தமிழக விவசாயிகளுக்குத் தொடரும் தொல்லைகள்!

கர்நாடகா அரசின் முந்தைய முறைகேடுகள்

இச்சமயத்தில் கர்நாடகா அரசின் கடந்த கால நடவடிக் கைகளை நினைவுகூர்வது மிகமிக அவசியம்.

கர்நாடகாவின் நீண்ட சதித் திட்டம் என்ன?

எனவே இத்தகைய மறைமுக மான திட்டங்களால் கபினி அணைக்கும் கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கத்திற்கும் போதிய நீர்வர விடாமல் தடுத்துவிடு சட்டவிரோத மாக நடுவர் மன்றத் தீர்ப்புக்கு மாறாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அணைகளில் திறந்துவிடப் போதிய நீர் இல்லை எனக் கர்நாடகம் கபட நாடகமாடிக் கொண்டுள்ளது. இதைத் தமிழக அரசு புரிந்து கொண்டு - ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பலாமா?

இவற்றுள் முக்கியமாக 1970 - 1980 ஆண்டுகளில் கர்நாடகா அரசு

மேலும் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் - கர்நாடகா அரசு தனது பாசனப் பகுதிகளின் பரப்பை 11.20 இலட்சம் ஏக்கர் களுக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் விரிவாக்கம் செய்யக் கூடாது என்ற அறிவுறுத்தல் முழுவதுமாக மீறப்பட்டிருக்கிறது / இந்த முறைகேட்டை இந்திய அரசின் நீர்வளத்துறையும் காவிரித் தீர்ப்பாயமும் கண்டுகொள்ளவே இல்லை.

இவ்வாறான கடந்த கால சட்டவிரோத வெற்றிகளின் அடிப் படையில்தான் - இந்திய அரசு தடுக்காது, தமிழக அரசும் எதுவும் செய்து விட முடியாது - என்ற துணிச்சலில் தடாலடி அரசியல் அடிப்படையில் - எவ்வளவு முறை யற்றதாகவும் ஒப்பந்தத்தை மீறிய தாக இருந்தாலும் 48 ஆ,மி.க. கொள்ளளவில் இரண்டு அணை களை மேகே தாட்டுவில் கட்டிட கர்நாடகா அரசு தீவிரமாக முனைந்துள்ளது. இச் சதித்திட் டத்தை புரிந்து கொண்டு இப்போ தாவது தமிழக அரசு ஒரு சிறிதும் காலம் தாழ்த்தாது விரைந்து தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும் என்பது தமிழக மக் களின் கோரிக்கையாகும்.

காவிரி நீர் ஒப்பந்தங்கள் / உச்சநீதிமன்ற / காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் தெரிவிப் பவை எவை?

காவிரித் தீர்ப்பாயத்தின் இறு தித் தீர்ப்பு (05.02.2007) காவி ரியின் கீழ்ப்படுகையிலுள்ள தமிழ் நாட் டிற்குரிய காவிரி நீரைத் தடையில் லாமல் வழங்குவதற்கு எதிரான எந்தச் செயலையும் கர்நாடக அரசு செய்யக் கூடாது என ஆணை யிட்டுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறு தித் தீர்ப்பு - (05.02.2007) பத்தி 32. அவரவர்க்கு ஒதுக்கப் பட்ட பங்குத் தண்ணீர் தடுக்கப் படாமல் கிடைத்திட, மேல் மர புரிமை உள்ள மாநிலம் கீழ் மரபுரிமை மாநிலத்திற்கு அட்டவ ணைப்படி தரவேண்டிய தண்ணீ ருக்குப் பாதிப்பு வரும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்து கிறோம்.

Para 32. For ensuring uninterrupted delivery of allocated shares to the parties concerned, “we hereby direct that no upper riparian state shall take any action so as to affect the scheduled deliveries of water to the lower riparian state.”

தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு இவ்வாறிருக்க உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் எப்படி இவற்றையெல்லாம் மீறி கர்நாடகா புதிய அணைகள் கட்டலாம் எனக் கருத்துரைத்தார் என்பது கர்நாட காவுக்கே வெளிச்சம்? (பணம் பத்தும் செய்யும் போல) என்று நொந்து கொள்ளுவதைத் தவிர வேறு என்ன செய்வது?

