மார்ச் 1 ஆம் தேதி காலை, கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ பகுதியில் மாற்றுத் திறனாளிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். பேசி முடிந்த சில நிமிடங்களில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. “இன்றைக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறாய் . உன் பேச்சு என் மனதைத் தொட்டது. உடல் ஊனமுற்ற அந்த மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது செய்கிறேன்” என்று அவர் சொன்னபோது வியப்பிலிருந்து விடுபட எனக்கு ஒரு நிமிடமாயிற்று.

அன்று மாலையே முதல்வரின் அறிக்கையைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்த அறிக்கையில் -

“இன்று காலையில் ‘கலைஞர் தொலைக்காட்சியில்’ தம்பி சுப.வீரபாண்டியனின் ‘ஒரு சொல் கேளீர்’ எனும் சொற்சித்திரத்தைக் காணவும், கேட்கவுமான வாய்ப்பைப் பெற்றேன். உடல் ஊனமுற்றோருக்காக ஏதோ சொல்லப்போகிறார் என அறிந்தவுடன் முழுப் பேச்சையும் கேட்கலாம் என்று அமர்ந்தேன். உடல் ஊனமுற்றோருக்கான உதவிகள் செய்வதற்குத் தொண்டு நிறுவனங்கள் பல முன்வந்துள்ள நிலையிலும் - அரசினரும் அந்தப் பணியினை மேற்கொண்டுள்ள நிலையிலும், தம்பி சுப. வீரபாண்டியனின் இந்தக் கருத்துக் கோவை என்னை மிகவும் கவர்ந்தது.

மாற்றுத்திறன் உடையவர்களுக்கான பணிகள் தற்போது உரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இனியும் அவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுப்பது, தொண்டு இல்லத்தில் வைத்துப் பராமரிப்பது போன்ற பணிகளை மட்டுமே அரசோ, அரசு சாரா நிறுவனங்களோ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதையும் தாண்டி அவர்களின் உரிமைகளை நிலைநாட்டிட அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கும் பாடுபடவேண்டும். அவர்கள் அரசிடமிருந்து எந்த இலவசங்களையும் எதிர்பார்க்கவில்லை.

அவர்களுக்கென இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த சட்டத்தின் ஆட்சியின்படியே அவர் களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கோருகிறார்கள் என்று அவர் சொல்லி முடித்ததும், அவர் அந்தப் பேச்சில் குறிப்பிட்ட Uஐஷ்மிed ஹிழிமிஷ்லிஐவி ளீலிஐஸeஐமிஷ்லிஐ யூஷ்ஆஜுமிவி க்ஷூலிr Perவிலிஐ ழஷ்மிஜு ம்ஷ்விழிணுஷ்யிஷ்ஷ்மிeவி புஉமி 2007ன் விவரங்களை வாங்கிப் படித்துப் பார்த்தேன். ஆம், அவ்வாறு ஒரு சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, அந்தச் சட்டத்தை ஏற்றுக் கையயழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம்பெற்றிருப்பதும் தெளிவாயிற்று” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு செய்தியைக் கேள்விப்பட்ட 24 மணிநேரத்திற்குள் இவ்வளவு விரைவாய்ச் செயல்படும் முதல்வரின் சுறுசுறுப்பு வரலாற்றுச் சிறப்புடையது. அந்த அறிக்கையோடு நின்றுவிடாமல் திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாபெரும் கூட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய சட்டமன்றப் பேரவைத் திறப்பு விழாக் கூட்டத்தில், இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியாகாந்தியும் அமர்ந்திருந்த மேடையிலேயே, அவர் அந்தச் செய்தியை மீண்டும் வலியுறுத்தினார்.

அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ சொன்னால்தான் என்றில்லாமல், சாதாரணக் குடிமக்கள் சொல்லும் செய்தியிலிருந்தும் நல்லவைகளை எடுத்துக் கொண்டு செயலாற்றும் தமிழக முதல்வரின் தாயுள்ளத்தால், தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 20 இலட்சம் மக்கள் பயனடைய இருக்கின்றனர், எனும் செய்தி - இனிக்கிறது நெஞ்சமெல்லாம் !

- சுப.வீரபாண்டியன்

Pin It