“இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும்” - 4 நாள் சுற்று(லா)ப் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசிய பின், மகிழ்ச்சி பொங்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பெய்ரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது இது.

தமிழர்களுக்கு எங்கு இன்னல் ஏற்பட்டாலும், அந்த இன்னலை ஏற்படுத்துபவர்கள் யாராயினும் அவர்களுக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துவது தான் இந்தியாவின் தலையாய பணி. அதனால் தான் தனது சொந்த நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் நாடாக இருந்தாலும், பாதிக்கப்படுவது தமிழர்கள் என்ற காரணத்தால் சிங்கள அரசுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டுகிறது இந்திய அரசு. இலட்சக்கணக்கானத் தமிழர்களை இன அழிப்பு செய்திட சிங்கள இனவெறி அரசுக்கு நிதி, ஆயுதம் எனப் பலவகைகளிலும் உதவி நின்றதோடு மட்டுமின்றி, இன்று வரை அவ்வரசுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் முட்டுக் கொடுத்தும் வருகின்றது இந்திய அரசு.

இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை நன்கு உணர்ந்ததால் தான், “இந்தியா எப்போதும் எங்கள் பக்கம்” என இந்திய அமைச்சர் கிருஷ்ணாவை பக்கத்தில் நிறுத்திக் கொண்டே, இறுமாப்புடன் கொக்கரிக்கிறார் சிங்கள அமைச்சர். ‘இலங்கை’த் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க உதவுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்திய அரசு அரங்கேற்றி வரும் அண்மைய நாடகத்தின் ஒர் காட்சி மட்டும் தான் இது.

முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு, சற்றொப்ப கடந்த 31 மாதங்களாக, 15க்கும் மேற்பட்ட சுற்றுகளில் நடத்தப்பட்ட, இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுகளில் இதுவரை எவ்வகை முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சிங்கள இனவெறி அரசின் அரசமைப்புக் கட்டமைவிற்குள் தமிழர்களுக்கு ஓரு தீர்வு என்ற வகையில் நடைபெறுகின்ற இப்பேச்சுவார்த் தைகளால் உண்மையில் தமிழர்களுக்கு எவ்வகை நன்மையும் கிடைக்கப் போவதில்லை என நாம் உறுதியாக நம்பலாம். ஏனெனில், கடந்த அரை நூற்றாண்டுகளாக சிங்கள அரசு நடத்திய ஏராளமான பேச்சுவார்த்தை மோசடி நாடகங் களைக் கண்டு தமிழ் மக்கள் சலித்துவிட்டனர்.

சிங்கள அரசின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்திய தொடர் போராட் டங்கள் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாக அனைத்துலக சமூகத்தின் முன் சிங்கள அரசு சந்தேகக் குற்ற வாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், சேனல்-4 தொலைக் காட்சி தொடர்ந்து வெளியிட்ட சிங்கள அரசின் போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்கள், டப்ளின் அனைத்துலக மக்கள் நீதிமன்றத்தில் சிங்கள அரசு போர்க் குற்றவாளி அரசு தான் என வழங்கப்பட்ட தீர்ப்பு, ஐ.நா. பொதுச்  செயலர் நியமித்த மூவர் குழுவின் அறிக்கை என சிங்கள அரசுக்கு அனைத் துலக சமூகம் தொடர் நெருக் கடிகளைத் தந்தது.

உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தன் னார்வத் தொண்டு நிறு வனங்களும், ஊடகர்களும் சிங்கள அரசின் தமிழினப் படுகொலையை அம் பலப் படுத்தி குற்றப்பத்திரிக்கை வாசித்து வருகின்றன. அமெ ரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் உள்ள சனநாயக சக்திகளும், மனித உரிமை செயல் பாட்டாளர்களும் சிங்கள அரசைக் கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர்.

தற்போது சிங்கள அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை கூட, இலட்சக்கணக்கான தமிழர்களையும், போராளி களையும் கொன்றொழித்த சிங்கள இனவாத அரசின் போர்க் குற்றங்கள் அனைத் துலக சமூகத்தின் முன் ஏற்படுத் தியுள்ள களங்கத்தை துடைத் தெறிய நடத்தப்பட்டு வரும் ஒப்புக்கு சப்பான நாடகம் தான்.

