இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் செழிப்பான காவிரி பாயும் பிரதேசமாகிய தஞ்சாவூர் நாட்டை 1676-1855-ஆம் ஆண்டு வரை 12 அரசர்கள் ஆண்டு வந்துள்ளார்கள், இதில் 6 அரசர்கள் கலைகளைப் போற்றி வளர்த்தவர்கள்.  இந்த அறுவரில் மூன்று அரசர்கள் தாங்களே பெரும் அறிஞர்களாகவும் இருந்து கலைகளை வளர்த்த வர்கள்.

மராத்திய மன்னர்கள் - நாயக்கர்களைப் பின் பற்றி சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் முதலிடம் கொடுத்து, கற்று தேர்ந்து. தமிழைப் புறந்தள்ளியதால். சைவ மதத்தினரைக் காப்பாற்றும் நிலையில் தமிழக திருமடங்கள், குறிப்பாக திருவாடுதுறை ஆதீனம் தமிழை வளர்க்கும் நிலையில் இருந்தது. மாறாக தமிழ் மருத்துவத்தை வளர்ப்பதை எந்த மதமும், திருமடங்களும் கவனம் செலுத்தவில்லை என்றாலும், அதன் வளர்ச்சிக்குத் தடை செய்ய வில்லை.  தஞ்சாவூரைச் சுற்றி மராட்டியர் ஆண்ட காலத்தில் 5783 கிராமங்களில் பரம்பரை மருத்து வர்கள் 1ஙூ ஏக்கர் நிலத்தை இறையிலியாகப் பெற்று மருத்துவம் புரிந்து வந்தனர். இது தவிர மற்ற சித்த மருத்துவர்களும், கிராமங்களில் தம் தொழிலை நடத்தி வந்தனர். ஆனால் இவர்களுக்குப் போட்டியாக ஆயுர்வேத மருத்துவர்களும் அவ்வூரில் மருத்துவம் புரிந்து வந்தனர். இவர்களுக்கு அக்கிராம மக்கள் காய், கனி, பால் மற்றும் தம்மிடமுள்ள மிகையாக விளைந்த விளைப்பொருட்களையும், நன்றிக் கடனாக அளித்து, தங்களை அறுவை சிகிச்சையி லிருந்து காப்பாற்றி கொள்வதாக நம்பினர்.  மருத்து வர்கள் தம்மிடமுள்ள ரகசிய மருத்துவ முறை களைக் கொண்ட சுவடி நூல்களில் உள்ளவற்றை, தங்களை நம்பும் பொருட்டு படித்துக் காண்பித்து, தங்களுக்கான மருத்துவத்திற்கு பணத்தை பெற்றுக் கொண்டனர். கவலை அளிக்கும் எந்த அளவிலும் உள்ள பலதரப்பட்ட நோய்களையும் நாடி பிடித்துப் பார்த்து, நோயை அறிந்து மருந்து வழங்கினர். இவர்களில் சிலர் மிகப் புகழ்பெற்று நாடு முழுவதுமுள்ள செல்வந்தர்களுக்கும் மருத்துவம் அளித்தனர். இக்காலகட்டத்தில் நாட்டு மருத்து வர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியப் படையிலும் பணியமர்த்தப்பட்டனர்.

