அடுக்குமொழி அண்ணாதுரை!

பேரறிஞர் அண்ணா அவர்களை, ஒருகாலத்தில்  மக்கள் ‘அடுக்குமொழி அண்ணாதுரை’  என்று அழைத்தனர். அவர் வெறும் அடுக்குமொழிக்குச் சொந்தக்காரர் மட்டுமில்லை, சமூக அடுக்குகளைச் சாய்க்க வந்த சமூகப் போராளியும் கூட என்பதைப்  பிறகு நாடு புரிந்துகொண்டது.

(27.09.17 அன்று சென்னை பாடியில் நடைபெற்ற தி,மு.க. பொதுக்கூட்டத்தில் சுபவீ)

***

பாவம் சிவாஜி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத் திறப்பு விழாவிற்கு (அக்.1) ஓர் அமைச்சர்தான் வருகிறாராம். வட்டச் செயலாளர் யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது!

(ட்விட்டரில் சுபவீ)

***

குதிரை பேர அரசும், குதிரை தேடும் அரசும்!

நாட்டின் அரசியலை எதிர்கொள்ள  நமக்கு இன்று பெரியாரின் துணிவு தேவைப்படுகிறது. அந்தத் துணிவும் இருவகைப்பட்டது. ஒன்று, தமிழக ஆளுங்கட்சியின் இன்றைய அரசியல்  கூத்தைச் சகித்துக் கொள்ளும் துணிவு. இன்னொன்று, நம்மை நோக்கி வந்துகொண்டுள்ள காவி ஆபத்தைச் சந்தித்து வீழ்த்தும் துணிவு!

இங்கே உள்ள அரசு,  குதிரை பேர அரசு என்பார் நம் தளபதி. அங்கே உள்ள அரசோ, இங்கே ஆட்சி அமைப்பதற்குப் பெரிய நடிகர் யாரேனும் கிடைக்க மாட்டார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறது. ஆம், இது குதிரை பேர அரசு, அது குதிரை தேடும் அரசு!

- குன்றத்தூர் போதுக் கூட்டத்தில் சுபவீ.