நீரில் மிதந்த நிலவை
இரவெல்லாம் துவளாது
கரையேற்றிய அலைகளுக்கு
பரிதியை பரிசாய் தந்தது
விடியல்

*

பேருந்துப் பயணத்தில்
சாளரக்கண்ணாடி
இடையிலிருந்தும்
எதிர்வரும் முட்செடிக்கு
முகத்தை விலக்கும்
பழகிய மூளை