முன்பின் உங்களுக்கு எந்த வகை யிலும் அறிமுகமில்லாத, உங்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைக்காத யாராவது ஒரு நபரை அப்படியே அடித்து நொறுக்கி விடவேண்டும், நரநரவென்று கடித்து மென்றுவிடவேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கிறதா?  எனக்கு வந்திருக்கிறது.

நீங்கள் அன்றாடம் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பணிக்குப் போய்த் திரும்புபவரா?  அல்லது பல் வேறு பணிகளின் பொருட்டு மாநகரப் பேருந்தில் அன்றாடம் பயணிப்பவரா? அப்படியானால் உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

சென்னை மாநகர வரிவாக்கப் பகுதிகளில், சமீபத்தில் வேளச்சேரி பகு தியைப் போன்ற நெரிசல் வேறெங்கும் இருக்கமுடியாது என்று சொல்லலாம்.  காலையில் பேருந்து பிடித்து பணிக்குப் போகிறவர்களும், பள்ளிக்குப் போகிற மாணவர்களும், அதேபோல் மாலை யில் பணி முடிந்து, பள்ளி முடிந்து வீடு திரும்புகிறவர்களும் என கூட்டம் விரிய, நண்பகல் சிறிது நேரம் மட்டும் காற் றாடப் பேருந்துகள் பயணிக்கும்  என் பதைத் தவிர மற்றபடி கூட்டம், கூட்டம், நெரிசல், நெரிசல் என ஒரே தொத்தல் பயணம்தான்.

மாலை மங்கி தெரு விளக்குகள் போட்டு, கடை, வணிக நிறுவனங்கள், ஒளியில் பிரகாசிக்கும் நேரம்.   5ஏ பேருந்தில் சைதாப்பேட்டையில் ஏறி னேன்.  தி.நகரில் புறப்படுகிற போதே இருக்கைகள் அனைத்தும் நிரம்பி நிற் போருடன் வருகிற பேருந்து வழக்கம் போலவே திணறலுடன் வந்தது. எப் படியோ  கூட்டத்தில் முண்டியடித்து  ஏறி இடுக்குகளில் நுழைந்து ஆண்கள் இருக்கை ஓரமாக ஒரு புறம் நின்று கொண்டேன்.

இதுமாதிரி சந்தர்ப்பங்களில் இருக் கையில் அமர்ந்திருப்பவர்களின் முகங் களை, அசைவுகளை எடை போட்டு அவர்களில் யாரும் இறங்குகிற அறிகுறி தென்படுகிறதா எனப் பார்த்து அவர்கள் பக்கமாக போய் நின்று கொள்வதும், அவர்கள் இறங்க யத்தனிக்கும்போது பக்கத்திலிருப்பவர்களை விலக்கிப் புகுந்தோ பாய்ந்தோ கிடைத்ததைக் கைப்பற்றுவதும் ஒரு பெரிய சாகசம்.

சிலர்  இதற்கு எளிமையாய் வழி ஒன்றை வைத்திருக்கிறார்கள்.  இவர்கள் தங்கள் தோளில் தொங்கும் அல்லது கையில் இருக்கும் பையையோ அல்லது வேறு ஏதாவது உருப்படிகளையோ உட்கார்ந்திருப்பவர்களின் தந்து விடு வார்கள்.  அவர்கள் இறங்கும்போது அந்தப் பையைத் தாங்கள் அமர்ந்திருக் கிற இடத்தில் வைத்துவிட்டு இறங்கு வார்கள்.  இதனால் அந்த இடம் பையின் சொந்தக்காரருக்கு உரியதாக ஆகிவிடும்.  அதாவது அந்த இடத்தில் யார் வந்து அமர்வது என்பதை இறங்குபவர் தீர் மானிப்பதாக ஆகிவிடும்.  பக்கத்திலி ருப்பவர்கள் எல்லாம் பரிதாபமாகப் பார்க்க, நாலு இருக்கை தள்ளி உள்ள நபர் தொகுதியில் வென்ற வேட்பாளர் போல மந்தகாசப் புன்னகையோடு வந்து அமர்ந்து கொள்வார்.

