கடந்த சில வருடங்களாக நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள் பெருகி வருவதை வெகுசன ஊடகங்கள் அவ்வப்போது எடுத்துக் காட்டுவதைக் காண முடிகிறது. பல வருடங்களுக்கு முன்னர் அங் கொன்றும் இங்கொன்றுமாக வெளியே தெரி யாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் கொடுமை இப்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நம் நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொண் டிருந்தாலும்கூட, அவற்றை எடுத்துப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது, குறிப்பாக அதற்கு அதிக மாகப் பலியாகிக் கொண்டிருப்பது தலித் பெண் களாக இருப்பது தெரிய வருகிறது. இவர்களுடன் ஆதிவாசிப்பெண்களையும் சேர்த்துக் கொள்ள லாம்! இவர்கள் போக, ஆங்காங்கே சில இளம் பெண்கள்.

இவற்றுக்குப் பல உதாரணங்களைக் காண முடியும். சமீபத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு தலித் பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாகி, பின்னர் மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டது, நாடறிந்த சேதி. இது நடைபெற்றது 2014, மே மாதம் 14-ஆம் தேதி. பாலியல் வன் கொடுமைக்கு ஆளானது 14-ம், 15-ம் வயதான இரண்டு சிறுமிகள். இக்கொடுமைக்கு ஆளாகி இறந்து போன அப்பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதற்காக வேண்டி பி.எஸ்.பி. கட்சியின் தலைவரும் உ.பி. மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி சென்றிருந் தார். கண்டு, சந்தித்துவிட்டுத் திரும்பிய அவர், கீழ்க் கண்டவாறு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந் தார்.

women 600

“அடித்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த பெண் களுக்கு எதிராகப் பெருகிவரும் இக்கொடுமை யினைத் தடுத்து நிறுத்துவதற்கு இயலாத சமாஜ் வாதிக் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு உ.பி. மாநிலத்தில் ராஷ்டிரபதி ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்” என்று.

முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் அவர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்து போன சிறுமிகளின் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று, புகார் கொடுக்கப் போன போது, அந்த வேளையில் ‘டியூட்டி’யி லிருந்த காவலர்கள், ‘நீங்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்?’ என்று, சாதியைப் பற்றி விசாரித் தார்களாம்!

இந்தச் சேதியைக் கொல்லப்பட்ட சிறுமியின் அப்பா, அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினரைக் கண்டு தெரிவிக்கவே, அவர், கேசை ஊக்ஷஐ விசாரணைக்கு விடுமாறு சொல்லியிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சராக இருந்த மாண்புமிகு. திரு.ராம்விலாஸ் பாஸ்வான், திரு.ராகுல்காந்தி போன்றவர்களும் இந்தக் கொடுமை நடைபெற்ற கிராமத்திற்கு சென்று வந்துள்ளார்கள்.

இதே மாதிரி, மும்பையிலும் வெகுசன ஊடகம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்திருந்தார்.

உ.பி. மாநிலத்தில் பதாயும் கிராமத்தில் நடை பெற்றது போல் சிதாயூர் மாவட்டத்தில், பேனிப்பூர் கிராமத்தில் பதினோரு வயது தலித் சிறுமி, மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தார். தன் மகளைத் திருமணம் பண்ணித் தருமாறு கேட்ட போது, செய்து கொடுக்க மறுத்ததினால், தன் மகளை இவ்வாறு கொன்று கட்டித் தொடங்க விட்டு விட்டதாக, அந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்ற பையன் உட்பட ஆறு பேருக்கு எதிராக அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித் திருந்தார்.

இது மாதிரி பிரேஸ்பூர் கிராமத்தில் 15 வயது இளம்பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்டுபோய், பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக வேண்டி காசிம் என்பவரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

இரண்டு இளம் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மரத்தில் கட்டித் தூக்கப்பட்ட வழக்கு உ.பி. மாநிலத்தில் சுரணை யுள்ள மக்களிடையே மிகப் பெரிய கலக உணர்வைத் தூண்டிவிட்ட அதே வேளையில், நம்மையெல்லாம் நடுங்கவும் வெட்கப்படவும் செய்யும் படியான இன்னொரு குரூரமான சம்பவமும்,

உ.பி. மாநிலத்திலுள்ள அலிகட் என்ற இடத்தில் நிகழ்ந்தது. அதாவது, நீதிபதியாகப் பணியாற்றி வரும் பெண்ணொருவரை, அவர் தங்கியிருந்த (அலு வலர்கள் தங்குமிடம்) இடத்திற்குச் சென்று, பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திவிட்டு, படுக்க வைத்து, கட்டாயப்படுத்தி அவர் வாய்க்குள் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றி, கொலை செய்யவும் முயற்சி நடைபெற்றது. உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் நீதிபதியின் நிலை என்னவாயிற்று என்றே தெரியவில்லை!

