கொலைவாள்-18

இன்னுமொரு மோதல் சாவு. இந்த முறை ஐந்து பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வங்கியில் கொள்ளை அடித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு. ‘காவல்துறையினர் வெளியிட்ட சந்தேக நபரின் புகைப்படத்தைப் பார்த்து பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் காவலர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அந்த வீட்டிற்குள் பதுங்கியிருந்தவர்கள் காவலர்களை நோக்கி சுட்டதில் இரு காவலர்களுக்கு காயம். உடனே காவலர்கள் திருப்பிச் சுட்டதில் ஐந்து பேரும் இறந்துள்ளனர்’ என்பது செய்தி.

சென்னை பெருங்குடி பேங்க் ஆப் பரோடா மற்றும் சென்னை கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் முறையே 25 மற்றும் 14 லட்சத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் உடனடி யாக அறிவித்தனர். இறந்தவர்களை அடையாளம் காட்டிய இரு வங்கி அதிகாரிகளும், ஊழியர் களும் இதே ஐந்து பேர்தான் தங்களிடம் கொள்ளை அடித்ததாக தெரிவித்தார்களாம்.

kolai_370ஐந்து பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்றும் அவர்களின் பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினர் வெளியிட்டனர். தங்களைத் தாக்க வருபவர்களிடம் இருந்து காவலர்கள் என்றில்லை சாதாரண பொதுமக்கள் கூட எதிர்த் தாக்குதல் நடத்தி தங்களைக் காத்துக் கொள்ள சட்டத்தில் இடமிருக்கிறது. அப்படி தாக்குதல் நடத்தும் போது உயிரிழப்புகள் நடத்தால் கூட தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியானால் குற்றச் செயலாக அது கருதப்பட மாட்டாது. அதுவும் பணியில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது உரிய தற்காப்பு நடவடிக்கையில் இறங்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் நடைமுறையில் மோதல் சாவுகள் நடைபெறும் போதெல்லாம் எழும் சர்ச்சை காவல்துறையினர் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

காசுமீரிலும், மும்பையிலும் பதவி உயர்வுக்காக துணை ராணுவப்படையினரும் காவல்துறை யினரும் என்கவுன்டர் என்ற பெயரில் நடத்திய திட்டமிட்ட படுகொலைகள் இதற்கு எடுத்துக் காட்டு. தமிழ்நாட்டிலும் வீரப்பன் முதல் உள்ளூர் போக்கிலிகள் வரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டு சொல்லும் மோதல்சாவு கதை களில் உள்ள நாடகத்தை சாதாரண பொதுமக்கள் வரை அறிந்திருக்கின்றனர்.

வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்ற தில் எழும் பல்வேறு ஐயங்கள் இது தற்செயலாக நடந்த மோதல் சாவு அல்ல என்பதை பறை சாற்றுகின்றன.

எழும் ஐயப்பாடுகள்:

1. கொள்ளையர்களின் தலை வன் என்று காவல்துறையினர் மோதல் சாவு நிகழ்வுக்கு முதல் நாள் வெளியிட்ட காணொளி காட்சிகளில் தொடங்குகிறது முதல் ஐயம். பல்வேறு வங்கி களில் எடுத்ததாக கூறப்படும் அந்தக் காட்சி எங்கே எப்போது பதிவானது என்ற தகவல்களை காவல்துறையினர் வெளியிடாதது அது சித்தரிக் கப்பட்டதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்து கிறது.

2. சந்தேக நபர்கள் தங்கியிருந் ததாக சொல்லப் படும் குடியிருப்புப் பகுதிக்கு காவல்துறை யினர் இரவு 12.30 மணிக்குச் சென்றதாகவும், அந்த இடத் தைச் சுற்றி வளைத்ததும் கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டதாகவும் சொல்கிறார்கள். உண்மையில் அன்றைக்கு இரவு 10 மணிக் கெல்லாம் அந்தப் பகுதியை காவல் துறையினர் சுற்றி வளைத்து விட்டனர் என்று அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

3. நள்ளிரவு ஒருமணிக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடந்த தாகவும் அரைமணி நேரத்தில் கொள்ளை யர்களை கொன்று விட்டதாகவும் காவல்துறை யினர் சொல்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சுடும் சத்தம் எதுவும் எங்களுக்கு கேட்கவில்லை என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

4. அப்படியே காவல்துறை யினர் கூறியபடி, நள்ளிரவே அந்தச் சம்பவம் நடந்து முடிந் திருந்தால் அதிகாலை 5.30 மணிவரை பத்திரிகை யாளர் களை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்தது ஏன்?

5. இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக காவல்துறையினர் சொல்கிற நிலையில் கொல்லப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வீட்டுச் சுவரில் மருந்துக்குக்கூட துப்பாக்கித் தோட்டாக் கள் பாய்ந்த சுவடுகள் இல்லையே எப்படி?

6. கொள்ளையர்களுக்கும், காவல்துறையினருக் கும் சன்னல் வழியாகவே துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கொள்ளையர்களை சுட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். அப்படியானால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் சரியாக தலையில் (அதுவும் நெற்றிப் பொட்டில்) குண்டடிப்பட்டு இறந்திருப்பது எப்படி?

7. கதவை உடைத்துச் சென்றதாக காவல் துறையினர் கூறுகின்ற நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டின் கதவு துளி சேதம் கூட இல்லாமல் இருப்பது எப்படி?

8. கொள்ளையர்கள் காவல் துறையினரை நோக்கி சுட்டிருக் கிறார்கள். அவர்கள் அறையில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. ஆனால் வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்ததாக காவல்துறையினர் சொன்னது பொய்யா? உண்மையான துப்பாக்கி வைத்திருந்த வர்கள் பொம்மைத் துப்பாக்கியை நம்பிக் கொண்டு கொள்ளையில் ஈடுபடுவார்களா?