வேறு சில சந்தர்ப்பங்களில் இருவர் இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் எதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்க, இடம் காலியாகிறதே என பக்கத்தில் நிற்கும் நீங்கள் அமர முயன்றால்,  தடுத்து இடத்தைப் பிடித்துக் கொண்டு பல இருக்கைகள்  தள்ளி எங்கோ நின்று கொண்டிருக்கிற தனது நண்பரை, உறவை அழைத்து அதில் அமர வைப்பர்.  அதாவது இருவர் இருக்கையில் ஒரு இருக் கையில் இவர் அமர்ந்திருக்கிறார் என் பதனாலேயே, பக்கத்து இருக்கையும் அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது அந்த இருக்கையை யாருக்குத் தருவது என்று தீர்மானிக்கும் உரிமையை அவர் பெற்று விடுவார்.  நீங்கள்  பரிதாபமாக அசடு வழிய நிற்க வேண்டியதுதான்.  இப்படிப் பேருந்தில் சட்டத்திற்குப் புறம்பான பல அநீதிகள் உண்டு.  இதெல்லாம் என்ன நியாயம் என்று யாருக்கும் தோன்றுவ தில்லை.  தோன்றித்தான் என்ன ஆகப் போகிறது?  சம்மந்தப்பட்டவரிடம் சண்டை வாங்கலாம்.  வலுவிருந்தால் வெல்லலாம் . இல்லாவிட்டால் அடுத்து பத்துப் பதினைந்து நிமிடங்களில் நிறுத் தம் வந்து எதோ ஒரு இடத்தில் இறங்கப் போகிறவர்களுக்குள் எதற்கு சண்டை.  அதுவும் தற்காலிகமாக அமரப் போகும் ஒரு இருக்கைக்காக என்று பெருந் தன்மையோடோ,  தாராள மனசோடோ இருந்து விட வேண்டியதுதான்.

யார் முகத்திலாவது இறங்குகிற குறி தென்படுகிறதா என்று பார்த்துக கொண்டிருந்தேன்.  சின்னமலை நிறுத் தம் தாண்டி ஆளுநர் மாளிகைத் திருப் பத்தில், கையில் சுருட்டி மடக்கிய மாலை நாளேட்டுடன் நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர் சற்று பரபரப்போடு வெளியே இப்படியும் அப்படியுமாக பார்த்துக் கொண்டு வந்தார்.  சரி, நகருக்கு புதுசு போலிருக்கிறது, இறங்க வேண்டிய இடம் தவறிவிடுமோ என்கிற பதட் டத்தில் பார்த்துக் கொண்டு வருகிறார் போலிருக்கிறது என்று அனுமானித்து, சாதுர்யமாக சிலரை விலக்கி அவர் இருக்கைக்குப் பக்கமாக போய் நின்று கொண்டேன்.  பேருந்து கி.ஆ.பெ. சிலை வளைவில் திரும்பி, மேம்பாலம் நெருங்க இடது பக்கம் திரும்பி இறக் கத்தில் ஓடியது.  அவர் இன்னும் சற்று பர பரப்போடு எதிர் இருக்கைக் கம்பியைப் பிடித்தார்.  சரி கிண்டி இறங்கப் போகி றார் போலிருக்கிறது என்கிற தெம் போடு, அந்த இடத்தைப் பிடிக்க நான் தயாராகிக் கொண்டிருந்தேன்.

கிண்டி நிறுத்தம் வந்தது.  பயணி கள் இறங்கினர், ஏறினர்.  இவர் கம் பியைப் பிடித்தபடி இறங்குகிற பயணி களைப் பார்த்து வலப்புறம் கிண்டி ரயில் நிலையத்தையும் பார்த்து பழையபடியே சாவகாசமாக அமர்ந்து கொண்டார்.

