பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் 22.01.2015 அன்று மறைவுற்றார் என்ற செய்தி அவர் பால் அன்புள்ளவர்களை மட்டுமின்றித் தமிழின் பால்-தமிழரின்பால்-பெரியாரிடத்து-பாவேந்தரிடமிருந்து அன்பும் பற்றும் கொண்ட கோடிக் கணக்கான தமிழர்களைத் துயரில் ஆழ்த்தியது. ஏன்?

தமிழறிஞர்கள் கட்டுக்கட்டாக உள்ள தமிழ் நாட்டில், தமிழ்மொழியை வாழவைப்பதாற்காகச் சொல்ல வேண்டிய செய்திகளை-செய்ய வேண்டிய பணிகளை எந்த இடத்தில், எவரிடம் தெரிவிக்க வேண்டுமோ அதைச் செய்யும் அஞ்சா நெஞ்சினராகப் பேராசிரியர் இரா.இளவரசு விளங்கினார். முதலமைச் சர், தொடர்புடைய துறை அமைச்சர், எவராயினும், நேருக்கு நேர் - ‘செயத்தக்க செய்யாமையாலும் தமிழ் கெடும்’ என்பதை எடுத்துரைத்த ஆண்மையாளர், அவர்.

வளங்கொழிக்கும் கொள்ளிடக்கரையில், நடுத்தர வேளாண் குடும்பத்தில் பிறந்தவராயினும், தந்தை பெரியாரின் சாதிமறுப்புக் கொள்ளையை ஏற்றுத் தாம் பிறந்த வீட்டிலும், தாம் பணியின் நிமித்தம் வெளி யூரில் வாழ்ந்த இடத்திலும் எல்லோரையும், ஒத்த உரிமைகளும் அதை நடத்திக் காட்டியவர்.

திருச்சிக்கு, என் வீட்டுக்கு, 1982இல் முதன் முத லாக வருகை தந்தார், என் மாணவரும் அவருடைய பங்காளியுமான பெரியசாமியுடன்.

நான் வேறு உள்சாதி; அவர்வேறு உள்சாதி. ஆயினும் உடன்வந்த பெரியாசாமியின் தம்பிக்கு என் மூத்தமகளைத் திருமணம் செய்யவேண்டும் என்று, வந்தவுடனே அறிவித்தார். எனக்கும் உடன்பாடு. ஆனால் நான் 3 மாதம் வெளிமாநிலத்தில் இருந்த போது என் குடும்த்தார் என் மகளை வேறு மண மகனுக்கு உறுதி செய்துவிட்டதைத் தெரிவித்தேன்.

அப்போதுதான் பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூலை நேரில் விலைக்கு வாங்கினார்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைக்க அவரு டைய இல்லத்துக் ஒருமுறை சென்றேன். அது சமயம் அவருடைய துணைவியாரையும் மக்களையும் பார்த்து உரையாடினேன்.

அவருடைய இல்லத் திருமணம் ஒன்றில் பங் கேற்றேன்.

2002 இல் அன்னாரின் பிறந்த நாளை ஒட்டி, அவர் கல்வி பயின்ற, திருச்சி அர்ச். சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றவர்களுள், நான் முதன்மையான இடம் பெற்றேன்.

பாவேந்தரை மேடைதோறும் பாடிப் பாடித்தான் திராவிடர் இயக்கம் வளர்ந்தது. அப்பெருங்கவிஞரின் பெருமையை எடுத்தியம்பும் திறம்மிக்கோராகக் கரந்தை புலவர் இராமநாதன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், சிதம்பரம் பேராசிரியர் இராமநுசம், பேராசிரியர் இரா.இளவரசு, பேராசிரியர் ராமர் இளங்கோ ஆகி யோர் விளங்கினர்.

இப்படிப்பட்ட பணிகளில்-பாவேந்தரின் தொடக்க காலப்பாடல்கள் சுப்பிரமணியக் கடவுளைப்பற்றி, தேசியம் பறி, தீண்டாமை ஒழிப்புப்பற்றியவை. அவற்றைத் தொகுத்துச் செம்பதிப்பாக வெளியிட்டவர். பேராசிரியர் இரா.இளவரசு அவர்களே ஆவார்.

பெரியார் கொள்கைகளில் தோய்தோர், பலர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் “பெரியார் உயர் ஆய்வு மய்யத்”தின் தலைவராக 1-7-1999 முதல் 2004 வரை அய்ந்தாண்டுகள் விளங்கினார். அந்த ஆய்வு மய்யம் அவராலும், எஸ்.வி.இராசதுரை, பேரா.க.நெடுஞ்செழியன் போன்றாராலும் பெருமை பெற்றது.

இத்தகைய பெஞ்சிறப்புகளையும் தகுதிகளையும் பெற்ற இளவரசு அவர்கள் உடல்நலங்குன்றியிருப் பதாக அறிய எனக்கு வாய்ப்பே இல்லாமற் போயிற்று.

அன்னாரின் உடலை நேரில் பார்த்தபோது-அந்தோ! அடையாமே தெரியவில்லையே என மனம் நொந்தேன்.

மா.பெ.பொ.க. சார்பில் தோழர்கள் இரா.பச்சமலை, துரை.கலையரசு, கலச.இராமலிங்கம், வாலாசா வல்லவன் நான் அப்பெருகமனாரின் உடலுக்குக் கருப்பு ஆடை போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினோம்.

சாதி ஆதிக்கத்தை அடையாளங்கண்ட பேரறிஞர் ரஜினி கோத்தாரி மறைந்தார்

இந்திய-ஒடுக்கப்பட்ட எல்லாச் சமுதாயங்களுக்கும் எல்லாத்துறைகளிலும் விடுதலை வரவேண்டும் என்றும், அதுவே மக்கள் நாயகம் மலர ஒரேவழி என்றும் கருதி, அதற்காக தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்தவர், பேரறிஞர் ரஜினி கோத்தாரி அவர்கள்.

