பலியிடுவதற்கான பீடங்களை
கட்டுமானம் செய்கிறது
குளிர் கூடிய இவ்விரவு.

ஒன்றோடொன்று
ஆலிங்கனம் செய்தபடியே
நழுவுகின்றன
ஒரு கனவும் இன்னொரு கனவும்.

விடியலுக்கானக் கீற்றை
மையிருட்டில்
வனைந்துக் கொண்டிருக்கிறது
ஒரு ஆழ் நித்திரை.

முகங்கள் உருகி
முகங்கள் மீள்-உருவாகின்றன
ஒவ்வொரு பொழுதும்.

பீடங்களினின்றும் எழும்
பிரேதங்கள்
வாகனங்கள் நோக்கி
நகர்கின்றன.

வாயகன்றுக் காத்திருக்கும்.
அலுவல்களின் இரையென

-
இளங்கோ

Pin It