சரி, இந்த இடம் இல்லை போலி ருக்கிறது, அடுத்த இடமாக இருக்கலாம் என்று சமாதானம் செய்து கொண்டேன்.  எங்கே இறங்கப் போகிறீர்கள் என்று அவரைக் கேட்கலாமா என்று தோன் றியது.  என்றாலும் சகுனம் பார்க்கிற ஆளாயிருந்து ஏதாவது காரியமாகப் போகிறதாயிருந்தால், நாம் கேட்டதால் தான் கெட்டது என்கிற அவப்பெயர் எதற்கு என்று, என்ன  இன்னும் கொஞ்சம் போனால் அடுத்த நிறுத்தம்  இறங் கத்தானே போகிறார்  என்று மனதைத் தேற்றிக் கொண்டு,  செக் போ°ட் நிறுத்தத்ததிற்காகக் காத்திருந்தேன்.

அவர் சாவகாசமாக பின்புறம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நாளேட் டைப் புரட்டத் தொடங்கினார்.  செக் போஸ்ட் நெருங்க அங்கும் முன் னைப்போலவே இதே மாதிரி கம் பியைப் பிடித்து உடம்பை முன்னே தள்ளி எழுந்திருப்பது போல பாவனை செய்து இருபுறமும் பார்த்து விட்டு வண்டி புறப்பட பழையபடியே சாய்ந்து கொண்டார்.

முதலில் இடம் தெரியாமல் தவித் துக் கொண்டிருக்கிறாரோ என்று அவர் மேல் பரிதாபப்பட்ட எனக்கு போகப் போக அவரது நடவடிக்கைகள் எரிச் சலைத் தர ஆரம்பித்தது.  அவர் அடிக்கடி வெளியே பார்ப்பதும், சட்டைப் பையில் கைவிடுவதும் அதிலிருந்து ஒரு முகவரி அட்டை எடுத்துப் பார்ப்பதும், பிறகு இடத்தை உறுதி செய்து கொண்டவர் போல் அட்டையை பழையபடியே பையில் போட்டுக் கொண்டு முன்புறம் சாய்வதும், மறுபடி பின்புறம் சாய்வதும், வேட்டி சட்டை சுருக்கங்களை நீவி விட்டுக் கொள்வதும், கையில் இருந்த கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொள்வதுமாக, அவரது ஒவ்வொரு அசைவும் ஏதோ எல்லாம் முடிந்து இறங்கத்  தயார் செய்து கொள் வது போல் தோன்ற, ஒவ்வொரு நிறுத் தத்திலும் அவர் இதோ இறங்குவார், அதோ இறங்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் அவர் எங்குமே இறங்காமல் தன் சேட்டைகளை மட்டும் தொடந்து வர, எனக்கு கொதிப்பு எகிறி யது. குருதிக் கொதிப்பு. போதாக் குறைக்கு நான் ஏற்கெனவே நின்றிருந்த இடத்தில் ஒரு இருக்கை காலியாக அங்கு வேறு ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார். பேசாமல் அங்கேயே நின்று கொண் டிருந்திருந்தால் கூட இடம் கிடைத்து உட்கார்ந்திருக்கலாம் போலிருக்கிறது, இந்த ஆளை நம்பி வந்து அதுவும் போச்சே என்பது வேறு கொதிப்பைக் கூட்டியது

ஏற்கெனவே, சாதாரண நிலை யிலேயே கொதிப்பின் அளவு-100-150  இருந்து மருத்துவர் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி முதலான பல ஆலோ சனைகளை வழங்கி எதிலும் அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள் என்று சொல் லியிருந்தும் அதையும் மீறி அவரது சேட்டைகள் என்னை  வெகுளவைக்க  ‘மவனே, டேய், நீ எங்கதாண்டா எறங் கப் போற’ என்கிற  கேள்வி வார்த் தைகளில் வெளிப்படாமல், உள்ளூறவே குமுறியது.  ‘நீ எங்கியாவது எறங்கு, ஆனா பேசாம உக்காந்துக்குனு வா. எதாவது சேட்ட பண்ண கடிச்சிக் கொதறி டுவேன் ’ என்று பாய மனம் துடித்தது.

இடை இடையே புத்தியும்  கொஞ்சம் வேலை செய்து  அந்த ஆள் பாட்டுக்கு அந்த ஆள் பயணம் போகி றார்.  அவர் எப்படியோ, எதையோ செய்து கொண்டு போகிறார், அதை விட்டு நாமாக அவருடைய செய்கைகள் பற்றி ஒன்றை கற்பனை செய்து கொண்டு அவர் மேல் ஆத்திரப்படுவது  என்ன நியாயம் என்று  சொன்னாலும், மனசு ஆறுவதாயில்லை. பொருமிக் கொண் டேயிருந்தது.  இவனுக்கெல்லாம் ஒரு ப°ஸ் ஒரு பயணம், அவன் மூஞ்சியும் மொகரையும், ப°சுல எப்படி உக்காந் துக்கனு வரணும்னு கூடம் தெரியாம.  இருக்கிறவங்களையெல்லாம் கடுப் பேத்திக்னு’ என்று பொரிந்து கொண்டே வந்தேன்.

கடைசீ வரை அந்த ஆள் இறங்கவே இல்லை.  எதற்குத்தான் இம்மாதிரி சேட்டைகள் செய்து கொண்டு வந்தான் என்பதும் தெரியவில்லை.   இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பய ணித்து என் நிறுத்தம் வர சபித்துக் கொண்டே  இறங்கி வந்து விட்டேன்.

சங்கதி இத்தோடு முடிந்து போயி ருந்தால் நான் இந்தக் கதையை எழுத வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. ஆனால் நாலு நாள் கழித்து ஒரு சம்பவம்.

இந்த முறையும் அதே தடம் எண் 5ஏ பேருந்துதான்.  ஆனால்  தி.நகரி லேயே இருந்து புறப்பட, வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய வேகத் திலேயே முண்டி மோதி ஏறி இடம் பிடித்து அமர்ந்து விட்டதால் இருக்கைப் பிரச்சினை இல்லை.   அக்காடா என்கிற நிம்மதியில் ரெசின்  பையை மடியில் வைத்து, கையிலிருந்த வாரமிருமுறை இதழைப் பிரித்துப் படித்துக்  கொண் டிருந்தேன். வண்டி சி.ஐ.டி. நகர், சைதை, சின்னமலை என்று கடந்து ஓடிக் கொண்டிருந்தது.  பேருந்துஸ் ஒவ்வொரு நிறுத்தத்தில் நிற்கும் போதும் தலையை நிமிர்த்தி எங்கு நிற்கிறது, எந்த நிறுத் தத்தைக் கடக்கிறது என்று பார்த்துக் கொண்டே போனேன்.  லேசாய் அசதி ஏற்பட, படித்த வரைக்கும் போதும், மீதி இறங்கிப் போய் படித்துக் கொள்ளலாம் என்று இதழை மடித்து பையில் வைத்து,  கண்ணாடியைக் கழற்றி சட்டைப் பை யில் வைத்து, பின்னால் தலை சாய்க்கும் எண்ணத்தில் அதற்கு  வாகாக என்னைச் சரி செய்து கொண்டிருந்தேன்.  அந்த நேரம் ஒரு நிறுத்தம் வந்து என் பக்கத் திலிருந்தவர் எழ, வேறொருவர் வந்து அங்கு அமர்ந்தார்.

ஆனால் எழுந்தவர் நிறுத்தத்தில் இறங்கவில்லை. இருக்கைக்கு அரு கிலேயே  நின்றார்.  அப்போதுதான் அவரை  முழுசாகப் பார்த்தேன்.  நடுத்தர வயது.   கட்டுமஸ்தான  கரிய தோற்றம்.  நறுக்கு மீசை. மடித்துக் கட்டிய கரை வேட்டி.  அன்றாடம் சரக்கடிக்கிறவர் களுக்கு உள்ளது போன்ற லேசாய் சிவந்த மயக்கம் தோய்ந்த கண்கள். ஆனால் நல்ல நிதானத்தில்தான் இருந்தார்.  பரவாயில்லை இப்படிப்பட்ட தோற்றத் துள்ளும் அடுத்தவருக்கு இடம் தர வேண்டும் என்கிற நல்ல இதயமா... அடடா முள்ளில் ரோஜா, கல்லுக்குள் ஈரம், சேற்றில் செந்தாமரை என்று அவரை மனதுக்குள் வாழ்த்திக் கொண் டிருந்தேன்.

அவர் என்னைப் பார்த்து ‘நீங்க எறங்கலையா’ என்றார்.  நான் இல்லை என்றேன்.  ‘நீங்க எறங்கப் போறிங்கன்னு நெனச்சிதான் நான் எழுந்து அவருக்கு எடம் கொடுத்தேன்’ என்றார்.  ‘அடடா நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே, சொல்லியிருப்பேனே’ என்றேன்.  எங் களுக்குள் இந்த உரையாடலைக் கேட்ட பக்கத்தில் இருந்த ஒருவர் கரை வேட் டியைப் பார்த்து ‘அப்ப நீங்க உக் கார்றிங்களா’ என்றார்.  அதற்கு கரை வேட்டி பெருந்தன்மையுடன் ‘பர வால்ல, உக்காருங்க’ என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்து முறைத்தார். இதேதடா வம்பு என்று தோன்றிய எனக்கு தலை சாய்க்கிற எண்ணம் தொலைந்து போய் மனம் சங்கடப்பட, பழையபடியே பையைத் திறந்து இதழை எடுத்து, கண்ணாடியை எடுத்து மாட்டி படிக்கத் தொடங்கினேன்.  படிப்பில் மனம் லயிக்கவில்லை.  இடச்சிக்கல் பற்றிய சிந்தனையே மனதை இடர்ப் படுத்திக் கொண்டு வந்தது.  அது பற்றிய யோசனையுடனே சிறிது நேரம் வாளா யிருந்தேன். 

பிறகு இதழை மடித்து பையில் போட்டு, கண்ணாடியைக் கழற்றி பையில் வைத்து, அவ்வப்போது நழுவும் பையை சரி செய்து இழுத்து இழுத்து மடியில் அமர்த்தியபடியே, பயணித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில், பை அடிக்கடி நழுவாமல் மடியில் சரியாய் பொறுத்த, சற்று நிமிர்ந்து என்னைச் சரி செய்து பின்னுக்கு இழுத்து உட்கார்ந்து கொண்டிருக்க, அந்த நேரம் ஒரு நிறுத்தம் வந்தது.  ஒரு சிலர் இறங்க பலர் ஏறினார்கள்.  பேருந்து எந்த நிறுத் ததத்தில் நிற்கிறது, என்னுடைய நிறுத் தம் வர இன்னும் எத்தனை நிறுத்தங்கள் இருக்கும் என்கிற யோசனையில் நான் பையை இழுத்து சேர்த்து அணைத்து நிமிர்ந்து நோக்க பக்கத்தில் இருந்த கரைவேட்டி, கண்கள் சிவக்க என்னைப் பார்த்து ‘என்னா எறங்கலையா’ என்றார்.  நான் ‘இல்ல’ என்றேன்.  சிறிது நேர பய ணத்தில் அடுத்த நிறுத்தமும் நெருங்க, நான் பழையபடியே பையைச் சரிசெய்து கொண்டு அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்க கரை வேட்டி ஏனோ ஆத் திரத்தின் உச்சிக்குப் போனவராக  என்னைப் பார்த்துக் கத்தினார் ‘மவனே இங்கியும் எறங்கலியா நீ  ....த்தா  இனிமே நீ பையில கைய வச்ச.  உன் னைக் கொல பண்ணி போட்டுடுவேன்.  நீ எறங்கப்போறன்னு நான் இருந்த எடத்தையும் உட்டுட்டு நின்னுக்னு வரேன்.  நீ என்னாடான்ன எனக்கு வேடிக்கை காட்டிக்னு வரியா...’