நோயாளிகளுக்குத் தனியாக மருத்துவமனைகள் அக்காலகட்டத்தில் இல்லாத நேரம். ஆகவே அவர்கள் வீட்டிலேயே மருத்துவம் செய்யப் பெற்றனர். ஒரு விடியலாக மராத்திய மன்னர் சஹாஜி (ளாயாதi -- 1684 - 1712) மருத்துவமனைகளைக் கட்டி, ஹைதராபாத் மற்றும் அரேபியாவிலிருந்து மருத்துவர்களை வரவழைத்தார்.  இந்த மருத்துவ மனைகளில் நோயாளிகள் சோதனை செய்யப் பட்டு, அரசர் செலவில் மருந்தளிக்கப்பட்டது.  இத்துடன் கட்டணமற்ற தங்கும் விடுதிகள் (சத்திரங்கள்) இராமேஸ்வரம் போகும் சாலை யோரங்களில் கட்டப்பட்டு, நடந்து செல்லும் பயணிகளுக்கு நோய் ஏற்பட்டால், அங்குத் தங்கி மருத்துவமும் பெற்றனர். இச்சத்திரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் சாதாரண நோய்களைத் தீர்க்க வல்லதாக எட்டு மருந்தகங்களுடன் அமைக்கப்பட்டு இருந்தன.  சஹாஜி வெளி ஊரிலிருந்து மருத்துவர் களை அழைத்த செயல் பீஜப்பூர் சுல்தானைப் பார்த்துச் செய்த செயலை ஒத்தது ஆகும்.  மேலும் சஹாஜி மன்னர் மராட்டிய அரசர்களில் இரண்டா மவன் என்பதால் உள்நாட்டின் மருத்துவர்களின் திறமையை அறியாமல் இருந்ததே காரணமாகும்.  இத்துடன் துளாஜாஜிக்கு முன்பிருந்தவர்களும் சித்த மருத்துவர்களின் பெருமையை மன்னர் களிடம் கொண்டிருந்த உறவை அறிந்தவர்களாக இல்லை.  அரண்மனையிலிருந்த மருத்துவம் பற்றிய பதிவு குறிப்புகள் (1773-1776) எரிக்கப்பட்டதினாலும் ஆகும்.  மராட்டிய அரசர்கள் தங்கள் பதிவுகளை மோடி எழுத்தில் சுவடியில் பதிவுசெய்து வைத் தார்கள்.  இதில் 1000 சுவடிக்கட்டுகள் இன்னும் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது.  இதில் பெரும் பகுதி இன்றுவரை மொழிபெயர்த்து வெளியிடப்படாமலே உள்ளது.  இவைகள் வெளியிடப்பட்டால் பல அரிய மராத்தியச் சரித்திரக் குறிப்புகள் கிடைக்கக்கூடும்.

மன்னர் துளாஜாஜி இரண்டு மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார் என்றாலும், அதில் மருத்துவத்திற்கு ஆற்றிய பணிகளை, சேவையை அறிய முடிவதில்லை.  இவரால் சுவீகாரம் எடுக்கப் பட்ட அரசர் சரபோஜி - ஐஐ, உள்நாட்டு மருத்துவத் திற்கு முதன்மை கொடுத்து, இதற்கான மருத்துவக் குறிப்புகளைச் சேகரித்து பத்திரப்படுத்தினார்.  இம்மருத்துவ முறைகள் செயல்பாட்டில் இருக்க துப்புரவு காரணமாக பல உத்திகள் கையாண்டார்.  (எ.கா.) மக்களின் துப்புரவு மற்றும் உடல்நலத்தைப் பேண, சரபோஜி தஞ்சையிலுள்ள கோட்டைக்குள் இருந்த சேப்பாண நாயக்கன் ஏரி, சிவகங்கை குளம் ஆகியவைகளை ஊரில் உள்ள பல நல்ல தண்ணீர் கிணறுகளுடன் இணைத்து போதுமான தண்ணீரைப் பொது மக்களுக்குக் கிடைக்க வழியமைத்தார்.  இது தவிர தஞ்சையில் 6 மைல்கள் சுற்றளவிலுள்ள பெண்கள் கருவுற்ற 9 மாதத்திலிருந்து குழந்தை பிறந்த பின் மூன்று மாதங்கள் வரை தாய்க்கும், சேய்க்கும் பாலை இலவசமாக அளித்தார். இதை அவர் மகன் சிவாஜியும், தான் இறக்கும் வரை, அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தஞ்சையை முழுவதுமாக ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றும் வரை இச்சலுகைகள் வழங்கப்பட்டன.  தஞ்சையில் அன்றைய காலகட்டத்தில் குருகுல முறைப்படி போதிக்கப்பட்ட மருத்துவம், மறை பொருளாக எழுதி வைக்கப்பட்டு, பலநூறு ஆண்டுகள் இச்செயலே நீடித்ததால் பலருக்கு, பல தரப்பட்ட மருத்துவ முறைகளுடன் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவமும், சிலருக்கு சக்தியற்றதாகவும், மந்திரத்தன்மையுற்றதாகவும், பல மருந்துகளைக் கொண்டு குறுக்கு வழியில் குணப்படுத்தக்கூடிய தாகவும் மருத்துவம் அமைந்தது.  மருத்துவம் பொதுமைப்படுத்தப்படாது மருத்துவப் பள்ளிகள் இன்றி முறைப்படி மருத்துவம் போதிக்காததே இதற்குக் காரணம்.  மேலும் அன்றைய மருத்து வர்கள் தன்னிடம் உள்ள ஓலைச்சுவடிகளை, மருத்துவச் சுவடி நூல்களை வழிவழியாக வழிபட்டு வந்தனர். இந்நூல்கள் மற்றவர்கட்கு கொடுத்து வாங்கல் என்பதும் இல்லாது இருந்தது.  இந்நூல்களில் மருத்துவத்தைக் கண்டறிதல், குணப்பாடு, அதனால் ஏற்படும் முன்னேற்றம் ஆகியவைகள் முறையாக வகைப்படுத்தப்பட்டு எழுதப்படாது இருந்ததும் ஒரு குறையாகவே காணப்பட்டது.  பெரும்பாலான மருத்துவச் சுவடிகளில் நோயின் அறிகுறி, மருத்துவம், குணப்பாடு ஆகியவை அங்கு மிங்குமாக இருந்தது.  ஒருவேளை மருத்துவத்தை அறிந்து எழுதியவருக்குப் பிறகு அதைப் பின் பற்றும் சீடர்கள் தனக்கு ஆர்வம் உள்ளதை அல்லது தனக்கு வேண்டியதை மட்டும் ஓலைச் சுவடியில் படி எடுத்திருக்கலாம்.

