறுத்துள்ளேன். ஆனால் இப்போது இந்த நிலத்தில் கால் வைக்கக்கூட எங்களை அனுமதிப்பதில்லை ” என்கிறார். காவேரிராஜபுரத்த ில் மட்டும் 440 ஏக்கர் நிலங்கள், தினகரன் குடும்பத்தாரால் ஆக்கிரமிக்கப்பட ்டுள்ளது என்றும், இது அந்தக் கிராமத்தில் நான்கில் ஒரு பகுதி என்றும் அந்த ஏடு கூறுகிறது.
பல்வேறு விவசாயிகளிடம் நிலத்தை விலை கொடுத்து வாங்கிய நிலையில், 313 ஏக்கர் நிலம் மட்டுமே பட்டா நிலம் என்றும் மீதமுள்ள நிலங்கள் புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்கள் என்றும் கூறப்படுகிறது. காவேரிராஜபுரத்த ில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் தலித்துகள் மற்றும் இருளர் என்ற பழங்குடியினத்தை ச் சேர்ந்தவர்கள். தினகரன் மட்டுமின்றி வேறு சில அரசியல்வாதிகளும ், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளும் கூட பெருமளவு நிலத்தை ஆக்கிரமித்திருப ்பதாக குற்றம்சாட்டப்ப ட்டுள்ளது.
அந்தப்பகுதியில் உள்ள சாலைக்கு நீதியரசர் பி.டி.தினகரன் சாலை என்று பெயரிடப்பட்டிரு ப்பதோடு, அடிக்கடி அந்தப்பகுதிக்கு அவர் வந்து செல்வார் என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட ்டிருந்த அந்த இடங்களில் குடியிருப்போருக ்கு பட்டா வழங்கக் கூடாது என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மதுரையில் அமைந்துள்ள உயர்நீதி மன்றக் கிளை, ஒரு ஏரியை தூர்த்து கட்டப்பட்டுள்ளத ு என்பது ஒரு புறமிருக்க ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டிருப்பதோடு நீர்நிலைகளையும் ஆக்கிரமித்திருக ்கிறார். இதைத்தான் பத்திரிகைகள் அம்பலப்படுத்திய ிருக்கின்றன.
ஆனால் திராவிடர் கழகம், அந்தப் புகார் சமூகநீதிக்கு எதிரானது என்று கூறுகிறது. நிலத்தை இழந்திருப்பவர்க ளும் தலித்துகள் தான். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நிலம் பகிர்ந்து தரப்பட்டால் அதனால் பலம் அடைபவர்களும் தலித்துகள்தான்.
தினகரன், தலித் என்பதால் தாங்கள் போராடுவதாக கூறும் திராவிடர் கழகம், நிலம் இழந்த, நிலம் மறுக்கப்படும் தலித்துகளைப் பற்றி கவலைப்படாதது ஏன்? இதுதான் “வசதியான” சமூகநீதி என்பதா?
நீதிபதிகள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்பதோடு மட்டுமின்றி, நீதிபதிகள் நியமனத்திலும் நம்பகத்தன்மையும ், வெளிப் படைத்தன்மையும் இருக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வரும் காலம் இது.
ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசாமி என்ற நீதிபதி, பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அவர் மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகள ில் 11 குற்றச்சாட்டுகள ் நிரூபிக்கப்பட்ட நிலையில், 108 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மக்களவையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது திராவிடர் கழகம் இவர் பிற்படுத்தப்பட் டோர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி அவருக்கு வக்காலத்து வாங்கியது. இதே காரணத்தை காட்டி சில கட்சிகள் கண்டனத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததால் இந்த தீர்மானம் வெற்றிபெறவில்லை . அப்போது ராமசாமிக்கு ஆதரவாக எம்.பி.க்களை திரட்டியதில் சுப்பிரமணியசாமி க்கும் பெரும் பங்கு உண்டு. அவர் எந்த சமூக நீதியின் அடிப்படையில் ராமசாமியை ஆதரித்தார் என்று தெரியவில்லை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் கே.ஜி.பால கிருஷ்ணன் ஒரு தலித் என்பதால், தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க முயல்கிறார் என்று சாந்திபூஷன் என்ற மூத்த வழக்கறிஞர் கூறியிருக்கிறார ். இத்தகைய விஷமத்தனமான விமர்சனங்கள் கண்டிக்கத்தவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால், காவேரிராஜபுரத்த ில் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், ஆக்கிரமிக்கப்பட ்டுள்ள இடங்கள் நிலச்சீர்திருத் தத்தின் மூலம் உழைக்கும் மக்களான தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவைதான். இந்த ஆக்கிரமிப்பில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலமும் உண்டு. இதற்காக திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள் எத்தனை?
