parvathi_304எரிமலையை ஈன்றெடுத்த

ஒரே தாய்

உலகத்தில் நீதான் !

 

தலைவனை ஈன்றதால்

அனைவர்க்கும் தாயானாய் !

 

உலகம்

உனக்கழுத கண்ணீரில்

ஒரு சொட்டும் பொய்யில்லை !

 

எங்களுக்குத் தெரியும்...

எந்த நெருப்பும் உன்னை

எரித்திருக்க முடியாது !

 

ஓரிடத்தில் பிறந்தவள் நீ...

இன்று

உலகெல்லாம் வாழ்கின்றாய் !

 

தமிழினமே கூடிநின்று

உனக்குத்

தலைவணக்கம் செய்கிறது !

 

- திராவிட இயக்கத் தமிழர் பேரவை