இறுதியில், அவருடைய சகோதரர் அளித்த புகாரின் பேரில் சீனியர் மாவட்ட சூப்பிரண்டு நிதின் திவாரி அவர்கள், வழக்கைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இதுமாதிரி டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸிற்குள் வைத்து, நான்கு, ஐந்து ‘இருகால் மிருகங்கள்’ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, வெளியே தூக்கி யெறிந்ததைக் கண்டு, மக்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டு பொங்கி எழுந்ததைப் பார்த்து அன்றைய மத்திய அரசே நடுநடுங்கிப் போனது, நாடறிந்த சேதி. இவ்வாறு வடஇந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, கேரளத்தில், எர்ணா குளம் மாவட்டத்தில், பரவூர் என்ற ஊரைச்

சேர்ந்த இளம் பெண்ணொருவரை, அவரது தாய் தந்தையரே கட்டாயப்படுத்தி பலருக்குக் ‘கூட்டிக் கொடுத்த’க் குற்றத்திற்காக, அப்பெண்ணின் பெற் றோரும், அதில் சம்பந்தப்பட்டவர்களில் சிலரும் சட்ட ரீதியாகத் தண்டிக்கப்பட்டனர். (பரவூர் பெண் வாணிபக் கேஸ்). இந்தக் கேஸ் கேரளத்தில் ரொம்பவும் பிரபலமான ஒன்றாகும்.

இதுபோன்று, எர்ணாகுளத்தில், ஆலுவா என்ற ஊருக்குப் பக்கத்தில், கிழக்கம்பலம் என் றொரு இடம் உள்ளது. இங்கு கார்மண்ட் பாக்டரி ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பாக்டரியில் வேலை பார்ப்பதற்காக வேண்டி ஜார் கண்ட்டிலிருந்து பல இளம்பெண்கள் அழைத்துக் கொண்டு வரப்பட்டிருந்தார்கள். இவர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கு முன்னால், கன்னிப் பெண்கள் தானா, என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டார்கள். கன்னிகள் என்று உறுதியான பின்னரே அனைவரும் வேலையில் அமர்த்தப் பட்டார்கள். அதே பெண்கள், ஊருக்குத் திரும்பும் வேளையில் நடத்திய பரிசோதனையில் அனை வரும் கர்ப்பிணிகள் எனத் தெரிய வந்தது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெண்களில் ஒருவர், தன் முகவரியை வெளிப்படுத்தாமல் கிழக்கம்பலத்தி லுள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். இதுதான், மேற்கண்ட வழக்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. உடனே இந்த வழக்கு மகளிர் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜார்கண்ட் மாநில அஜயந்தா மகளிர் கமிஷன் நியமித்த அஜயந்தாசிங் அளித்த அறிக்கை, இது.

சமீபத்தில், தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் தன் உடன்பிறந்த சகோதரியின் மகளிடம் (அப்பெண் 9-ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி) தகாத முறையில் நடந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி யதுடன் நின்றுவிடாமல், தன் நண்பர் ஒருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய், அவருக்கும் அப்பெண்ணின் உடம்பை விட்டுக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். இந்தக் குற்றத்திற் காக வேண்டி அவர், சமீபத்தில் கைது செய்யப் பட்டார்.

இம்மாதிரி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய சேதி, நம் நாட்டைக் கடந்து வெளிநாடு களுக்கும் எட்டியிருக்கிறது.

பொதுவாக நம் நாட்டில் பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் பாலியல் வன்கொடுமை களைப் பற்றி, வெகுசன ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட வெளிநாடுகளில் சில, இந்தி யாவில் நடைபெற்று வரும் பாலியல் தொல்லை களைக் கணக்கிலெடுத்துக் கொண்ட, தங்கள் பிரஜைகளின் நலனைக் கருதி, இந்தியாவுக்குள் உல்லாசப் பயணம் வருவதை சட்டரீதியாகத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம், நம் நாட்டுப் பெண்கள் மட்டுமின்றி, வெளிநாடு களிலிருந்து உல்லாசப் பயணம் வரும் வெளி நாட்டுப் பெண்களும் கூட, நம் நாட்டில் ஆங் காங்கே பல உல்லாசக் கேந்திரங்களில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

இம்மாதிரி நம் நாட்டில் நடைபெற்று வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைப் பற்றிய சேதி, ஐக்கிய நாட்டு சபை வரையில் எட்டியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இது சம்பந்தமாக, ஐக்கிய நாட்டு சபை செக்ரட்டரி ஜெனரல் திரு.பான்கிமூன், உ.பி-யில் இரண்டு தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட குரூரமான அந்தப் பாலியல் வன்முறை, தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகத் தெரி வித்திருந்தார்.

இதுபோல் நிகழ்ந்து வரும் சம்பவங்களைப் பற்றி முன்னாள் உ.பி. முதல்வர் திரு.முலாயம்சிங் யாதவ் அவர்களின் கருத்து, இந்த இடத்தில் எடுத்துக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதாவது ‘எங்களுடைய ஆண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் தான்!’ என்று, செய்த தவறை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் பார்த்து, மார் தட்டிக் கொண்டு பெருமைப்பட்டிருந்தார்.

