“வீரம் செறிந்த தமிழ்நாடு!”
“புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு!”
கல்வி சிறந்த தமிழ்நாடு”
செல்வம்
எத்தனை உண்டு புவிமீதே அவை
யாவும் படைத்த தமிழ்நாடு!”

வீரம், புகழ், கல்வி, செல்வம் ஆகிய பண்டைத் தமிழகத்தின் மரபு வளங்களை எண்ணிப் பெருமைப் படுகிறார் கவிஞர் பாரதியார்! இந்நான்கு கூறுகளி லுமே தமிழகம் இன்று அடைந்துள்ள நிலையை எண்ணினால் பாரதியார் உரைகளை நாம் கவிஞர் களுக்கு இயல்பான மிகையுரைகளென்றோ, புனைந்து ரைகளென்றோதான் கருத வேண்டிவரும். “கொடுக்கி லாதானைப் பாரியே” என்றும், போர்க் களங் காணா தவனைப் புலியேறு என்றும் புகழும் கவிராயர் மரபில் இவையும் சேர்ந்தவை தானோ என்று எண்ணத் தோன்றும்.

கவிஞர் பாரதியாருக்கே இத்தகைய ஐயங்கள் ஏற்பட்டிருந்தனவோ, என்னவோ அவர் அவற்றை வரலாற்றுப் புலவன் மரபில் நின்று வகுத்துரைக்க முயன்றுள்ளார்.
கம்பன், இளங்கோ, வள்ளுவர் ஆகிய கலைச் சிகரங் களை அவர் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். அக் கல்விக் கடல்களைத் தந்த தமிழ்நாடு “கல்வி சிறந்த தமிழ்நாடே” என்பதை மெய்பிக்கின்றார். இது போலவே “வீரம் செறிந்த தமிழ்நாடு” புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு “செல்வம்.. யாவும் படைத்த தமிழ்நாடு என்ற கூற்றுக்களையும் அவர் வகுத்து விளக்க முற்பட்டுள்ளார்.

புனைந்துரையன்று, வரலாறே!

தமிழகத்தின் வீரப்புகழ் வெறும் புனைந்துரை யன்று, மிகையுரையன்று. வரலாறு காட்டும் செய்தியேயாகும். கவிஞர் பாரதியார் அவ்வரலாற் றுச் செய்திகளைத் திரைப்படக் காட்சிகளைப் போல நம் முன் ஓடச் செய்கின்றார்,

“விண்ணை இடிக்கும் கலை இமயம்- எனும்
வெற்பை அடக்கும் திறலுடையார்- சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார்- தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு!”

நில எல்லையில் தமிழர் பண்பாட்டைப் பெரு வெற்றிகள் இமயத்தை அடக்கின. தமிழ் மூவேந்தரும் வில், கயல், புலி ஆகிய முத்தமிழ்க் கொடி களையும் இமயமலையுச்சியில் பொறித்தார்கள். நில உலகத்தின் கூரை எனப்ப டும் இமயம் தமிழ் வீரப் புகழை வானகத்துக்கு எடுத் துரைத்தது. அது தமிழர்தம் கொடி மர மாகவே அன்று நிலவிற்று. அத்துடன் இம யத்துக்கடுத்த வடநா டாகிய கங்கைநாட்டையும் இடைநாடுகளாகிய வங்கத் தையும், கலிங்கத்தையும் வென்று அவர்கள் போர்ப்பரணி பாடினார்கள்.

கரிகால் சோழன் இமயங் கடந்து மேரு மலையின் உச்சியையே தாக்கினான். அதைத் தன் தெண்டா யுதத்தால் அடித்து அதன் தருக்கை அடக்கினான். அதன் முன்புற நெற்றியில் மட்டு மன்றிப் பின்புறத் திலும் தன் புகழ் எழுதுவ தற்காக, அவன் அதன் தலை யைத் திருகினான். இருபுறங்களிலும் தன் புலிக் கொடி பொறித்து, வடதிசைப் பெரு மன்னரிடம் பெரும் பொருள் திறை கொண்டு மீண்டான்.