மேலும், அக்காலகட்டம் மருத்துவர்களுக்கு எந்தத் தேர்வு எழுதி சான்றிதழ்கள் பெறவோ அல்லது மருத்துவம் புரிய உரிமையோ பெறத் தேவையின்றி இருந்தது.  இதன் காரணமாகப் பல மருத்துவர்கள் மிகக் குறைந்த அளவு மருத்துவ அறிவுடன் இருந்ததால் பண்டைய முடிவுகளைப் பற்றி தனக்குத் தெரிந்த வரை கையாண்டு மருத்துவம் புரிந்தனர்.  இதனால் சித்த மருத்துவத்தில் பல போலி மருத்துவர்கள் உருவாகக் காரணமாகி, யார் உண்மையான மருத்துவர், யார் போலியானவர் என்று பிரித்துப் பார்க்க இயலாது போய்விட்டது.

சித்த மருத்துவர்களுக்குப் போட்டியாக மருத்துவம் புரியும் ஆயுர்வேத மருத்துவர்கள் அரசர்களுக்குப் பெரும்பாலும் மருத்துவர்களாக இருந்துள்ளனர்.  இவர்கள் சிறந்த பண்டிதர் களைக் கொண்டு மருத்துவம் கற்றுக்கொண்டனர்.  இவர்கள் பெரும்பாலும் பிராமணர்களே.  ஆகவே இவர்கள் உயர்ந்த நிலையில் அரசர்களாலும், மற்றவர்களாலும் போற்றப்பட்டிருக்கின்றனர்.  ஆனால் இரண்டு மருத்துவங்களின் கொள்கை மற்றும் மருத்துவம் ஒன்றே என்றாலும், சித்த மருத்துவத்தின் உபயோகம் 10-ஆம் நூற்றாண்டி லிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  யுனானி மருத்துவம் முகமதிய மன்னர்களால் போற்றப் பட்டு வளர்ந்தாலும், இதில் சிலர் சிறந்து விளங்கினாலும் தஞ்சையில் தமிழ் மருத்துவர் களுக்குப் போட்டியாளர்களாக இருக்கவில்லை.

