பத்து லட்சம் கோடியை இந்தியாவின் சில்லரை வர்த்தகம் 2016இல் எட்டும் என்பது சர்வதேச ஆராய்ச்சி நிறுவன்ங்களின் மதிப்பீடு. இது வருடம் தோறும் 5 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்தினையும் இந்தியாவின் வேலைவாய்ப்பில் 8 சதவீதத்தினை சில்லரை வர்த்தகம் ஈட்டுகிறது. 2000 முதலே இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தினை சர்வதேச நிறுவன்ங்களுக்கு பெரும் லாபம் அளிக்கும் துறையாக சித்தரித்த ஏ.டி.கீர்னி கன்சல்டிங் நிறுவனம் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தினை உலக அளவி லான இந்தியாவின் இரண்டாவது கவர்ச்சிகரமான முதலீட்டு தொழிலாக முன்மொழிந்தது.

இதற்கு பல்வேறு காரணிகளாக இந்தியாவின் தொழில் கொள்கையில் மாற்றங்களை முன்னெடுப்பதும் அதற்காக பன்னாட்டு நிறுவன்ங்கள் அதில் ஈடுபடுவது மான செயல்களை இது ஊக்குவித்தது. மேலும் மேற் குலகின் சந்தைகள் கிட்டத்தட்ட போட்டிகளின் உச்சத்தினை அடைந்ததும், நிறைவுற்ற அதிக வளர்ச்சி விகிதத்தினை பேணாத சந்தைகளாக மாறியதும் கார ணம். இந்தியாவின் சில்லரைமொத்த விற்பனை சந்தைகள் முழுமைக்காகவும், பெரும் தொகையிலான வாடிக் கையாளர்களை கொண்ட்தாகவும் அமைகிறது. மேலும் இந்தியாவின் ஊக வணிகம் திறக்கப்பட்டு அது சந்தையை முதலீடுகள் விளையாடும் லாபத்தின் களமாகவும் மாற்றப்பட்டுள்ளதை மேற்குலகம் அறிந்தே இருந்தது. (<http://www.iloveindia.com/economyofindia/retailindustry.html>) 

தற்போது சில்லரை வர்த்தகத்தின் இந்தியாவின் நிலை என்ன என்பது பார்த்தால் அது இந்தியாவின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 14% சதவீதத் தினையும், வேலைவாய்ப்பில் கிட்ட்தட்ட 7% பங்களிப் பினை கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு உருவாக்குவதிலும் பெரும் தூணாகவே இருக்கிறது. இந்தியாவின் பொரு ளாதாரத்தினை பாதிக்கும் ஒரு தொழில்துறை நிச்சயம் மேற்குலகிற்கு லாபத்தினை அளிக்கும் சந்தையாகவே அமையும்.

சில்லரை வர்த்தகத்தின் முக்கியமான பிரிவுகளை நாம் புரிந்து கொள்வது அவசியம்.. சில்லரை வர்த்தகம் என்பது வெறும் பெட்டிக்கடை, மளிகைக்கடை அல்லது சூப்பர்மார்க்கெட் வகையறாக்கள் சேர்ந்தது மட்டுமல்ல. மொத்தவிலைக்கடையும் இந்த வகையில் உள்ளடங்கும். அதாவது மொத்த விலைக்கடையை சில்லரை வர்த்தகப் பெட்டிக்கடையாக நடத்த முடியும் என்பதை வால்மார்ட் பல ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்து இருக்கிறது.

மொத்தவிலைக் கடையைத்தான் சென்னையில் வால்மார்ட் திறக்கிறது. தமிழக அரசு அனுமதிக்க வில்லையே என்றபோது நாங்கள் சில்லரை கடையை திறக்கத்தான் அனுமதி வேண்டும் இதற்கு இல்லை என்கிறார்கள்.