இப்பேச்சுவார்த்தை, உண் மையில் சிங்கள அரசு அனைத் துலக சமூகத்தின் முன் நற்பெயர் வாங்கிக் கொள்ளத் தான் உதவுமே தவிர, தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவப் போவ தில்லை என்பதை அப்பேச்சு களின் போது சிங்கள அரசு நடந்து கொள்ளும் விதத்தி லிருந்தே புரிந்து கொள்ளலாம்.

அனைத்துலக சமூகத்தின் குற்றச்சாட்டுப் பார்வையிலி ருந்து தப்புவதற்காக, போர்க் குற்றங்கள் குறித்த இலங்கை அரசு தானே விசாரித்து தாக்கல் செய்த ‘LLRC  ஆணைக்குழு’ அறிக்கையும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்கள் குறித்து, ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பகுதிகள் சிங்கள அரசின் ஆணைக்குழு அறிக்கையில் ஒரு பேச்சுக்குக் கூட கூறப்பட வேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வறிக்கையை முற்றிலும் நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா இவ்வறிக்கை போதுமானதாக இல்லை என கருத்து வெளி யிட்டது. ஆனால், சிங்கள அரசோடு இணைந்து தமிழின அழிப்புப் போரை நடத்திய இந்திய அரசு மட்டும் தான் இவ்வறிக்கையை ‘வரவேற்கத்தக்கது’ என்றும் ‘ஆக்கப்பூர்வமானது’ என்றும் கருத்து கூறியது. ‘இவ்வறிக் கைக்கு மேல் விசாரணையேத்  தேவையில்லை’ என்றும் இந் தியா வாதிட்டது. LLRC அறிக்கையை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இந்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணாவையும் இலங்கைக்கு கடந்த சனவரியில் அனுப்பியது இந்திய அரசு.

கிருஷ்ணா கொழும்பு சென்று இறங்கியதும், பாக்  நீரிணை, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் பன் னாட்டுக் கடல் எல்லைக் கப்பால் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு இருக்கும் பாரம் பரிய உரிமையை கைவிட இந்திய அரசு ஒப்புக் கொண்டு விட்டதாகவும், இது இலங் கைக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள மீன் வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்ன பிபிசிக்கு பேட்டி யளித்தார்.  

இதன் விளைவு பின்னர் தான் தெரியத் தொடங்கியது. இராமேசுவரத்திலிருந்து 23.01.2012 அன்று 680 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கற்களால் அடித்து விரட்டியது சிங்களக் கடற்படை. மேலும் 4 மீனவர் களை சிறைபிடித்தது. கடற் படையின் தாக்குதலில் சிக்கி ராமேஸ்வரம் மாந் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற மீனவர் படுகாய மடைந்தார். மறுநாள் (24.01. 2012) காலையில் தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி நடத்தப்பட்டத் தாக்குதலில் ஒருவரது காலில் காயமடைந்து, 2 படகுகளும் சேதமடைந்தன.

தமிழர்களின் ஒப்புதல் பெறா மல் தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு பரி சாகக் கொடுத்த இந்திய அரசு, அப்போது இயற்றிய கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்க தமிழக மீனவர் களுக்கு உரிமைகள் வழங் கியிருந்தது. ஆனால், அவ்வு ரிமையை மறுத்து இந்திய மக்களவையிலேயே பேசியவர் தான் எஸ்.எம்.கிருஷ்ணா. தற் போது, அவ்வுரிமைகளை இந்திய அரசு அதிகாரப் பூர்வ மாக கைவிட்டு தமிழ் இனத் திற்கு மீண்டுமொரு முறை துரோகமிழைத்திருக்கிறது.

இந்திய அரசின் இத்துரோக நடவடிக்கையால், தமிழக மீனவர் மீதான தாக்குதல் இனி மேன்மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

போர்க்குற்றம் தொடர்பான உலகளாவிய நெருக்கடிகளில் சிக்கித்தவித்த சிங்கள அரசு, கொழும்பு வந்திறங்கிய கிருஷ் ணாவை கண்ட பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சுடன் “இந்தியா எப்போதும் எங்கள் பக்கம்” என அறிவித்தது.

வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது அமர் வுக் கூட்டத்தில், இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு வேளை அவ்வாறு விவாதம் வந்தால், அதில் இந்திய அரசு என்ன கருத்து கூறும், எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான நடைமுறை ஒத்திகை தான் இது.

கிருஷ்ணாவின் வருகைக்குப் பின் சிங்கள அமைச்சரும் மனித உரிமைகளுக்கான சிறப்புத்  தூதுவருமான மகிந்த சமரசிங்க “ஜெனீவா கூட்டத்தில் எங்க ளால் எந்தவகையான அனைத் துலக அழுத்தங்களையும் எதிர்கொள்ள முடியும்” என்று உறுதிபடத் தெரிவித்ததன் பின்னணியில் இந்திய அரசே ஒளிந்து நிற்கிறது.

தற்போது, எஸ்.எம். கிருஷ்ணா சென்றது மட்டு மல்ல, இனப்படுகொலைக் குற்ற வாளியாக நிற்கும் சிங்கள அரசின் இரத்தக்கறையைத் துடைக்கவும், ‘கவலைப்படாதீர் நாங்கள் இருக்கிறோம்’ என்று ஆறுதல் கூறவும் இந்திய அரசின் அதிகாரிகளும் அமைச் சர்களும் போர் முடிந்த பின்னர் அவ்வப்போது இலங்கைக்கு தொடர்ச்சியாக பயணம் மேற் கொண்டு வருகின்றனர்.

அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக, சிங்கள அரசு நடத்தும் அரைகுறை பேச்சு வார்த்தை கூட அங்கு வேண்டா வெறுப்பாகத் தான் நடத்தப் படுகின்றது என்பது இந்திய அரசுக்கும் நன்கு தெரியும்.

“பேச்சுவார்த்தைகளின் வழியே தான் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும்” என்று எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பில் சொல்லிக் கொண் டிருந்த வேளையில் தான், இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தைக் கூட்டங்களை மூன்று முறை புறக்கணித் திருக்கிறது. “திட்டமிட்டபடி தாம் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த போதும் இலங்கை அரசுத் தரப்பில் இருந்து யாரும் வரவில்லை” என்று தெரிவித் தார் தமிழ் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன்.

பேச்சுவார்த்தைக் கூட் டத்தை இலங்கை அரசு புறக் கணித்தது குறித்து வாய்த் திறக்காத இந்திய அரசு, “தமிழர் களுக்குத் அரசியல் தீர்வு கிடைக்க நாங்கள் காலக்கெடு விதித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம்” என்றும் அறிவித்து அதன் உண்மை முகத்தை பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியது. சிங்கள அரசின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான அமைச்சர் ஸ்ரீபால டி சில்வாவும்,  இந்தியா விட மிருந்து தமக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கப் பட வில்லை என்று தெரிவித்தார். இது தான் பேச்சு வார்த் தைகளை முன் நகர்த்துவதில் இந்திய அரசுக்கு இருக்கும்  அக்கறையின் இலட்சணம்!

உண்மையில் இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ, தொடர்ந்து சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் நிலை குறித்தோ பேசுவதற்காக இலங்கை செல்ல வில்லை. போர்க்குற்றவாளி அரசாக நிற்கும் இலங்கை அரசின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், பாதா ளத்திற்குச் சென்றுவிட்ட இலங்கையின் பொருளியலை சரிகட்ட திட்டங்கள் தீட்டுவதற் காகவும் தான் அவர் இலங்கை சென்றார்.

உலகமய சந்தைப் பொருளி யலின் காரணமாக உலகளாவிய அளவில் பொருளியல் பெரு மந்தம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா, இலங்கை உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடு களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த வாரம் கூட இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களின் மீதான இறக்கு மதி வரியை அதிகரித்து மக்களின் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டது. மேலும், இராசபக்சே குடும்பத் தினரின் ஆதிக்கம், இராணுவத் தினரின் கட்டற்ற அதிகாரம், போர்ப் பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள பொருளியல் பாதிப்புகள் என இலங்கை அரசு தனக்குள்ளும் நெருக்கடி களால்முற்றுகையிடப் பட்டிருக் கிறது.