ஐரோப்பிய மருத்துவர்கள் பெரும்பாலும் இராணுவத்தில் பணியாற்றினாலும், அவர்கள் தொழிற்சாலைகளிலும் மற்றும் நகரங்களிலும் மக்களுக்காகப் பணிபுரிந்தனர்.  இது 1780-க்குப் பிறகு சற்று கூடுதலாக இருந்தது.  ஆகையால் அவர்களுக்கு உள்நாட்டு மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டு, தகுந்த மருத்துவர்களிடம் தமிழ் மருத்துவ செயல்பாடுகளைக் குறித்து அறிந்து கொண்டனர்.  ஆனால் மக்களுடன் மொழி காரணமாக நேரடித் தொடர்பு கொண்டு, மருத்துவ சேவை செய்ய இயலாது தடுமாறினர்.  ஆனால், மன்னர்கள் இம் மருத்துவர்கள் சேவை தேவை இல்லாவிடினும் ஒரு பெருமைக்காக இம்மருத்துவர்களை தங்களுக்குச் சேவை செய்ய பணியில் அமர்த்திக் கொண்டனர்.  இதன்படி மன்னர் சரபோஜி - ஐஐ தங்கள் அரண் மனை ராயல் மருத்துவர்களாக டாக்டர் செல் மற்றும் க்ரியை நியமித்துக் கொண்டார்.  ஆனால் இக்காலக் கட்டத்தில் மருத்துவம் தெரிந்த மிஷனரிகள் இங்குப் பணியாற்றவில்லை.  ஆனாலும் ஐரோப்பிய மருத்துவர்கள் மராத்திய மன்னர்களிடம் சித்த மருத்துவத்திற்கு புத்துயிர்வூட்ட உதவினர்.

மராட்டியர் - மருத்துவம்:

உள்நாட்டு மருத்துவத்தை ஒட்டியே அக்கால கட்டத்தில் ஐரோப்பிய மருத்துவமும் இருந்தது.  அவர்கள் இரத்தம், பித்தம், சளி, எரிப்பாற்றல் ஆகியவைகளே உடல் கேட்டிற்கான காரணம் என்று கூறினர்.  இதற்கு வாந்தி எடுப்பது, இரத்தத்தை வெளியேற்றுவது, அட்டை (டுநநஉh) மருத்துவம், பேதி கொடுப்பது மருத்துவமாகக் கடைப்பிடிக்கப் பட்டது.  இங்குள்ளவைகளைப் போலவே இயற் கையில் கிடைக்கும் மூலிகை, உலோகம் ஆகியவை களே மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன.  இரும்பு - இரத்த சோகைக்கும், சிங்கோனா மலேரியா விற்குமே அந்நிலையில் மருந்தாக இருந்தது. அறுவை சிகிச்சை கூட கை, கால்களுக்கானதாக இருந்தது.  உடல், உள்உறுப்புகள் கேடு அணுகத் தகாததாகக் கருதப்பட்டது.  அறுவை மருத்துவர்கள் 1745-ஆம் ஆண்டு வரை நாவிதர்களுக்கு இணை யாகவே கருதப்பட்டனர். தொடக்க நிலையைக் கடந்து உடல் கூறு, உடல் இயங்கியல், வேதியல், பௌதீகம் இருப்பினும், அவை மருத்துவம் புரிய துணை செய்யவில்லை.  நோய் அறிதல் என்பது அறிகுறிகளை மட்டும் குறிப்பிடுவதாக இருந்தது.  மருத்துவமும் அனுபவத்தை ஒட்டியே அமைந்தது.