சில்லரை வர்த்தகத்தின் பின்பகுதியை பெரும் சங்கிலி தொடராக சமூகத்தின் பல தொழில்களை, தொழிலாளர்களை இணைக்கிறது. ஆங்கிலத்தில் சப்ளை செயின் என்கிறார்கள். இந்த சங்கிலித் தொடரை முழுமையாக கைப்பற்றி வைக்கும் பொழுதே விலையை நிர்ணயிக்கும் சக்தியும், சந்தையை கைப்பற்றி முழுமையாக ஆக்கிரமிக்கும் ஆற்றலும் ஒரு நிறுவனத்திற்கு வருகிறது. சில்லரை வர்த்தகத்தின் நன்மையும் தீமையும் இந்த இட்த்திலேயே இருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தத் தொடரை முழுமையாக ஆக்கிரமிக்கின்றன. மின்ன்னுப் பொருளில் உலகின் மலிவான பகுதியில் இருந்து உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதும், மளிகை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் பெரிய விவசாய நிலங்களை விவசா யத்திற்கு உட்படுத்தி உற்பத்தி செய்வதும், அல்லது வெளி நாடுகளில் இருந்து மொத்த கொள்முதல் (உற்பத்தி செய்து இறக்குமதி செய்தல்) மூலம் சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். ஆடைகள், ஆயத்த ஆடைகள், மருந்துப் பொருட்களை சர்வதேச சந்தையில், உள்ளூர்ச் சந்தையில் பெரும் எண்ணிக்கையில் வாங்கும் போது கிடைக்கும் பேரத்தின் மூலம் விலை குறைவாக கொள் முதல் செய்கிறார்கள். மேலும் கொள்முதல் என்பது நேரடியாக விற்பனையோடு தொடர்புபடுத்தி குறித்த நேரத்திற்கு வாங்குதல் என்பதாக நுணுக்கமாக திட்டமிடலையும் அவர்களால் மென்பொருள் துணையோடு செய்து முடிக்க முடிகிறது. (ஜஸ்ட் இன் டைம், ஈ.ஆர்.பி சாஃப்டுவேர்கள்) . இதன் மூலம் விற்பனையை முன்கூட்டியே ஊகித்து உற்பத்தியும் செய்ய முடிகிறது. இதன்மூலம் மூலதன சேமிப்பினையும், பயனறிந்து செலவிடுவதையும் செய்கிறார்கள். இவ்வாறு ராட்ச்சத்தனமாக கொள்முதல் மூலமாக இவர்களால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இயலுகிறது. இந்த குறைந்த விலையானது இவர்களுக்கு பெருமளவில் சந்தையை உருவாக்கி வாடிக்கையாளர்களை வரவழைப்பதால் பெரும் எண்ணிக்கையில் வியாபாரம் செய்ய இயலுகிறது.

 சில்லரை வர்த்தகத்தின் அன்னிய முதலீடானது நேரடியாக சில்லரை கடை வைத்திருப்பவர்களை மட்டுமல்லாது சமூகத்தின் பிற அடுக்குகளையும் பாதிக்கிறது. இந்த பாதிப்பு இரண்டு வகைகளில் சமூகத்தில் ஏற்படுத்துகிறது, ஒன்று நுகர்வோர்கள் பாதிப்பு, அடுத்து உற்பத்தியாளர் சார்ந்த தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரப் பாதிப்பு.

குறைந்த விலைக்கு விற்கும் சக்தியை இவர்களை கொண்டிருப்பது என்பது இவர்களது கொள்முதல் உத்தியையும், அதிக விற்பனை தந்திரத்தினையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் அறிய முடியும். இதுவே இரண்டு பக்கங்களிலும் சேதத்தினை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. இந்த பெரும் வியாபாரம் இவர் களுக்கு கொள்முதல் சந்தையில் அடித்து பேரம்பேசு வதற்கும், கடன் வைத்து கொள்முதல் செய்வதற்கும் வழிவகை செய்கிறது. இந்த கடன்வைத்தல் வழிமுறை இவர்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோரை ஒரு சக்கரவியூகத்தில் மாட்டுகிறது. அதாவது அவர்கள் தொடர்ச்சியாக உற்பத்தியில் இருக்கவேண்டும், விலையை அவர்களாக நிர்ணயிக்க இயலாது, உற்பத்தியின் அளவினை ஏற்ற இறக்கத்தில் இவர்கள் சொல்லும் முறையில் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதற்கு தேவையான மென்பொருட்கள், தொழிற் நுட்பங்களை கைகொள்ளுதல் வேண்டும், தொழிலாளர்களை இதற்கு ஏற்ப திட்டமிடுதல் என பலவகையில் நெருக்கடிக்குள்ளாக்கப் படுவார்கள். இதனுடன் தரம் என்கிற கத்தியும் அவர்களது கழுத்தின் மீது வைக்கப்படும். உள்ளூர் உற்பத்தியாளர்கள் இதை செய்தால் மட்டுமே இவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய இயலும். இதை செய்ய மறுத்தாலோ, அல்லது இயலாமல் போனாலோ அவர்கள் தொழிலை விட்டே வெளியேறவேண்டிய சூழலை எதிர்கொள் வார்கள் (வேறு கொள்முதல் செய்யும் நிறுவன்ங்கள் இல்லாமல் போவதே இதன் காரணம்). இது மட்டுமல்லாமல் நீண்ட கடன் காலங்கள் (கிரெடிட் பீரியட்) இவர்களை வெளியேறச்செய்ய இயலாது. இது போல உள்ளூர், சிறு, குறு உற்பத்தியாளார்கள் இந்த வலைப்பின்னலில் மாட்டுகிறார்கள். இது போன்ற நிறுவனங்களை பல மின்னனு துறையில் நாம் பார்க்கலாம்.