திருச்சி மாவட்டம் திண்ணியத்தில் தலித் ஒருவரை தாக்கி, ஜாதி ஆதிக்கவெறியர்கள ் அவரது வாயில் மலத்தை திணித்தார்கள். இந்த வழக்கு நீதிமன்றம் வந்தபோது, முதல் தகவல் அறிக்கையில் குளறுபடி இருப்பதாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. இது சமூகநீதி ஆர்வலர்கள் போராடியிருக்க வேண்டிய விசயம் இல்லையா?
மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான புகார் எழுந்தபோது, ராசா ஒரு தலித் என்பதால் இத்தகைய புகார் எழுப்பப்படுவதாக முதல்வர் கூறினார்.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் போது நெல்லை தாமிரபரணி ஆற்றில் 17 தலித்துகள் அடித்து மிதக்கவிடப்பட்ட போது, அந்த மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டது. அவரை மாற்றினால் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோபப்படுவார்கள் என்று மறுப்புக்கான காரணம் கூறப்பட்டது.
உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டவர்க ளும் தலித்துகள்தான். இந்தப் பிரச்சனையை கையிலெடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் போராடிய போது சமூகநீதி அமைப்புகள் ஓடோடி வந்து ஆதரித்திருக்க வேண்டாமா?
மாறாக தீண்டாமை கொடுமையை கைவிட மாட்டோம் என்று கூறி மலையேறியவர்களை காண அல்லவா பலரும் ஓடோடிச் சென்றார்கள்.
முதல்வர் சட்டமன்றத்தில், பாதை கேட்டவர்களுக்கு பாதை கிடைக்கும், பாதுகாப்பு கேட்டவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றார். அரசே திறந்து விட்ட பாதையில் தலித்துகள் தைரியமாக செல்ல முடிகிறதா?
நீதி கேட்ட மக்களை காவல்துறையினரே கொடூரமாக தாக்கிய நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்த ின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளத ு.
இந்தப் பிரச்சனையில், விடுதலை ஏடு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மலையேறிகளை அல்லவா ஆதரித்தது.
வைக்கம் போராட்டத்தின் போது தந்தை பெரியார், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலயப்பிர வேசம் வேண்டுமென போராடினார். அவர்கள் வசதியானவர்களா என்று பெரியார் பார்க்கவில்லை. ஆனால் இன்றைக்கு சமூகநீதி அளவுகோல் கூட, சம்பந்தப்பட்டவர ின் பொருளாதார வசதி மற்றும் பின்னணியை வைத்தே அளக்கப்படுகிறது . சமூக நீதிக்கான அளவுகோலை புரிந்துகொள்ள முடியவில்லை.
- மதுரைச் சொக்கன், (தீக்கதிர் நாளிதழிலில் எழுதிய பதிலடி)
அபகரித்திருப்பத ைக் குறித்து வீரமணி என்ன சொல்கிறார்?அவர் மேம்போக்காக சொல்வதைப் போல் அதைப் பொய்யான குற்றச்சாற்று என்று ஒதுக்கிவிட முடியாது.தீக்கத ிர் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள கட்டுரை வடஇந்திய பார்ப்பன இதழாளர்கள் குற்றச் சாற்று அன்று.உத்தப்புர ம் போன்ற சமூகநீதிப் போராட்டங்களில் ஒதுங்கி இருந்து விட்டு சி பி எம் இந்த குற்றச்சாற்றை வைக்கவில்லை.ஏழை எளிய மக்களின் சமூகநீதிக்குப் போராடிய உரிமையுடன் இதை கூறுகிறது.
வீரமணி தன கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
RSS feed for comments to this post