1753-இல் கல்வியைக் குறித்த ஜேம்ஸ் லின்ட் (துயஅநளடiனே) நூலும், எட்வர்ட்ஜென்னரின் (நுனறயசன துநnநேச) அம்மை குத்தல் குறித்த நூல்கள் மட்டுமே மருத்துவம் குறித்த நூல்கள். மற்றைய ஏதும் குறிப்பிடத்தக்கதாக இல்லை என்று கூறலாம்.  அடிசன் (ஹனனளைடிn), பிரைட் (க்ஷசiபாவ) மற்றும் குல் (ழுரடட) போன்றோரின் நூல்கள் பிந்தையதே.  1848 வரை மருந்துபோடும் துளையுடைய ஊசிகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனால் ஐரோப்பிய மருத்துவர்கள் தாங்கள் நோயாளிகளிடம் கண்ட அறிகுறி குணப்பாடுகளை பதிவு செய்து ஆராய்ந்தனர்.  அவைகளைச் சான்றுகள் மூலம் மெய்ப்பித்துக் கொண்டார்களேயன்றி நம்பிக்கையினால் அறி வியலை வளர்த்துக் கொள்ளவில்லை.  ஹெக்னி மேன் போன்றோர் அந்நிலையில் பரிசோதனை மூலம் மருந்துகளை ஆராய முற்பட்டு, பல மருந்து களைக் கண்டுபிடித்தனர்.  ஃபிரடரிக் வில்கிம் (குசநனநசiஉம றுiடாநiஅ), சர்டுனர் (ளநசவரநசநேச) (1805) மூலிகையிலிருந்து நோய்களைக் குணமாக்கும் பொருள்களைத் தனித்து, பிரித்து எடுத்து ஆய்ந்து மருந்து தயாரிப்புக்கு வித்திட்டனர்.

சரபோஜியின் சித்த மருத்துவத்திற்கான கொடை:

மேற்கூறப்பட்ட நிலையிலேயே மருத்துவச் சேவை சரபோஜி ராஜ்யத்திலும் ஐரோப்பாவிலும், நடைமுறையில் இருந்தது.  தந்தை இறக்கும் பொழுது சரபோஜி சிறுவனாக இருந்ததால், வளர்க்கும் பொறுப்பை சீர்திருத்த கிருத்தவ மிஷனரியான ஸ்வாட்ஜ் பாதிரியிடம் ஒப்படைத்தார்.  இவர் வழிகாட்டலில் சரபோஜி சென்னையில் ஐரோப்பிய அறிவுஜீவிகளுடன் படித்து, மேலும், மேலும் புதியவைகளை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டார்.  பிறகு பல இந்திய ஐரோப்பிய மொழிகளைக் கற்றுணர்ந்தார்.  இதன் மூலம் பல மொழி மருத்துவ நூல்களைக் கற்க முனைந்தார்.  இந்நிலையில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வளம் கொழிக்கும் தஞ்சை ஆட்சி முழுவதும் அரசரிடமிருந்து, தன் வசம் ஆக்கிக் கொண்டது.  இருப்பினும் கம்பெனி அரசருக்குத் தன் அறிவு சார்ந்த வேலைகட்கு, செய்கைகளுக்குத் தேவையான பொருளுதவி அளித்தது.

மூலிகைத் தோட்டம்:

ஐரோப்பிய கல்வி பெற்ற அரசர் சரபோஜி பல நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகளை அறிந்து சோதனை செய்ய முனைந்தார்.  இதற்காகத் தன்வந்திரி மஹாலின் ஒரு பகுதியில் மருத்துவ சோதனைக்கான மையத்தைத் திறந்து, அதில் 12 இந்திய மருத்துவர்களை நியமித்தார்.  அவர்கள் நோய்களுக்கான தகுந்த சிகிச்சையை அளித்தனர்.  இதனை ஐரோப்பிய மருத்துவர்கள் நோயாளி களின் குறிப்பேட்டில், நோயின் தன்மைகளைக் குறித்து வைத்தனர்.  இதன்படி மன்னர் மருத்துவக் குறிப்பேட்டிலுள்ள மருந்துகளில் சிறந்தவை

களில் 5000 மருத்துவக் குறிப்புகளைச் சேகரித்தார்.  இதைத் தமிழ் மருத்துவர்களும் சரிபார்த்தனர்.  இக்குறிப்புகள் பல வகையாகப் பிரிக்கப்பட்டு 18 நூலாக ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டன.  நோயாளிகளிடம் சரியான மருந்து கொடுத்து சோதனை செய்ய மூலிகைத் தோட்டம் பராமரிக்கப் பட்டு, மருந்தும் தயாரிக்கப்பட்டது.  மூலிகைகள் சுத்தம் செய்யப்பட்டு, அவைகள் தரப்படுத்தப் பட்டு, மிகச் சிறந்த முறையில் அத்துறையில் சிறந்த மருத்துவ வல்லுநர்களின் ஒப்புதலுக்குப்பின் மருந்துகள் தயாரிக்கப்பட்டன. இன்றைக்கு ஈடாக மாத்திரைகளில் அம்மருந்துகளின் பெயரும் தயாரிக்கப்பட்ட தேதியும் குறிப்பிடப்பட்டன.

