“ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவ்வினத்தின் மொழியை அழித்துவிடுங் கள் இனம் தானாக அழிந்துவிடும்” என்றார் இங்கர்சால். தாய்மொழியை இழப்பது, இவ் உலகில் வாழ்வதற் கான வாழ்வுரிமையை இழந்து அகதியாக வாழ்வ தற்கு சமம். தாய் மொழியை இழந்தால் இறுதியில் தங்களுக்கான நிலமின்றி பிறநாட் டாரை ஒண்டி அண்டி பிழைக்கும் அவல நிலையே உருவாகும்.

அரசுப்பள்ளிகளில் முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புகளில் ஆங்கில வழி வகுப்பு கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆங்கில வழி முதல் வகுப்பில் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆங்கில வழிக் கல்வித் திணிப்பை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆங்கிலம் கற்றுக் கொள்வது தவறல்ல. ஆனால் ஆங்கிலத்தைக் கற்றுத் தருவதற் காக எல்லாப் பாடத்தையும் ஆங்கிலத்தில் கற்றுத் தருவது என்பது சரியா?

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரள மாக பேசவும், எழுதவும் படிக்கவும் புலமை பெற வேண்டும் என்றால் ஆங்கிலப் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம். அதை விடுத்து எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படித்தால் ஆங்கில மொழி அறிவு வந்து விடும் என்பது அறிவீனம் இல்லையா?

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கு மக் களிடம் ஆதரவு இருக்கும் போது அதை எதிர்ப்பது ஏன் என்கிற, கேள்வி எழுந்துள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலும் வசதியான பிள்ளைகள் போலவே தங்கள் பிள்ளைகளும் ஆங்கிலத்தில் படிப்பார்கள் என்பதால் பெற்றோருக்கும் மகிழ்ச்சி என்பதை மறுப்பதற்கில்லை.

மூலை முடுக்குகளில் எல்லாம் தனியார் பள்ளி கள் முளைத்து விட்டதாலும் ஆங்கில மோகத்தா லும் பெரும்பாலான மக்கள் தனியார் பள்ளி களை விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளைப் பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுமே நாடிச் செல்கின்றனர். மற்றவர்களுக்குக் கிடைத்த ஆங்கில வழிக் கல்வி நம் பிள்ளை களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். நம் சமூக அமைப்பு அவர்களுக்கு ஊட்டியிருக்கும் ஆங்கில மோகம் அப்படி!

இப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்துதான், அரசுப் பள்ளி களில் ஆங்கில வழிக் கல்வியை அ.தி.மு.க அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் திராவிட ஆட்சியாளர்களைப் பொறுத்த மட்டில், அவர்களுக் குக் கல்வி பற்றியோ மொழி பற்றியோ தெளிவான கொள்கை எப்போதும் இருந்தது இல்லை; உருப்படியான கல்வித் திட்டங் களும் இல்லை.

அரசுப் பள்ளிகளின் உள் கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக் குறை, ஆசிரியர்களின் தகுதி, கற்பிக்கும் முறை, பாடத் திட்டங் கள் ஆகியவற்றில் இந்த அரசுகள் கவனம் செலுத்தியதாகத் தெரிய வில்லை.

தனியார் பள்ளிகளின் கட்ட ணத்தை முறைப்படுத்தும் திட் டத்தைக் கூட முறையாக அவர் கள் கண்காணிப்பதில்லை. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தக் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல் வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ) போன் றவை ஏறத்தாழ முடங்கி விட்டன.

வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், மலையாளிகள் என அயலார்கள் அதிகளவில் தமிழகத்துக்குள் குடியேறி வரும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கள் தமிழ்வழிக் கல்வியை புறக் கணித்து விட்டு தனியார் பள்ளி கள் மூலம் ஆங்கில வழிக் கல்வியை கற்று வந்தனர்.

அரசின் இந்த அறிவிப்பால், அயலார்களும் செலவின்றி அதே ஆங்கில வழிக் கல்வி கற்பதற்காக அரசுப் பள்ளிகளை நாடத் தொடங்கிவிட்டார்கள். இதில், ஆங்கில வழிக் கல்வியோடு புத்த கம், நோட்டு, சீருடை, செருப்பு, மதிய உணவு ஆகியவை விலை யில்லாமல்’ வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு!.

ஏற்கெனவே தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை அபகரித்துக் கொண்டிருக்கும் அயலார்கள், அரசுப் பள்ளிகளையும் ஆக்கிர மிக்கப் போகிறார்கள். பொருளா தாரத்தில் நலிந்த, தாழ்ந்தப்பட்ட தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பை தட்டிப்பறிக்கப் போகி றார்கள். அரசுப் பள்ளிகளில் படிப்பதன் மூலமாக வரும் காலங் களில் தமிழக அரசுப் பணிகளையும் அவர்கள் எளிதாகப் பெற்று விட முடியும். அப்படி அரசுப் பணிகளில் அயலார்கள் குறிப் பாக தமிழ் இனத்துக்கு எதிரான மலை யாளிகள் போன்றோர் பணியமர்த்தப்படும்போது அது ஏற்படுத்தப்போகும் விளைவு களை சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசர அவசியம்!

ஆங்கில வழிக் கல்வி, நம் தமிழ்ப் பிள்ளைகளிடம் இருந்து தாய் மொழியை அயல் மொழி ஆக்குவதுடன் அயலார்களுக்கு அரசுப் பள்ளிகளில் வாய்ப் பளித்து எதிர் காலத்தில் சொந்த நாட்டில் தமிழர்களை அகதிக ளாக்க துணிந்து விட்டன. இந்தக் கங்காணி அரசுகள்!!

இந்த ஆபத்தைத் தடுக்க வீதிக்கு வருவது தவிர வேறு வழியில்லை.

Pin It