அப்போதெல்லாம் தாத்தாக்கள்
அடிக்கடி சொல்வதுண்டு
வெள்ளைக்காரனே
பரவாயில்லை என்று !
தந்தை பெரியார் கூட
தயங்காமல் சொன்னதுண்டு
சுதந்திரதினமன்று
இது துக்கதினம் என்று
எண்ணியதுண்டு அப்போது
என்ன இது இப்படி என்று !
முள்ளிவாய்க்கால் சுற்றம்
அழிக்கப்பட்டபோதும்
முள்ளிவாய்க்கால் முற்றம்
இடிக்கப்பட்டபோதும்
ஆணவ அரசால்
மீனவ நண்பர்கள்
காணாமல்போய்க்
கைவிடப்படும்போதும்
என்னசெய்தது
இந்த சுதந்திரம்
இங்கேயும் அங்கேயும்
அப்போது ?
இப்போதும்கூட
வெள்ளைக்காரன்தானே
வீரமாய் வெளிப்பட்டான்
கேமரூன்தானே
கேள்விகள் கேட்டார்.
அமெரிக்கா கூட
அதட்டுகிறதே இலங்கையை.
ஆனாலும் இந்தியா
அசையக்கூட மறுக்கிறதே.
அப்போதெல்லாம் தாத்தாக்கள்
அடிக்கடி சொல்வதுண்டு
வெள்ளைக்காரனே
பரவாயில்லையென்று
முழுதாய்ப்புரிகிறது இன்று
மூத்தோர்சொல் அமுதம் என்று !