9. இத்தனை களேபரங்களுக்குப் பின் கொல்லப் பட்டதாக இவர்கள் குறிப்பிடும் பீகார் வாரிச களில் ஒருவர் சொந்த ஊரில் உயிருடன் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருப்பது எப்படி? கொள் ளையர்கள் போலி முகவரி வைத்திருந் திருக்கலாம் என்ற காவல்துறை யினரின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அது போலவே அந்த அறையில் கொள்ளை கும்ப லுடன் தொடர்பில்லாத நபர்களும் இருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் அல்லவா?

10. எல்லா மோதல் சாவுகளைப் போல மயிரிழையில் உயிர் தப்பிய காவல்துறையினர் மருத்துவமனை படுக்கையில் தலையணையில் சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டி ருக்கின்றனர்.

11. சந்தேக நபர் என்று காவல்துறையினர் தொடக்கத்தில் வெளியிட்ட காணொளி காட்சி யின் போது அவர் சென்னையில் எந்தக் கல்லூரி யிலும் படித்த படிக்கும் மாணவர் இல்லை என்பதை வெளிமாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இன்னாள் மாணவர்கள் ஒரு லட்சம் பேரின் புகைப் படங்களுடன் ஒப்பீடு செய்து உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப் பட்ட பின்பு அவர் சென்னை கல்லூரியில் படித்தாக சொல் கிறார்கள். எந்தக் கல்லூரி எப்போது படித்தார், என்ன படித்தார் என்பதை வெளி யிடாதது ஏன்?

இப்படி நீ....ண்டு கொண்டே போகிற ஐயப்பாடுகள் ஒருபுறம்.

உண்மையில் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத் துவதுதான் காவல்துறையினரின் வேலை. எந்த விதமான வலுவான ஆதாரங்களும் இன்றி ஐந்து பேரை சுட்டுக் கொன்றதை அங்கீகரிப்பது அபாய கரமானது. அந்த அறை யில் தவறேதும் செய்யாத, குற்றவாளிகள் என்று தெரி யாமல் அவர்களுக்கு அடைக் கலம் கொடுத்தவர்கள் யாரா வது இருந்து, அவர்களும் கொல்லப்பட்டடிருந்தால், அது நியாயமா?

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், கொலை கொள் ளைகளைத் தடுக்கவும் குற்றவாளி களுக்குப் அச்சத்தை ஏற்படுத்தவும் இப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல் துறையினர் சப்பை கட்டுக் கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிகழ்வுக்கு மறுநாளே சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருக்கின்றனர். திருட்டைத் தடுக்க துப்பாக்கிச்சூடு பயன்படாது என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா?

இராணுவத்தினரைப் போல் காவல் துறை யினரும் ஆயுதத்தை தூக்கத் தொடங்கினால் சாதாரண திருடர்களும் துப்பாக்கியுடன் தான் அலைவார்கள். அது சமூகத்தில் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டும்.

நீதிமன்றத்துக்குப் போனால், குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்து விடுவார்கள் என்கிற வாதமும் இங்கே முன் வைக்கப்படுகிறது. உண்மையில் குற்றவாளிகளைக் கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்துவது மட்டும் காவல்துறையின் வேலை அல்ல. அவர்களின் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமையும் அவர் களுக்கு உண்டு. அதை சரிவர நிறைவேற்ற தவறும் ‘கடமைக் காக’ கடமை ஆற்றுவதைத்தான் பல நேரங்களில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதக மாக்கிக் கொண்டு தப்பிவிடுகின்றனர்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை யினருக்கு இதுபோன்ற உரிமையை வழங்குவோ மேயானால், நாளைக்கே நமது வீட்டுக் குள்ளும் காவல்துறையினர் துப்பாக்கியுடன் நுழைவார்கள். அண்மையில் இருளர் இனப்பெண்கள் பலாத் காரம் செய்யப் பட்ட கொடூரத்தில் தொடர்பு டைய காவல்துறையினரை கைது செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்தப் பெண்களுக்கு இழப்பீடு மட்டும் வழங்கப்பட்டது. பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரம் கிடைத் ததும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்காடி வருகிறது.

கொல்லப்பட்ட ஐவரும் வங்கிக் கொள்ளை யில் ஈடுபட்ட வர்கள்தான் என்பதை எந்த அடிப்படையில் உறுதி செய்த பின்பு அவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்?

கொலை கொள்ளைகளைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நிரந்தரத் தீர்வாகாது. சென்னையிலும் திருப்பூர் போன்ற வெளிமாநிலத் தொழிலா ளர்கள் குவியும் இடங்களிலும் இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண் டே இருக்கின்றன. குறைந்த ஊதியம் வழங்கினால் போதும் என்ப தற்காக இடைத்தரகர்கள் மூலம் நாள் தோறும் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்த வர்கள் குவிக்கப்படுகின்றனர். இவர்களில் சமூக விரோதிகளும் சேர்ந்து விடும் அபாயம் சாதார ணமாகவே உள்ளது.

இதைப்பற்றி தற்போதைய அ.தி.மு.க. அரசும் சரி, இதற்கு முன்னால் இருந்த தி.மு.க. அரசும் சரி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. (புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிக்கே தி.மு.க. அரசு வெளிமாநிலத்தவர்களைத் தான் பயன்படுத்தியது) வெளிமாநிலத்த வர்களை முறைப்படுத்த இங்கே நமது அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

வங்கிக் கொள்ளை நிகழ்வு இதைத்தான் உணர்த்துகிறது.

(கொலைவாள் முற்றும்)

Pin It