சேரன் செங்குட்டுவன் கங்கைக் கரைகடந்து ஆரிய அரசர் கனகன், விசயன் ஆகியோர்களை முறியடித் தான். அவர்கள் தலைகள் மீதே இமயமலையின் பெருங்கல்லொன்றை ஏற்றிக் கொண்டு தமிழகத்துக்கு வந்தான். தன் தலைநகராகிய வஞ்சியில் தமிழர் கற்புத் தெய்வமாகிய கண்ணகிக்கு அக்கல்லிலேயே சிலை செதுக்கு வித்தான். இது தமிழ் பெருங்காப் பியமான சிலப்பதிகாரம் தரும் செய்தியாகும்.

கடல் கடந்த வெற்றிகள்

நில எல்லையில் தமிழர் வெற் றிகள் இவை. ஆனால் ஏனைய கீழ்த் திசை மன்னரைப்போல, அசோகன், ஹர்சன், அலாவுதீன், அக்பர் ஆகியவர்களைப் போலத் தமிழர் நிலப்பேரரசுடன் நின்றவரல்லர். அவர்கள் தமிழ்க் கொடிகள் கடல் அலைகள் மீதும் தவழ்ந்தன. பாரதியார் கவிதை மொழிகளிலே இந்த வெற்றிகளும் எதி ரொலிக்கின்றன.

சிங்களம், புட்பகம், சாவகம்- ஆதிய
தீவுபலவினும் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி, மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு!

தமிழர் கைவரிசைகள் கடல் கடந்த நாடுகளாகிய இலங்கை, பர்மா, மலாயா, அந்தமான் நிக்கோபார்த் தீவுகள், சுமத்ரா, ஜாவா, இந்து, - சீனா ஆகிய தென் கிழக் காசியப் பகுதிகளிலும் பரவியிருந்தன. அந்நாடு களிலெல்லாம் பாண்டியர் தங்கள் மீன் கொடி யையும், சோழர் தங்கள் புலிக் கொடியையும் நாட்டி ஆட்சியும், வாணிகமும், கலையும் பரப்பியிருந்தனர்.

கிழக்கே சென்ற கை மேற்கேயும் செல்லத் தவற வில்லை. சேரரும், பாண்டியரும், சோழரும் மாலத் தீவங்கள், இலக்கத் தீவங்கள், கடம்பர் மூலதளமான வெள்ளைத் தீவு, யவனர்நாடு ஆகியவற்றில் தம் ஆணை பரப்பியிருந்தார்கள். அவர்கள் வாணி கமும், தொழிலும், குடியேற்றங்களும் இவ்வெல்லை கடந்து, கிழக்கே சீனம், சீயம்(சயாம்) நாடுகளையும், மேற்கே சிந்து வெளி, ஏலம், சுமேரிய நாகரிகங் கள், பாபிலோ னியா அஸிரியா, பாலஸ்தீனம், எகிப்து, உரோமகம் ஆகிய நாடுகளையும் அளாவி ஒளி வீசின. கவிஞர் பாரதியாரின் மொழிகள் இவற்றையும் சுட்டிக் காட்டுகின்றன.

சீனம், மிசிரம், யவனரகம்- இன்னும்
தேசம்பலவும் புகழ்வீசிக் கலை
ஞானம், படைத்தொழில், வாணிபமும் -மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.

சிங்களம் இலங்கையையும், சாவகம் மலாயா, சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளையும், புட்பகம் பர்மாவையும், மிசிரம் எகிப்தையும் யவனரகம் கிரேக்க, உரோம நாடு களையும் குறிப்பவை. தவிர, பண்டைத் தமிழ் இலக்கி யத்தில் மலாயா நாடு கடாரம் என்றும், காழகம் என் றும், பர்மா அரு மணம் என்றும் அழைக்கப் பட்டன. காழகம், கலிங்கம் என்ற நாட்டுப் பெயர்கள் தமிழிலக் கியத்தில் அந்நாடுகளுக்குரிய துணி வகைகளின் பெயர் களாகவும், வங்க நாட்டின் பெயர் கங்கையாற்றில் செல்ல உதவிய தட்டையான கப்பல் வகையின் பெயரா கவும் விளங்கின. இலங் கையின் பெயராகிய ஈழம் பொன் னின் பெயராக வழங்கிற்று. இவை தமிழரின் மிகப் பழமை வாய்ந்த கடல் கடந்த அயல் நிலத் தொடர் புகளுக்குத் தமிழ் மொழியே தரும் அகச் சான்றுகள் ஆகும்.

