* ஆழி சூழ் உலகறிய .
 ஆதி மனிதன் செய்த .
 அக-புற தேடல்களின் .
 அடையாளமாய்.
.
* பிரபஞ்ச மனிதனின் .
 புவி உள்ளங்கையில்.
 நதிகளாய் ஓடும்.
 ரேகைத் தடங்களாய்....
.
* பாலை-மலை நிலமென.
 படர்ந்து விரிந்து .
 முதலும் முடிவுமில்லா.
 பெருவழியாய்....
.
* ஆள்வோர் பெருமை பேச .
 அகன்று கிடக்கும்.
 ஆறுவழிச்சாலையின்.
 பாலப் பருவமாய்....
.
* பல வர்க்கப் பாதங்கள்.
 பதிந்திருந்த போதும் .
 முதலில் நடந்த பாதம் .
 சிந்திய குருதியை.
 சேமித்து வைத்தபடி.
.
* தேடலின் அடுத்த வரவை .
 எதிர்பார்த்து .
 காத்திருக்குதந்த .
 ஒத்தை யடிப்பாதை.

Pin It