பரப்புரைப் போராட்டம் நடத்திய த.தே.பொ.க. தோழர்கள் கைது

முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிட மூர்க்கமாக முயல்கிறார்கள் மலையாளிகள். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசும் சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலையாளிகளிடம் இன வெறியைத் தூண்டி, அணையை உடைப்பதற்கான ஆயத்தங்கள் செய்து வருகின்றன.

எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, கேரளத்தைக் கட்டுப்படுத்தி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல் படுத்தி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகாரம் ஏதுமற்ற அப்பாவி போல் நயவஞ்சக நாடகமாடுகிறது. மலையா ளிகளின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்துமுடித்த பின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் கேரள அரசும், அரசியல் கட்சிகளும் கழிவறைத் தாளுக்குத் தரும் மதிப்பைக்கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தரவில்லை.142 அடிவரை தண்ணீர் தேக்கவிடாமல் தமிழகத்தைத் தடுத்து விட்டார்கள். சிற்றணையை செப்பனிடவும் விடவில்லை.

மண்ணியல் வல்லுநர் குழுவையும், நீரியல் வல்லுநர் குழுவையும் அமர்த்தி அவற்றைக் கள ஆய்வு செய்ய வைத்து அவற்றின் பரிந் துரைக்கு ஏற்பவே மேற்படித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

இத்தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக் குத் தொடுத்தது. அவ் வழக்கு, விசாரணையில் உள்ளது .

இந்நிலையில்முல்லைப்பெரியாறு அணையைத் தகர்த்துத் தரை மட்ட மாக்கிடும் சதித் திட்டத்தை மூடிமறைத்து புதிய அணை கட்டப்போவதாக ஆசை வார்த்தை காட்டி னார்கள். இப்போது அந்த மூடு திரையை நீக்கி விட்டு அணையை உடைப்போம் என்று அம்மணமாக அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள்.

அண்மையில் அப்பகுதியில் ஏற்பட்ட 2.3 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைக் காரணம் காட்டுகிறார்கள். இதற்குமுன் 2001-ல் இடுக்கியில் 4.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நில நடுக்கம், அணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்ற உண்மையை அவர்கள் மறைக்கிறார்கள்.

2011 சனவரி 20 ஆம் நாள் அணையை ஆய்வு செய்த இந்திய அரசின் வல்லுநர் குழு அணை வலுவாக இருப்பதை உறுதி செய்தது.

மலையாளக் காங்கிரசுத் தலைவர்களும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுத் தலைவர்களும் பொய்யுரைக்கக் கூச்சப் படாதவர்கள்; புரளி கிளப்ப அச்சப்படாதவர்கள். முல்லைப் பெரியாறு அணை உடைந்து 35 இலட்சம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போல் மோசடியாகப் பரப்புரைக்குறுந்தகடு தயாரித்து கேரளத்தில் ஊர் ஊராக போடச் செய்தார் அப்போதைய மார்க்சிஸ்டு முதல்வர் அச்சு தானந்தன். இப்போது மலை யாளிகள் அதே புரளியை ஒரு திரைப்படமாகத் தயாரித்து “அணை 999 “ என்ற பெயரில் பல மொழிகளில் வெளியிட் டுள்ளார்கள். இப்படத்திற்கு இந்திய அரசின் தணிக்கைத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

மலையாள இன வெறியர் களும் அவர்களின் ஊடகங் களும் பரப்பி வரும் வதந்திகளை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால் கூட, முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அவர்கள் கூறிவரும் பேரழிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. காரணம் அவ்வணையின் மொத்தக் கொள்ளளவு 10 டி.எம்.சி. மட்டுமே. ( 1 டி.எம்.சி = நூறு கோடி கன அடி). முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணை யின் மொத்தக் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும்.