ஆரியர் இமயம் கடந்து வருவதற்கு ஆயிரக்கணக் கான ஆண்டு கட்கு முன்பே தமிழினத்தவர் எழுத்தும் கலையும் நாகரிகமும் உடையவராய், சிந்து கங்கை வெளியெங்கும் பரவி நாடு நகரங்களும், கோட்டை கொத்தளங்களும் நிறுவி வாழ்ந்தனர்.

கி.மு. 3000 ஆண்டளவிலேயே அவர்கள் வணிகர் சிந்து வெளியிலும் ஏலம், சுமேர் ஆகிய இறந்துபட்ட நாகரிக வெளியிலும் வாணிகம் செய்தும், குடியே றியும் நாகரிகம் பரப்பியுமிருந் தனர். ஏலம், சுமேர் மக்களும் எகிப்தியரும் தமிழரின் பண்டை கிளையினங்களாகச் சென்று குடியேறியவர்கள் என்று பல அறிஞர்கள் கருது கின்றனர்.

திருதந்தை ஹீராஸ் தமிழி னத்த வரில் ஒரு சாராரான திரையர் அல்லது திராவிடர் நடு நிலக் கட லெங்கும் பரந்து, ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து முதலிய நாடுகளிலும், நடு அமெரிக்கா விலும் கூட வாழ்ந்து பண்டைப் பெருநாகரிகங்கள் வளர்ந்தி ருந்தனர் என்று கருதுகிறார்.

 இப்போதுள்ள மனித இனம் நாகரிக மடையு முன்பே, உலகெங்கும் பரவியிருந்த, மரபி ழந்து போன ஒரு முன்னைய நாகரிக இனத்தின் உயிர்க் கால்வழியே தமிழ் இனம் என்பர் “உலக வரலாறு” எழுதிய எச்.ஜி. வெல்ஸ் என்பார்.

உள் வளர்ச்சி

மனித இன வரலாறு எங்கும் பொதுவாக வளர்ச்சி யையே காட்ட வேண்டும், வளர்ச்சியையே காட்டு கிறது. ஆனால் கீழை உலக வரலாறு பொதுவாகவும், தமிழக வரலாறு சிறப்பாகவும் இதற்கு மாறான போக்கைக் காட்டுகிறது. வாழ்ந்த தமிழகம், உலகாண்ட தமிழகம், உலகின் செல்வம் திறை கொண்ட தமிழகம் படிப்படி யாகத் தாழ்வுற்று இன்றைய அவல நிலையை எட்டியுள்ளது என்பதையே வரலாறு காட்ட வல்லது. ஆனால் இது தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல. தமிழகத்துடன் ஊடாடிய பண்டைப் பெருநாகரிக இனங்கள் அனைத்தின் வரலாறுகளும் இதுவே. உண்மையில் அவ்வினங்களில் பல இன்று தடமற அழிந்து விட்டன. பண்டை பினீசியா, காதேஜ், ஹிட் டைட் பேரரசு, ஏலம், சுமேர் ஆகியவை இன்று புதைபொரு ளாராய்ச்சியில் மட்டுமே அறியப் பட வேண்டியவை ஆகியுள்ளன.

எகிப்தியர் பாரசீகர், கிரேக்கர், உரோமர் ஆகியோர் தம் நாட்டில் பிற இனங்கள், பிற நாகரிகங்கள் சமயங்கள் வாழவிட்டு தம் புகழை மட்டும் நாகரிக உலகில் தடம் பொறித்துச் சென்றுள்ளனர். சீன ரும் தமிழரும் மட்டுமே பண்டைப் புகழைத்தாமே தற்கால உலகிற்கு அளிக்கும் பழமைத் தூதுவராக இன்று தற்கால உலகிலே காட்சிய ளிக்கின்றனர்.