இவைகளில் சில மருந்துகள் எந்நிலையிலும் கெடாதவாறு தயாரிக்கப்பட்டு, மன்னரின் வாரிசு களால் அம்மருந்துகள் அண்மைக்காலம் வரை கொடுக்கப்பட்டு வந்துள்ளன.  சரபோஜி மருத்துவர் களுக்குச் சரியான மூலிகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த, சிறந்த ஓவியங்களைக் கொண்டு அரிய மூலிகைகளின் படத்தை அதன் நிறத்தை ஒட்டி வண்ணத்தில் தத்ரூபமாக வரைந்து, அதனடியில் அதன் பயன்களையும், பெயரையும் குறித்து வைத்துள்ளார்.  அப்படங்கள் அடங்கிய புத்தகம் இன்றும் சரஸ்வதி மஹால் நூலகத்தில் புதிய படங்களைப் போல காட்சியளிக்கின்றன.  இதே போல உடற்கூறுகளைக் குறித்த படங்களும் நூல் வடிவத்தில் நிறத்திலும் கருப்பு வெள்ளையு மாகவும், சில வண்ணத்திலும் இருக்கின்றன.  நோயாளிகளைப் பற்றிய குறிப்புகள் படத்துடன் குணப்பாடுகள் எழுதப்பட்டு, அவைகள் பிற்கால சந்ததியினருக்கு ஆய்வுக்கு உதவும் விதமாக உள்ளது.  கண்நோய்களைப் பற்றியது இவை களில் குறிப்பிடத்தக்கது.

சரபோஜி யாத்திரை:

இந்தியாவில் கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கிய காசிக்கு 1820-இல் பரிவாரம், எழுத்தர் மற்றும் அறிஞர்களுடன் யாத்திரை சென்றார்.  அப்படிச் சென்று வருகையில் பழைமை வாய்ந்த அகஸ்தியர், தேரையர், பிரம்மமுனி, மச்சமுனி, தன்வந்திரி, சட்டைமுனி, யூகிமுனி, திருமூல முனி, கெங்கணவர் ஆகியோரின் மருத்துவ சுவடிகள் திரட்டிக் கொண்டுவரப்பட்டன.  சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு மருத்துவம், அறுவை சிகிச்சை, தாவர இயல், உடல்கூறு, மிருக மருத்துவம் ஆகியவைகள் குறித்த நூல்களை வாங்கியதோடு அவைகளை அவரே படித்து முக்கிய மான கருத்துக் களைக் கோடிட்டு வைத்துள்ளார்.  இத்துடன் மன்னர் பழைய ஓலைச்சுவடி நூல்களையும் வாங்கி நூலகத்தின் பயன்பாட்டிற்கு உதவியுள்ளார்.

மருத்துவக் குறிப்பு சரிபார்க்கப்பட்டது:

சுவடிக் குறிப்புகள் மூலம் நோயாளிகளுக்கு ஆய்வு செய்யப்பட்டு சரியான மருந்து தேர்ந் தெடுக்கப்பட்டது.  இம்மருத்துவக் குறிப்புகளைக் கீழ்க்கண்ட அறிஞர்கள் சரிபார்க்க தன்வந்திரி மஹாலில் பணிபுரிந்தனர்.

வேலாயுத வைத்தியர் (1827), திருவேங்கடம் பிள்ளை, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், சுப்பராய கவிராயர், தாமோதரம் பிள்ளை, ரெங்கையா நாயக்கர், அய்யாக்கண்ணு பிள்ளை, பஞ்சநாதம் பிள்ளை, வேலாயுத வைத்தியர் (1827) மற்றும் சித்த மருத்துவர்களான அப்பண்ண வைத்தியர், அனுச்சாமி வைத்தியர், முத்துசாமி அய்யர், கஷிதர கோவிந்த ராவ், சுப்பையா வஸ்தாது, வைத்தியர் வாசுதேவபிள்ளை, அபிராம மேஸ்திரி, பரங்கிப் பேட்டை அப்பு வைத்தியர், தௌளதுராவ், வைத்தியர் முத்துசாமி தீட்சிதர் மற்றும் வஸ்தாது ஞானி ஆவர்.