இந்த இடுக்கி அணை பாதியளவு நிரம்புவதற்குக் கூட அதற்கு நீர் வரத்து இல்லை. இந்த அணையை முழுக் கொள்ளளவும் நிரப்பி, ஆண்டு முழுவதும் நீர் மின்சாரம் தயாரிக்க முல்லைப் பெரியாறு நீர் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வேண்டும், என்பதே மலையாளிகளின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த அவர்கள் வகுத்த சூழ்ச்சித் திட்டமே முல்லைப் பெரியாறு அணை வலுக்குறைவாக உள்ளது, அது எந்த நேரத்திலும் உடைந்து விடும், எனவே அதை உடைத்துவிடவேண்டும் என்ற பரப்புரையாகும்.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு நாளைக்கு 700 டன் அரிசி, கேரளம் முழுவதுக்குமான இறைச்சி , காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால் முதலியவை அன்றாடம் அங்கு போகின்றன. இவை நின்று போனால் கேரளம் மூச்சுத் திணறி உயிருக்குப் போராட வேண்டி வரும். தமிழக மணலை அன்றாடம் கொள்ளையடித்துக் கடத்திச் செல்லாவிட்டல் கேரளாவில் புதிய கட்டடங்கள் எழ வாய்ப்பே இல்லை.

முப்பது இலட்சம் மலையா ளிகள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள்.இவர்களில் பெரும் பாலோர் தமிழர்களுக்குரிய உயர் பதவிகளையும், வருமானம் அதிகமுள்ள வணிகங்களையும், தொழில்களையும் கைப்பற்றி உள்ளார்கள்.

ஒருவர் ஓராண்டில் பயன் படுத்தும் தண்ணீரின் சராசரி அளவு 1700 கனமீட்டர். 30 இலட்சம் மலையாளிகள் ஓர் ஆண்டில் பயன்படுத்தும் தமிழகத் தண்ணீரின் அளவு 510 கோடி கனமீட்டர். முல்லைப் பெரியாறு அணைமூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வெறும் 12.6 கோடி கனமீட்டர் மட்டுமே. (பழ. நெடுமாறன் ,தினமணி 30-11-2011).

தமிழக நெய்வேலி அனல் மின்நிலையத்தில் இருந்து கேரளத்திற்குச் செல்லும் மின் சாரம் ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட்.

இத்தனை வழிகளில் கேரளம் தமிழ்நாட்டைச் சார்ந்து இருக்கிறது. ஆனால் இதற்கான நன்றி உணர்ச்சி எதுவும் மளையாளிகளிடம் இல்லை.

தமிழர்களே,

1947 ஆகஸ்டு 15-க்குப் பிறகு நாம் இழந்துள்ள உரிமைகளை எண்ணிப்பாருங்கள். வெள் ளைக்காரன் தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டி 1924-ல் சிறந்ததொரு ஒப்பந்தம் செய்து வைத்தான். தில்லிக் காரன் ஆட்சியில் அது செல்லாது என்று சொல்லி விட்டார்கள். காலம் காலமாகக் காவிரியில் பாசனம் பெற்ற 28 இலட்சம் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது. 1895-இல் முல்லைப் பெரியாறு அணையைக்கட்டி 999 ஆண்டு களுக்கு அது தமிழகத் திற்கு உரியது என்று ஒப்பந்தம் செய்து வைத்தான் வெள்ளைக்காரன். இன்று அந்த ஒப்பந்தம் செல்லாது என்கிறார்கள், அணையை உடைக்க நாள் பார்க்கிறார்கள். அந்த அணை யால் பாசனம் பெற்ற 2 இலட்சம் ஏக்கர் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

1950-க்குப் பிறகு பாலாற்றில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டித்தமிழகத்திற்குத் தண்ணீர் வராமல் தடுத்து விட்டது ஆந்திரப் பிரதேச அரசு. இப்போது கடைசி எல்லையான கணேசபுரத்திலும் அணை கட்டுகிறது ஆந்திரம்.இனி பாலாற்றிலிருந்து கசிவு நீரும் தமிழகத்திற்கு வராது.

காவிரி,முல்லைபெரியாறு,பாலாறு மூன்றையும் இழந்து விட்டால் பாசனத்திகு மட்டும்மல்ல குடிநீருக்கும் தமிழ்நாட்டில் தண்ணீர் கிடையாது.

