ஈசன் பிரம்படி பட்டும்
இன்னும் திருந்தவில்லை
மதுரை.
----------------------------------------
இரண்டாவது முறையாக
எரிந்தது மதுரை.
வெண்கொற்றக்குடை
வெட்கப்படவில்லை
இப்போது.
----------------------------------------
ஆந்தைக்கு மட்டுமல்ல
ஆர்க்காட்டாரின்
புண்ணியம்
காரிருளிலும்
கண் தெரிகிறது எங்களுக்கு.
---------------------------------------------
பெயர் தான்
தாழ்தளப்பேருந்து
குறையவில்லை கட்டணம்.
-------------------------------------------------
இடைத்தேர்தல்
எடைத்தேர்தலாம். . .
எவ்வளவு
செலவழித்தோமென
பார்த்தீர்களா?
-------------------------------------------------
குண்டோதரன்
கை வைத்த
வைகையில்
கால் கூட வைக்கமுடியவில்லை.
---------------------------------------------------
வீதிகளில்
வன்முறை தாண்டவமாட
வீட்டுக்குள்ளோ
மானும், மயிலும் ஆட.
------------------------------------------------------
முக்கண் இருந்தும்
விட்டுவிட்டானே
கருவறை சேட்டையை.
---------------------------------------------------------
பணக்காரர்களைப் போலிருக்கிறார்கள்
பிச்சைக்காரர்கள்.
எப்போதும்
இல்லையென்றே கூறுகிறார்கள்.
------------------------------------------------------------
- ப.கவிதா குமார்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை