Peopleதேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை
ஏமாற்றி விடுகிறது
மக்கள் மனதில் மாற்றம் வராததால்.
ஆதங்கப்பட்டே அலுப்பு மிஞ்சுகிறது
மாற்றத்தின் திசை மாறிப் போனதால்.

அப்போதெல்லாம் 'கோஷம்' போட,
கூட்டம் கூட்ட
சாப்பாட்டுடன் லாரி சவாரி போதும்.
இப்போதோ 'குவாட்டர்' கொடுத்து
'சுமோ'வில் ஏற்றி
'பிரியானி'யுடன் தலைக்கு
நூறோ இருநூறோ தர வேண்டுமாம்.

அஞ்சு பத்துக்கு 'ஆ'வென்று
வாய் பிளந்தோர்
ஐநூறு ஆயிரத்திற்கு பேரம் பேசி
குடும்பம் குடும்பமாய்,
விழித்துக் கொண்டதாய் நினைத்து மகிழ்ந்து
விற்பனை செய்கிறார்கள்...
வாக்குச் சீட்டை.

பேனாக்களின் முனை தேய்ந்து போகவும்
தொண்டைகள் கிழிந்து ரத்தம் ஒழுகவும்
பாடுபட்டு வேண்டி நின்ற மாற்றத்தின் விபரம்
இப்படியா விளங்கிக் கொள்ளப் பட வேண்டும்?!

உண்மை மாற்றமும், விழிப்பின் பொருளும்
உணர வாக்காளர்கள் உயரும் வரையில்
அனல் காற்றுதான் இவர்கள் வீடுகளில்...!
அடை மழைதான் அவர்கள் காடுகளில்...! 

சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It