1956 களில் மொழிவாரி மாநிலம் அமைத்த பொழுது பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஊர்களையும் , நகரங்களையும் மற்றும் இயற்கை வளங் களையும் , ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களிடம் பறி கொடுத்தோம். 1974-ல் நமது கச்சத்தீவை சிங்கள அரசுக்குக் கொடுத்தது இந்தியா.

சிங்களப் படையாட்கள் சற்றொப்ப 550 தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல இந்தியா துணைநின்றது. இனியும் தமிழக மீனவர்களைக் கொல்லவும், தமிழகக் கடற் பரப்பில் தமிழர்கள் மீன் பிடிப்பதைத் தடுக்கவும் இலங் கைக்கு இந்தியா துணைநிற்கப் போகிறது.

2008 ---_2009 ஆண்டுகளில் நம் உறவுகளான ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கும் ஈழ விடுதலைப் போரை வீழ்த்துவதற்கும் இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் துணை நின்றது இந்தியா.

இனியும் பொறுப்பது கூடாது தமிழர்களே..! எரிதழல் நெஞ்சில் ஏந்துங்கள்.

உலகின் மூத்த இனமான தமிழினம் நம் தலைமுறைக் காலத்தில் அழிந்து விட நமது செயலின்மை காரணமாக அமைந்து விடக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்பதற்குரிய எல்லா வழிகளும் மூடப்பட்டு விட்டன. இந்திய அரசு, நீதித்துறை , இந்திய அரச மைப்புச் சட்டம் ஆகிய அனைத்தும் நம்மைக் கைவிட்டு விட்டன. பகைவனைப் பணிய வைத்து உரிமைகளைக் காப் பதைத் தவிர வேறு வழி இல்லை. மலையாள இன வெறியர்களுக்குப் பதிலடி கொடுக்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம் வாசல் கதவைத் தட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலையாளிகளையும் வெளியேறும்படிக் கோருவோம்.

நெய்வேலியிலிருந்து கேரளம் செல்லும் மின்சாரத்தை நிறுத்தி, அதைத் தமிழ் நாட்டிற்கு வழங்கச் செய்வோம்.

கேரளத்திற்குச் செல்லும் எல்லாப் பாதைகளையும் மூடி, கேரளத்திற்கு எதிராகப் பொருளாதார முற்றுகையை உருவாக்குவோம்.

என்ற முழக்கத்தோடு கள மிறங்கியது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி.

 7.12.2011 காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சித் தோழர்கள் ’’முல்லை பெரியாறு உரிமை மறுக்கும் மலையாளியே தமிழகத்தை விட்டு வெளியேறு” என்ற ஆவேச முழக்கத் துடன்மற்றும் பரப்புரை- மற்றும் போராட்டம் நடத்தினர்.

பொதுமக்களிடம் உண் மையை விளக்கும் துண்டறிக் கைகளை வழங்கி மலையா ளிகளின் நிறுவனங்களில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க தோழர்கள் கைது செயப்பட்டுள்ளனர்

சென்னை:

சென்னை தியாகராயர் நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தை நோக்கி முழக்கங் கள் எழுப்பிக்கொண்டு சென்ற கட்சியின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி மற்றும். தமிழ்ச்சமரன், தமிழ்க்கனல், தமிழ்ச்செல்வன், செழியன், வெற்றித்தமிழன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இப் போராட்டம் காரணமாக அந்நிறு வனத்தின் வெளிக்கதவு சாத்தப்பட்டது. காவல் துறையினர் பெறும் எண்ணிக் கையில் குவிக்கப்பட்டனர். தியாகராயர் நகர் எங்கும் பரபரப்பு. நடத்த வேண்டிய போராட்டம் தான் என்று அப்பகுதியிலிருந்த பொது மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

புழல் சிறையில் அடைக்கப் பட்ட இத்தோழர்கள் மீது கொஞ்சமுன் தொடர்பே இல் லாத சம்பவத்தைக் காரணம் காட்டி சைதாப் பேட்டை காவல் நிலையத்தில் கொடும் பிரிவு களின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டது. 9.12.2011 அன்று இவர்கள் மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டனர்.