அதோடு நின்றுவிடவில்லை, அவர் ‘கிட்டத் தட்ட 21 கோடி சனத்தொகையுள்ள எங்கள் உ.பி. மாநிலத்தில், இம்மாதிரி நடைபெறும் சம்பவங்கள் ஒன்றும், அவ்வளவு பெரிய விஷயமல்ல!’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வார்த்தைகளின் அடிப்படையில்தான் ஐக்கிய நாட்டு சபை செக்ரட்டரி ஜெனரல் திரு.பான்கிமூன் மேற்கண்ட செயலைக் கண்டித் திருந்தார்.

திரு.பான்கிமூனின் வார்த்தைகள் பத்திரிகை களில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருந்தது.

“கடந்த இரண்டு வருடங்களில், உலகில் பல நாடுகளில், பல்வேறு இடங்களில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக் கின்றன. குறிப்பாக, நைஜீரியா முதல் பாகிஸ்தான் வரையிலும்; கலிபோர்னியா தொட்டு இந்தியா வரையிலும்! ஆனால் கக்கூஸ் வசதி இல்லாத தினால் ‘வெளிக்கிருப்பதற்காக’, வெட்ட வெளிக்குச் சென்ற இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளான இந்திய நாட்டுச் சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று” என்கிறார், திரு.மூன்.

மேற்கண்ட வன்கொடுமைகளை ஒட்டி மேகாலயா மாநிலத்தில் தன் மீது நிகழ்த்தவிருந்த பாலியல் வன்கொடுமையைத் தடுத்த பெண் ணொருவர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான தையும் இந்த வேளையில் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மாதிரிக் கொடுமைகள் அநேகமாக நம் நாட்டு இளம் பெண்களைக் குறி வைத்தே நடைபெறுகின்றன. இவ்வாறு பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டு நியாயாதிபன்மார்களுக்கு இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இளம்பெண்கள் மீதான திராவகம் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 6 வாரங் களுக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீசு அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் இளம்பெண்களுக்கு எதிரான திராவகம் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. குறிப்பாக தன்னை விரும்பாத, திருமணம் செய்துகொள்ள மறுக்கும் இளம்பெண்கள் மீதும், பழிக்குப் பழி வாங்குவதற்காகவும் திராவகம் வீசும் சம்பவங்கள் அனைத்து மாநிலங்களிலும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வாகிவிட்டது. இது குறித்து, ஏற்கனவே தனது கண்டனத்தை தெரி வித்த சுப்ரீம் கோர்ட்டு, கடைகளில் அனை வருக்கும் திராவகம் விற்பனை செய்யக்கூடாது என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் திராவகம் விற்பனை செய்யும் கடைக்காரர், வாங்குபவர் என்ன காரணத்திற்காக அதனை வாங்குகிறார் என்பதை பதிவேடு மூலம் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வின் முன்பாக (25-7-2014) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது இளம்பெண்கள் மீதான திராவகம் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து நீதி பதிகள் மிகுந்த கவலையும் வேதனையும் தெரி வித்தனர்.’ (தகவல்: தினத்தந்தி நாளிதழ் 26-7-2014)

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில், அனைத்து அமைப்புகளும் ஆகஸ்ட் 31-ம் தேதி பந்த் நடத்தியது.

இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன? இவற்றுக்கான தீர்வு என்ன? இவைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், எங்கிருந்து தொடங்குவது? யார் தொடங்கி வைப்பது? நீதிநியாயத் துறையா? அரசியல் கட்சிகளா? அல்லது சமூக இயக்கங் களா? அல்லது மகளிர் அமைப்புகளா? - என்ற கேள்விகள் நம்மைப் போட்டுத் துளைத்துக் கொண்டிருக்கிற வேளையில் சமீபத்தில் (ஜுன், 4-ல்) கேரள மாநிலத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இளம்பெண்கள் உட்பட பல பெண்கள் அணி திரண்டு ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். ‘அரை நிர்வாணப் போராட்டம்!’ நகரத்தின் மத்தியில், பிரதானச் சாலை வழியே பெண்கள் அரை நிர்வாணத்துடன் ஊர்வலமாக நடந்து சென்று ‘பெண்களின் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முடிவு கட்டுங்கள்’ என, யார் யாரையெல்லாமோ எச்சரிக்கை செய்யும் விதத்தில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. வெட்கத்தை விட்டு, பெண்கள் தெருவில் இறங்கி நடத்திய போராட்டமாக இருந் தாலும்கூட நம் நாட்டில் முக்கியமான பொறுப்பு களிலும், நாற்காலிகளிலும் உட்கார்ந்து கொண்டு, ஒன்றும் தெரியாதவர்களைப் போல் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை யாகவே அமைந்தது. இது ஒரு தொடக்கப்புள்ளி தான். என்றாலும்கூட, நாடெங்கும் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமை களுக்கு எதிரான, அபூர்வமான ஒரு கண்டன ஊர்வலம் இது. இது தான், சரியான தொடக்கமும் கூட! கொடுமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட வர்கள் ஒன்றாக அணிதிரளாமல் நம் நாட்டில் நியாயம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு பெண்கள் நடத்திய கலகம் இது, என்று கூடச் சொல்லலாம்!

Pin It