04.10.13 அன்று கரையான்பட்டி வன்னியர்கள், புதுப்பட்டி அருந்ததியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தில் அந்த மக்கள் உயிருக்கும், உடமை களுக்கும் ஆபத்து ஏற்பட்டதை உணர்ந்து ஊரைக் காலி செய்து அருகில் உள்ள சங்கால் பட்டி மலைப் பகுதியில் 300 குடும்பங்கள் குடியேறினார்கள். 21ஆம் நூற்றாண்டின் நவீன இந்தியாவில் சாதிக் கொடுமையில் ஒரு சமூகம் ஊரைக் காலி செய்து மலை யடிவாரங்களை நோக்கிச் சென்று விட்டால், இதைவிட இந்த ஆட்சியாளர் களுக்கும், இந்திய நாட்டிற்கும் கேவலம் வேறேதும் இல்லை. ஆனால் அரசும், அரசியல் கட்சிகளும் இம்மக்களின் கோரிக்கைகளை ஒரு போதும் செவிமடுக்க வில்லை. ஏன் மலை உச்சியில் குடியேறி னீர்கள் என்று எவரும் கேட்க வில்லை. நாதி யற்ற சமூகமாக காட்டிலேயே நான்கு நாட் கள் வாழ்ந்தனர்.

வீட்டின் முன் உட்கார்ந்து பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ணிடம், கரையான்பட்டி சாதி இந்து ஒருவன், மாராப்பு சேலையைப் பிடித்து இழுத்து முறை தவறி நடக்கிறான். அங்கே காவலுக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவன் மீது பெண்கள் மீதான தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3(1)11 என்கிற பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் கண்காணிப் பாளர், 3(1) 10 என்கிற பிரிவில் வழக்குப் பதிவு செய்கிறார். இந்த வழக்கில் இவன் நிச்சயமாகச் சிறைக்குச் செல்லாமலே, பிணையில் வெளிவந்துவிடுவான். 3(1)11 பிரிவில் வழக்குப் பதிவு செய்தால் பாதிக் கப்பட்ட பெண்ணிற்கு அரசு வருவாய்த் துறை மூலம் இழப்பீட்டுத் தொகையாக 50,000 ரூபாய் கிடைக்கும். வன்கொடுமைப் பிரிவில், இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால் சாதாரண பிரிவில் வழக்குப் போடுவதன் மூலம் சாதி வெறியர் களைக் காவல்துறை காப்பாற்றுகிறது.

மூன்றாவது நாள் மலையடிவாரத்தில் மக்களோடு மக்களாக தமிழ்ப்புலிகள் களத்தில் நின்றனர். தோழர் சி. பேரறி வாளன், மா. முகிலரசன். பெரியார் மணி, இலக்கியன், அக்கினிபுத்திரன், விஜயக் குமார், போஸ், அழகர், தலித் போராளிகள் - கணேசன், சி.பி.எம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி எம்.ஆர். முத்துச்சாமி. சின்னக் கருப்பன். ஆதித்தமிழர் பேரவை விடுதலை வீரன் ஆகிய தோழர்கள் மக்கள் கோரிக் கைக்கு வலுச் சேர்த்தனர். பேச்சு வார்த்தைக்கு வந்த கூடுதல் கண்காணிப் பாளரைத் திருப்பி அனுப்பி னர். பின்னர் இரவு 7 மணிக்குத் துணை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி உட் பட அனைத்து அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். சாதி இந்துக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாத அரசு கேந்திரம் தோல்வியால் தலை குணிந்து திரும்பிச் சென்றது.

மருத்துவர் ராமதாசு அந்த வட்டா ரத்தில் உள்ள அனைத்து சாதி இந்துக் களையெல்லாம் ஒன்று திரட்டி, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராகக் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். தமிழ்ப் புலிகளும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நிலக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு, காவல்துறை, சாதி இந்துக் கூட்டமைபைக் காரணம் காட்டி, அனுமதி தர மறுக்கிறது. ஆனால் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தோழர் பேரறிவாளன் முயற்சியால் இன்றைக்கு ஆணையத்திலிருந்து குழு அனுப்பப்பட்டு கரையான்பட்டி அட்டூழியத்தை ஆய்வு செய்துச் சென்றுள்ளார்கள்.

விரையில் சாதி இந்துக்களின் வெறித் தனத்திற்கு ஒரு முடிவு கிடைக்-கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த 24.11.2013 ஞாயிறு அன்று கரையான்பட்டி சாதி இந்துக்கள் நடுப்பட்டி அருந்ததியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு, சுமார் 2000 இந்துக்கள் கோவிலிலே கூடியிருந்தனர். அதற்கான நேரம் பார்த்திருந்தவர்கள், அருந்ததியர் இளைஞர்கள் வன்னியப் பெண்களைக் கேலி செய்துவிட்டனர் என்ற பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, நடுப்பட்டிக்குள் புகுந்து, பெண்களையும், குழந்தைகளையும், ஆண்களையும், முதியோர்களையும், ஆடு, மாடுகளையும் அடித்து வெளியே விரட்டினர். பிறகு, பணம், நகை, கனிணி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரப் பொருட்களை யும் கொள்ளையடித்தனர். பிறகு இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளைத் தீ வைத்துக்கொளுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கித் தரைமட்ட மாக்கிவிட்டனர். ஏற்கனவே காவலுக்கு நின்ற காவல்துறையினர் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டனர். இந்த மக்களைக் கொலை வெறியர்களிடமிருந்து காப்பாற்ற வரவில்லை. ஒரு சனநாயக நாட்டில் சாதியால் மக்களைக் கூறுபோடுகிற போக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. அதற்குக் காரணமான ஆணிவேராக விளங்கும் இந்து மதத்தை இந்த மண்ணிலிருந்து அகற்ற நாம் தமிழர்களாய் ஒன்றுபட வேண்டியது உடனடித் தேவையாய் இருக்கிறது.

- நாகை திருவள்ளுவன், பொதுச்செயலாளர், தமிழ்ப்புலிகள்

Pin It