1977இல் தோழர் எஸ்.வி.இராஜதுரை வழியாக நான் அவரைப்பற்றி அறிந்தேன். அவர்“வளர்ந்து வரும் சமுதாயங்களுக்கான ஆய்வு நிறுவனம் (Centre for the study of Developing Societies) என்னும் நிறுவனத்தை 1963இல் தில்லியில் நிறுவினார்.

சாதிய மோதல்கள், சாதி உணர்வு மறைய உள்ள தடைகள், மக்கள் சிவில் உரிமைகளுக்கு நேரிட்ட இடையூறுகள்- Subaltern எனப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் விடுதலை இவற்றில் ஆர்வம் உள்ளவர் களை அடையாங்கண்டு, அவர்கள் களப்பணிகளை மேற்கொள்ள ஊக்கம் அளித்து உதவியவர். அந்நிறு வனத்தின் தலைமைப் பொறுப்பாளராக விளங்கிய டி.எல்.சேத் (D.L.Seth) என்பவர் அவருடைய பணிகளுக்கு உற்ற துணையாக விளங்கினார். அந்நிறுவனத்துடன் 1978 இல் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்நிறுனத் தார்க்கு, தமிழகத்தில் நடந்த-1978 மண்டைக்காடு சாதிமோதல்; 1978 மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றிய விரிவான கள ஆய்வு அறிக்கைகளை நான் அளித்தேன்.

1978இல் அரசு வேலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான-தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி திண்டுக்கல்லை அடுத்த ஒரு சிற்றூரில் இரண்டு நாள்கள் நடைபெற்ற கலந்துரையாடலில் அறிஞர் ரஜினிகோத்தாரி, எஸ்.வி.இhஜதுரை, கோவை ஞானி, முனைவர் மு.நாகநாதன் மற்றும் பலருடன் நானும் பங்கேற்றேன். என் முதல்நாள் உரையில், இடஒதுக்கீடு பற்றிய வரலாறு பற்றி நாள் வாரியாக நான் குறிப்பிட்டதை, என் அறைக்கு வந்து, கோத்தாரி மெச்சி, மனமாரப் பாராட்டினார்; அடுத்த நாள் அரை நேரம் என்னையே பேசவைத்தார். அவ்வளவு செய்தி களையும் ஆங்கிலத்தில் எழுதி, ஒரு குறுநூலாக ஆக்குங் கள் என்றும் விருப்பம் தெரிவித்தார். அதற்காக, செனனையில் மூன்று நாள்கள் தங்கி ஆங்கிலத்தில் ஒரு குறு நூலை நான் உருவாக்கினேன். இப்பணிக்கு, எஸ்.வி.இராதுரை ஓர் எழுத்தாரைத் தந்து உதவினார்.

அதனை அடுத்து மேற்கு வங்கத்தில், மார்க்சிய-லெனினியக்கட்சிச் சார்பில் சந்தோஷ் ராணா, பாஸ்கர் நந்தி இருவரும் என்னையும் எங்கள் கட்சித் தோழர் களையும் அழைத்து, கல்கத்தாவில் 1986 அக்டோபர்-நவம்பரில் இடஒதுக்கீடு, தேசிய இனங்களின் விடுதலை பற்றி நான்கு நாள்கள் நடத்திய கருத்தரங்கில் பேசிட ஏற்பாடு செய்தனர்.

அந்நிகழ்ச்சிகளிலும் அறிஞர் ரஜினி கோத்தாரி மற்றும் தில்லி வழக்குரைஞர் பகவன்தாஸ், வே.ஆனைமுத்து, முனைவர் து.மூர்த்தி, க.முகிலன், கலசராமலிங்கம், தில்லி ச.தமிழரசு முதலானோர் பங்கேற்றோம்.

1987 செப்டம்பரில், ஜலந்திரில் பாஸ்கர் நந்த முன்னின்று நடத்திய தேசிய இனவிடுதலை பற்றிய மாநாட்டிலும் பேராசிரியர் ரஜினிகோத்தாரி, வழக்கு ரைஞர் பகவன்தாஸ், வே.ஆனைமுத்து, முனைவர் து.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றோம்.

1991 அக்டோபரில் ரஜினி கோத்தாரி உடல் நலமின்றி இருப்பதாக அறிந்து அவருடைய இல்லத் துக்குச் சென்று நலம் உசாவி வந்தேன். அதன் பின்னர் கடந்த பல ஆண்டுகளில் அப்பெருமகனாரைக் கண்டு பேசிட நாடன் முயலாமற் போனதை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

பேரறிஞர் ரஜனி கோத்தாரி அவர்கள் 2015 சனவரி 18 வாக்கில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்த அதிர்ச்சி அடைந்தேன்.

“Policitcs in India”, “Caste in Indian Policitcs and Rethinking Development in Search of Humane Alternatives” உள்ளிட்ட அவருடைய ஆய்வு நூல்கள் இந்திய அரசியல், சாதியின் இருப்புநிலை, மனித மாண் பைக் காக்க ஏற்ற வழிகள் இவற்றை நாம் அறிந்திட உதவுபவை.

இவற்றை வென்றெடுக்க நாம் முயலுவதே இவற்றை பேரா.ரஜினி கோத்தாரி அவர்களுக்கு நாம் செலுத்தும் இறுதி மரியாதை ஆகும்; நன்றிக் கடன் ஆகும்.

வளர்க அறிஞர் ரஜினி கோத்தாரி புகழ்!

-    வே.ஆனைமுத்து

Pin It