உடனடித் தேவை காவிரி மேலாண்மை வாரியம்

கர்நாடகா அரசின் கடந்த கால சதித்திட்டங்களையும் தில்லு முல்லுகளையும் அடா வடித்தன மான அழிச்சாட்டியங்களையும் நன்றாக அறிந்த காவிரித் தீர்ப் பாயம், தன் தீர்ப்பின் முக்கிய பகுதியாக - காவிரி நீரை முறையாகப் பகிர்ந்தளிக்க மேலாண்மை செய்திட நாளும் கண்காணித்திட காவிரி மேலாண்மை வாரியத்தை (Cauvery Management Board)) கண்டிப்பாக அமைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

“பத்தி 14. பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியம் இருப்பது போல் இதற்கு காவிரி மேலாண்மை வாரியம் நடுவண் அரசால் அமைக்கப்பட வேண்டும். எங்கள் கருத்தில், பொருத்தமான பொறியமைவு அமைக்கப்படுவது எல்லாவற்றையும் விட முகாமை யானதாகும். என்ன வகைப் பொறி யமைவு நிறுவப்பட்டாலும் தீர்ப் பாயத்தின் முடிவுகளைச் செயல் படுத்தும் முழு அதிகாரம் அதற்கு இருக்க வேண்டும். இல்லை எனில், எங்கள் தீர்ப்புரை வெறும் துண்டுக் காகிதமாகத்தான் இருக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.”

காவிரி மேலாண்மை வாரியத் தையும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவையும் மேலும் காலந் தாழ்த் தாது அமைத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உள்ளது. ஊருக்கும் உலகத்திற்கும் உபதேசம் செய்யும் திரு. நரேந்திர மோடியின் அரசு உடனடியாகத் தம் பொறுப்பினைத் தட்டிக் கழிக்காமல் வேண்டு மென்றே மாற்றாந்தாய் மனப் பான்மையோடு காலந்தாழ்த்தாமல் செயல்பட வேண்டும். கர்நாடகா அரசு கட்டுப்படாமல் நடக்குமா னால் அரசியல் சட்டப்பிரிவு 355இன் படி கர்நாடகா அரசுக்குத் தாக்கீது அனுப்பிடத் தயங்கக் கூடாது. இது ஒன்றுதான் கர்நா டகா அரசுக்குப் போடப்படும் மூக் கணாங்கயிறாக இருக்கும்.

தமிழ்நாடு அரசாங்கம் / தமிழக மக்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக் கைகள்.

கர்நாடக அரசு - 2007ஆம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு 2012இல் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 25 நீர்வளத்துறை அதிகாரிகள் 56 இடங்களில் ஆய்வு செய்து 30 இடங்களில் அணைகள் கட்டலாம் என்று கர்நாடகா அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும் போது, தமிழக அரசுக்கு இவை யெல்லாம் எப்படித் தெரியாமல் போனது? நம்முடைய நுண்ண றிவுப் பரிவு ((Intelligence & CID) என்னதான் செய்து கொண்டுள்ளது? கர்நாடகாவின் காவிரி நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகம் (Karnataka Cauvery Irrigation Development Corporation)) இதற்காக உல களாவிய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது. கர்நாடகப் பாசனத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் பகிரங்கமாக நாள் குறித்து அறி வித்த பிறகுதான் தமிழக அரசும் தமிழகக் கட்சிகளும் எதிர் வினை யாற்றத் தொடங்கியுள்ளன.

இதன் தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறி யாளர் சங்கம் - முல்லை பெரியாறு அணை, மீத்தேன் எடுப்பு எதிர்ப்பு போன்றவற்றில் பரப்புரை செய்த தைப் போலவே - தமிழ் நாட்டின் நலனைப் பாதுகாத்திட உரிமை யினைநிலை நாட்டிடத் தொடர்ந்து பரப்புரை செய்திட தம்மை ஈடுபடுத் திக் கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.