எந்தெந்த மாவட்டங்களிலிருந்து பிரித்து என்னென்ன மாவட்டங்களை எப்போது உருவாக்கினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கான தகவல் இது.

கோயம்புத்தூரிலிருந்து ஈரோடும் (1976), சேலத்திலிருந்து, தர்மபுரி (1965) நாமக்கல் (1997) மாவட்டங்களும் தஞ்சை, திருச்சி மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை (1974), கரூர் (1996), நாகப்பட்டினம் (1991), திருவாரூர் (1997), பெரம்பலூர் (1996), மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன.

இராமநாதபுரத்திலிருந்து சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களும் (1984), மதுரையிலிருந்து திண்டுக்கல் (1985), தேனி (1997) மாவட்டங்களும் தோற்றுவிக்கப்பட்டன. திருநெல்வேலியிலிருந்து (1986) தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. வடஆற்காடு மாவட்டம் வேலூர், திருவண்ணாமலை (1989) எனவும், தென் ஆற்காடு மாவட்டம் கடலூர், விழுப்புரம் (1993) எனவும், செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர் (1996) எனவும் பிரிக்கப்பட்டன.

Pin It