கோவை:

கோவையில் தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சியின் கிளைச் செயலா ளரும் தமிழக இளைஞர் முன்னணியின் மாநகரச் செயலாளருமான தோழர் பா.சங்கர் தலைமையில் த.தே.பொ.க தோழர்கள் காந்தி புரம் கிரசாஸ்கட் சாலை யில் மலையாளிகளை வெளியேற்று வோம் என்ற முழக்கத்த தோடு ஆர்ப்பாட்டம் செய்து துண்டறிக்கைகள் வழங்கினர். மலையாளிகள் கடைகள் தாக் கப்பட்டதாக த.தே.பொ.க வினர் 16 பேர் கைது செய்யப் பட்டனர்

இப்போராட்டத்தால் அச்ச மடைந்த ஜாய் ஆலுக்காஸ், பிரின்ஸ் ஆலுக்காஸ் ஜோசப் ஆலுக்காஸ், கஜானா, முத்துட், மணப்புரம் கோல்டு, எக்சைடு உள்ளிட்ட மலையாளிகளின் நகை நிறு வனங்களும் காந்தி புரத்தைச் சுற்றியுள்ள பெரு மளவிலான மலையாளிகளின் ரொட்டி கடைகளும், தேநீர் கடைகளும் மூடப்பட்டன. அனைவரும் மாலை விடுதலை ஆயினர்.

ஒசூர்:

ஓசூர் விடியற் காலையி லிருந்தே ஓசூர் த.தே. பொ.க வினர் கட்சியின் தலைமை செயற்குழு உறுபினர் கோ. மாரிமுத்து தலைமையில் அசோக் லைலாண்ட், டைட் டான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வாயில்களில் விளக்கவுரை நிகழ்த்தி துண் டறிக்கைகள் வழங்கி பரப்புரை செய்த பின் ஓசூர் நகர கடை வீதிகளில் பரப்புரை செய்து மலையாள ஆலுக்காஸ் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகை மாளிகையை தாக்கி சேதப் படுத்தப்பட்டதாகக் கூறி காவல் துறையினர் 12 தோழர்களை கைது செய்தனர்

தஞ்சை:

கட்சியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு முனியாண்டி தலைமையில் த.தே.பொ.க தோழர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.

மலையாளிகளின் நிறு வனங்களான முத்தூட் பைனா னாஸ், ராயல் காபி கடை உள் ளிட்டவை தாக்கப்பட்டதாக த.தே.பொ,க தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் மூவரை கைது செய்தனர்.

தொலைக்காட்சி நேர் காணல் அளிக்க சென்ற த.தே. பொ.க தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப் பினர் தோழர் பழ. இராசேந் திரன் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.கொடும் பிரிவு களில் வழக்கு தொடுக்கப் பட்டு திருச்சி சிறையில் அடைக்கப் பட்டனர்.

குடந்தை :

த.தே.பொ.க குடந்தை நகரச்செயலாளர் விடுதலை சுடர் தலைமையில் ஆலுக்காஸ் நிறுவனம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆலூக் காஸ் நகை நிறுவனம் தாக்கி சேதப்படுத்தப் பட்டதாக தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 1/2 லட்சம் சொத்துக்கள் சேதமடைந்தாக ஆலுக்காஸ் நிறு வனத்தினர் புகார் கொடுத் தன் அடிப்படையில் தனியார் சொத்துக்கள் சேத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் த.தே.போ.க வினர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி யினர் நேரில் சென்று கைதுக்கு கண்டனம் தெரிவித்த தோடு போராடிய த.தே.பொ.க தோழர் களுக்கு வாழ்த்துகள் தெரி வித்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடை மைக்கட்சி நடத்திய முற்றுகை ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து 8.12.2011 அன்று தமிழகமெங்கும் உள்ள பெறும் பாலான மலையாளிகளின் கடைகள் மூடப்பட்டன. பாது காப்புக் கருதி கடைகள் முன் காவல்துறை குவிந்தது.

Pin It