உறங்காமல் எப்போதும்
விழித்திருக்க நினைக்கிறேன் நான்.
நான் என்பது
பெயர் தாங்கியப் பலகை என்பதல்ல.
என் உயிர்கள் அடங்கிய
உடல், வீடு, உறவு...
என எல்லாம் தான்
என்னாலும்
என்னைச் சுற்றியும் வலைப்பின்னல்களாய்
வலம் வருகிறது பார்வையின் துகள்கள்.
விழிப்பின் இரகசியம்
அறிந்திருக்கவேண்டும் எவரும்
அறிஞர்கள், ஆன்மீகவாதிகளின்
விழிப்பு என்பது
அர்த்தங்கள் எல்லாம் வெவ்வேறானவை
கடும் சூழலில்
முட்டிமோதும் பிரச்சினைகளில்
இறுகிப்போய் கருகாமல்
வெளிச்சம் தேடி உடலென்பது
உறக்கம் கொள்ள மறுக்கிறது.
உறங்காமல் கிடப்பதைவிட
உறக்கத்திலும் தேவை விழிப்பு.