-2008
சாவி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட சா. விஸ்வநாதன் புகழ் பெற்ற பத்திரிகையாளர். இவர் அன்றைய வடஆர்காடு மாவட்டத்தில் உள்ள மாபாக்கத்தைச் சேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். இவருடைய வழிப்போக்கன் என்ற கதை மிக முக்கயமானது என்று கூறுவோரும் உண்டு. வேதவித்து என்ற நாவல் இவரது கடைசி படைப்பாகும். சின்ன அண்ணாமலை நடத்திய வெள்ளிமணி பத்திரிகையில் ஆசிரியராக இருந்த போது, காந்திஜி நடத்திய நவகாளி யாத்திரைக்கு சென்று நேரில் பார்த்தவற்றை கண்டு எழுதியவர். இவர் தினமணி கதிர், கல்கி, விகிடன், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். சாவி, பூவாளி, விசைகள், மோனா ஆகிய இதழ்களை நடத்தியவர்.
1. என்னுரை
2. ஆப்பிள் பசி
3. விசிறி வாழை
4. பழைய கணக்கு
5. வழிப்போக்கன்
6. ஊரார்
7. இங்கே போயிருக்கிறீர்களா?
8. வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு
9. வாஷிங்டனில் திருமணம்
10. தாய்லாந்து
11. கேரக்டர்
12. நவகாளி யாத்திரை
13. வேதவித்து
14. கோமகனின் காதல்
15. சிவகாமியின் செல்வன்
16. உலகம் சுற்றிய மூவர்
17. SAVI 85
18. மௌனப்பிள்ளையார்
19. சாவியின் நகைச்சுவைக் கதைகள்
20. திருக்குறள் கதைகள்
21. நான் கண்ட நான்கு நாடுகள்
22. சாவியின் கட்டுரைகள்
23. கனவுப் பாலம்
24. வத்ஸலையின் வாழ்க்கை
25. தெப்போ 76