மன்னர் சரபோஜி இவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 5000 மருத்துவக் குறிப்புகளின் குணப் பாட்டை அறிந்து தான் முழுவதும் அதை ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து 900 குறிப்புகளை தன் இனத்தாருக்குப் பயன்தரும் வகையில் மராத்தி மொழியில் உரைநடையில் மொழிபெயர்த்தார்.  ஆனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது,  பாடலாக சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தின் வழியாக “சரபேந்திர வைத்திய ரத்னாவளி” என்ற நூலாக  1957-இல் வெளியிடப்பட்டது.  பாடலாக்க உதவியவர்களில் முக்கியமானவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்.

இவ்வளவு மருத்துவம் தொடர்பான தன் வந்திரி மஹால் எங்கிருந்தது என்பதை எஸ்.கணபதி ராவ் மோடி ஆவணங்களை ஆராய்ந்த பிறகு இன்றைய சரஸ்வதி மஹால் உள்ள இடத்திலேயே நடைபெற்று வந்தது என்று கூறுகிறார்.  இதுவே கிராமங்களில் நடைபெற்ற ஆரோக்கிய சாலை களுக்குத் தலைமைப் பீடமாகத் திகழ்ந்தது.  இந்த ஆரோக்கிய சாலையில் மருத்துவர், டிரஸ்சர், மருந்தாளுநர், கணக்கர், உதவி புரிபவர் ஆகியோர் பணிபுரிந்தனர்.

ஊதியம்:

இதில் பணிபுரிந்தவர்களுக்கான ஊதியம் மோடி ஆவணங்களின் மூலம் அறியப்படுகிறது.  மருந்து தயாரிக்கும் பரங்கிப்பேட்டை வைத்தி யருக்கு மாதம் 50 ரூபாய் கொடுக்கப்பட்டது.  மாறாக சாதாரண மருத்துவருக்கு இவரை விட குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டது.  ஆனால் ஐரோப்பிய மருத்துவர்களுக்கு மிக அதிகமாக ஊதியம் கொடுக்கப்பட்டது.  இவர்கள் டாக்டர் மெக்பின் மற்றும் டாக்டர் பிரோக்கிலின். இதில் டாக்டர் மெக்பின் ஒரு கண் மருத்துவர்.  இவரைப் போல கண் மருத்துவராக அப்பு சாஸ்திரிகளும் பணிபுரிந்துள்ளார்.

பல்கலைக்கழகம்:

கணபதிராவின் மோடி ஆவண ஆய்வின்படி சித்த மருத்துவ ஆய்வுகளுடன் சரபோஜி மன்னர் நவ வைத்திய கலாநிதிசாலை என்ற சிறு பல்கலைக்ழபகத்தை ஆரம்பித்து மருத்துவக் கல்வியைப் போதித்ததாகக் கூறுகிறார்.

மன்னர் தன்வந்திரி மஹால் குறித்த செயல் பாடுகளை சுவாமி வைத்தியர் ஆலோசனையுடன் நடத்தியுள்ளார்.  மன்னர் இறந்த பிறகும் கூட தன்வந்திரி மஹால் மருத்துவமனை செயல் பாட்டில் இருந்துள்ளது என்பதை உடற்கூறு குறித்த நூல்கள், அறுவை சிகிச்சைக்கான உப கரணங்கள் மற்றும் நூல்கள் வாங்கப்பட்டுள்ளதை மோடி ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

மன்னர் ஆய்வுக்குட்பட்ட அன்றைய மருந்துக் குறிப்புகள் 18 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, “சரபேந்திர வைத்திய ரத்னாவளி” எனும் நூலாக தற்பொழுது காணக்கிடைக்கிறது.

Pin It