தமிழர் வரலாற்றுக்கும் சீனர் வரலாற்றுக்கும் ஒரு பெரிய வேற் றுமை உண்டு. சீனர் வரலாறு சீனத்தின் பழம்புகழை மட்டுமே காட்டுகின்றது. தற்காலச் சீனம் அழியாது நின்று புதுவாழ்வும் அவாவிநிற்பது உண்மையே. ஆனால் இன்றைய சீனத்தின் புதுவாழ்வு இன்றைய உலகத்தின் புது வாழ்வில் ஒரு பகுதியே அது தன் பண்டைப் புகழின் புதுமலர்ச்சியாகப் புதிய வளர்ச்சி பெறவில்லை.

ஆனால் தமிழக வரலாறு பழம் புகழை மட்டும் காட்டவில்லை. அந்தப் புகழ் படிப்படியாகத் தளர்ந்து அவலநிலையுற்று உலகப் புது வாழ்வில் புதுபங்கு பெறுவதை மட்டும் காட்டவில்லை. பழம் புகழின் புது மலர்ச்சியையும் நாம் அருகருகே வரலாற்றில் காண லாம். தமிழகம் இன்று உலகின் புதுவாழ்வில் பங்கு கொள்வதுடன் அமைய வில்லை. உலகுக்கு ஒரு வாழ்வும் புது மலர்ச்சியும் உண்டு பண் ணும் வகையில் அது தன் பழம் புகழைப் புதுப்பிக்க முனைந் துள்ளது. அதுவே தமிழகத்தின் உள்ளேயும் அதற்கு வெளியே அகல் உலகிலேயும் இன்று நாம் காணத் தொடங்கியிருக்கும் இரு திசைப்பட்ட மறுமலர்ச்சித் துடிப்பு ஆகும்.

தமிழகத்தின் வரலாறு இவ் வகையில் தமிழகத்தில் பற்று டைய தமிழர்க்கு மட்டுமின்றி, புதிய உலகில் பற்றுக் கொண்ட உலக வாணருக்கும் தனி முக்கி யத்துவம் உடையதாகும். வருங்காலத் தமிழ கத்துக்கு எச்சரிக்கை தரும் முறை யில் அது பண் டைப்புகழ் நலிந்த வகைகளையும் காட்ட வேண்டும். வருங்காலத் தமிழகத்துக்கும் உலகுக்கும் ஊக்கம் தந்து புது வழி காட்டும் முறையில், அப்பழம் புகழ் அழியாது நீடித்து நின்ற வகை களையும், அதன் நலிவிடையே உள் விரவி எழுந்து வளர்ந்து வரும் புது மலர்ச்சியின் வளர்ச்சிகளையும் நன்கு எடுத்துக் காட்ட வேண்டும். இவ்விரண்டுக் கும் மூலாதாரமாக, உலகம் நெடு நாள் மறந்துவிட்ட, சிற்சில சமயம் உலகின் கண்களிலி ருந்து மறைக் கப்பட்டுவிட்ட, அப் பழம் புகழின் பண்பையும், அளவை யும் நாம் ஆராய்ந்து மதிப்பிட்டுக் கணித் தறிவது இன்றியமையாத முதற் படியாகும்.

தமிழர் தேசியம், அண்மையில் அமையக் கூடும். தன்னுரிமையும், தன்னாட்சியும் பெற்ற தமிழகம் இதில் முனைந்து முன்னேறும் பெரும் பொறுப்புடையது.

தமிழர் பழைய வாழ்வை உள்ள வாறறிய விரும்புகிறவர் களுக்குத் தமிழ் இலக்கியம் பொது வாக ஒரு திரையிட்ட பல கணியாய் உதவு கிறது. சங்க இலக்கியம் இத்திரை யின் ஒளியார்ந்த பகுதி யேயாகும். ஆனால் காணும் கண்ணொளிக்கு விளக்கமாக பழமை ஒளி வந்து திரையில் கூடும் பகுதி புறநானூறே எனலாம். அது தொடர்ச்சியுடைய ஒரே வீரகாவியமல்ல. ஆனால் தமிழர் வீரகாவியங்களுக்கெல்லாம் அதுவே தலையூற்று என்னலாம். தமிழர் வீர காவியங்கள் பலவற்றின் சிறு வண்ணப் படிவங்களின் தொகுதியாக அது விளங்குகிறது.

Pin It