இந்நிலையில் தான், இலங் கையின் பொருளியலில் ஏற் பட்டுள்ள பாதிப்புகளை சரி கட்டவும், அவர்களுடன் வட நாட்டு பெருமுதலாளிய நிறு வனங்களுக்கு உள்ள பொரு ளியல் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தி புதிய ஒப் பந்தங்கள் போடும் திட்டங் களுடனும்தான் கிருஷ்ணா இலங்கை பயணமானார். இந்திய - இலங்கை நாடுகளுக் கிடையே சற்றொப்ப 443 மில்லியன் டாலர்கள் மதிப் பிலான பொருளியல் ஒப்பந்தங் கள் கையெழுத்தானது இதற்குச் சான்று.

அதே வேளையில், தமிழர் களுக்கு அதிகாரமோ அரசியல் தீர்வோ கிடைக்கக் கூடாது என்பதில் சிங்கள அரசை விட அதிக உறுதியுடன் இந்தியா உள்ளது என்பதை மறை முகமாக பறைசாற்றவும் கிருஷ் ணாவின் பயணம் பயன்பட்டது.

மூன்று இலட்சம் தமிழர் களை முள்வேலிக்கம்பி முகாம் களுக்குள் முடக்கி வைத் திருக்கும் இராசபக்சே, தமிழர் திருநாளான பொங்கல் விழா வை கிருஷ்ணாவை வைத்துக் கொண்டு, ஒப்புக்காக நடத்தி னார். தான் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விழாவைச் சற்று நேரம் தள்ளி வைத்து இராசபக்சே தன்னை நெகிழ வைத்து விட்டார் என்றும், அவர் நல்ல பண் பாளர் என்றும் இராசபக்சே வுக்கு நற்சான்று வழங்கினார் கிருஷ்ணா.

சிங்கள விமானங்களின் குண்டு வீச்சால் வீடுகள் அழிந்து போன தமிழர்களுக்கு 50,000 புதிய வீடுகள் கட்டித் தருகிறோம் என கடந்த 2 ஆண்டுகளாகக் கூறி வந்த இந்திய அரசு, தற்போது கிருஷ்ணாவை வைத்து வெறும் 50 வீடுகளை மட்டும் கட்டித் தந்தது. அதில் கூட, அனைத்தும் தமிழர்களுக்குக் கிடைத்து விடாது. அவற்றில் பெரும் பாலனவை அங்கு சிங்கள அரசால் வலிந்து குடியேற்றப் படும் சிங்களர்களுக்குத் தான் கிடைக்கும் என்கிறது அங்கி ருந்து வரும் தகவல். (நன்றி: குமுதம் வார இதழ்,  1.2.2012)

பின்னர், செய்தியாளர்களி டம் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா, “இலங்கையின் ஒருமைப் பாட்டை நாங்கள் மதிக்கிறோம். இலங்கையின் 13 ஆவது அரசி யலமைப்பு சட்டத் திருத்தத்தை நடை முறைப் படுத்தும் வகை யிலான ஓரு தீர்வுத் திட்டத்தை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசு முன் வைக்க வேண்டும்” என்றும் கூறினார்.

இந்திய அரசு வலியுறுத்து கிற, இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஏற்கெனவே தமிழீழ விடுதலைப்புலிகளாலும், தமிழீழ மக்களாலும் நிராகரிக் கப்பட்ட ஒன்று தான். இது இந்தியாவில் தற்போது மாநிலங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச அதிகாரங் களைக் கூட கொண்டதல்ல.

எனினும், இந்தக் குறைந்த பட்ச அதிகாரங்கள் கூட தமிழர் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என சிங்கள இனவாத அரசு கவனமுடன் நடந்து வருகின்கிறது. 13ஆவது சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள் ளவாறு காவல் துறை, காணி நிர்வாகம் உள்ளிட்டவற்றை மாகாணங்களுக்குக் கையளிக்க இலங்கை அரசு பல்லாண்டு களாகவே தொடர்ந்து மறுத்து வருகின்றது. இது ஒருக்காலும் சாத்தியமற்றது என அதிபர் இராசபக்சே வெளிப் படை யாகவே கூறியிருக்கிறார்.

மேலும், 2010ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட 18ஆவது சட்டத்திருத்தம் இலங்கை அதிபருக்கு மேலும் பல அதிகாரங்களை வழங்கியும், 13ஆவது சட்டத் திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் பலவற்றை விழுங்கியும் இலங்கை அரசின் இனவாதக் கட்டமைப்பை மேலும் இறுக்கியிருக்கிறது.

தமிழின விரோத இந்திய அரசு ஒரு பேச்சுக்காக வலியுறுத் துகிற 13ஆவது சட்டத் திருத் தத்தைக் கூட மறுப்பது தான் சிங்கள இனவாத அரசின் மாறா நிலைப்பாடு. இந்நிலையில், 13+ என்ற பெயரில், 13ஆவது சட்டத் திருத்தத்தையும் தாண்டி தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணு வோம் என எஸ்.எம். கிருஷ்ணா விடம் இராசபக்சே வாக்குறுதி அள்ளி வீசிய போது, குறையை இந்தியா சுட்டிக்காட்ட முற்பட வில்லை. உண்மையில், இருதரப் பினரின் நோக்கமும் தமிழர் களை ஒடுக்குவதுதான் என்ற வகையில், இந்தியா சிங்களத் தோடு எவ்வகையிலும் முரண் பட விரும்பவில்லை.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையச் சிக்கலில் இந்திய அரசின் முகவராக செயல்பட்ட முனைவர் அப்துல் கலாமையும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை சென்ற கலாம், அங்கு இராசபக்சே அரசால் முன் மொழியப்பட்ட மும்மொழித் திட்டத்தை (சிங்களம்-தமிழ்-ஆங்கிலம்) தொடங்கி வைத்தார். 1958இல் தமிழர்கள் மீது சிங்கள மொழியைக் கட்டாயமாகத் திணித்த தனிச் சிங்கள சட்டத்தின் இன்றைய மறு வடிவம் இது.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே, கலாம் இராசபக் சேவுக்கு நற்சான்று வழங்கி விட்டு, 1989இல் புலிகளுடனான போரில் இறந்துபோன இந்திய அமைதிப்படையினரின் நினைவுச் சின்னத்தில் வீர வணக்கம் செலுத்தி அவர்களை வாழ்த்திப் போற்றி கையொப்ப மிட்டார். கலாமின் கபடப் புன்னகையில் இந்திய அரசின் நரித்தனம் தான் தெரிந்தது.

மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான தனது நரித்தனமான வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.  வரும் மார்ச் மாதம் மனித உரிமைக்குழு கூடும் போது, இந்தியா சிங்கள அரசை வலுவாக ஆதரிக்கும். தமிழர் களின் போராட்ட முன்னெ டுப்புகளை நாமும் தொடங்கி யாக வேண்டும்.

இதோ, புலம் பெயர்ந்த தமிழர்கள் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணை யக் கூட்டத்தில் சிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென வலி யுறுத்தி ஐரோப்பிய நாடாளு மன்றத்திலிருந்து ஐ.நா. மன்றம் வரை “நீதி கேட்டு நடை பயணம்” என்ற பெயரில் ஜெனீவாவில் மாபெரும் மக்கள் திரள் எழுச்சி ஒன்றுகூடலை நிகழ்த்த அறிவிப்பு வெளியிட்டி ருக்கிறார்கள்.

இந்திய அரசு இக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதர வாக நிற்கக் கூடாது என்றும், உலக நாடுகளின் முன்னிலையில் தமிழீழப் பகுதிகளில் தமிழீழம் குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக மக்களாகிய நாம் இந்திய அரசை நெருக்கி முழக்கமிட வேண்டும். இதுவே இன்றைய வரலாற்றுத் தேவையும், கடமையும்.

Pin It