விவசாயத்தினை பொருத்தவரை இவர்களால் பெரும் நிலத்தினை குத்தகைக்கோ, விலைக்கோ வாங்க இயலுவதால் விவசாய செலவுகளையும் குறைப்பது சாத்தியப்படுத்துகிறார்கள். இதை தொழிற் நுட்பம் முதல் ஏனைய அறிவியல் உதவியுடன் செய்வதும், வேலையாட்களை குறைப்பதும் சாத்தியப்படுகிறது. தண்ணீரை தனியார்மயப்படுத்தல் இன்னும் சில நாட் களில் நடந்த பிறகு விவசாயம் என்பது சாமானியருக்கு எப்படி சாத்தியப்படும். மின்சாரமும் சில காலத்தில் இலவசமாக அளிக்கப்படுவது நிறுத்தப்படும் போது எப்படி சிறு விவசாயிகளால் செலவுகளை எதிர்கொள்ள முடியும் என்பதை யோசித்தல் இதனுள் இருக்கும் சூட்சுமம் புரியும். இதனூடாக நாம் இங்கு கொண்டு வரப்படும் விதைச்சட்டம் உட்பட பல்வேறு மசோதாக் களை இணைத்து பார்க்கவேண்டும். இதன் பாதிப்பு களை இதனூடாகவே உணரமுடியும். தொகுத்துப் பார்க்கும் போது மட்டுமே இந்த சில்லரை வர்த்தகம் சாமானிய மனிதனிடம் ஏற்படுத்தும் இழப்பினை உணர இயலும்.

தொழிலாளர்களை பொருத்தவரை இவர்களது திட்டமிடல் என்பது குறைந்த ஊதியத்தில் எங்கு பணி செய்யமுடிகிறதோ அங்கே பொருட்களை உற்பத்தி செய்வது. இவ்வாறு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் இடங்களில் இவர்கள் தொழிலாளர் நலனை கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. சர்வதேச தொழி லாளர் உரிமைகள், நலன்கள் நடைமுறைப்படுத்தப்படாத நாடுகளில், இடங்களில் இவர்களது உற்பத்தியானது நிகழ்கிறது. இதற்கு இல்லீகல் இம்மிகரண்ட்ஸ் எனப் படும் பொருளாதார வாழ்வு தேடி வளர்ந்த நாடுகளுக்கு வரும் ஏழை நாடுகளின் சட்டவிரோதமாக குடியேறி யவர்கள் பயன்படுத்தப்படுவது வாடிக்கையானதும் கூட. சமீபத்தில் கூட பங்களாதேசத்தில் இந்த வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்த்தையும் நாம் பார்த்தோம். 2006 இலிருந்து இது நாள் வரை கிட்ட்தட்ட 500 தொழிலாளர்கள் தீ விபத்துகளினால் பங்களாதேசத்தில் இறந்து போய் உள்ளார்கள்.

கடந்த வருடம் நடைபெற்ற (தஸ்ரின் ஆயத்த ஆடை நிறுவனத்தில்) தீ விபத்தில் கிட்டத்தட்ட 112 தொழிலாளர்கள் இறந்தார்கள். இதுவரை இதற்கு வால்மார்ட், டிஸ்னி உட்பட எந்த நிறுவனமும் , இந்த தொழிற்சாலையை பயன்படுத்திய போதிலும் நட்ட ஈட்டை வழங்கவில்லை. (<http://www.nytimes.com/slideshow/2012/11/25/world/asia/26bangladesh_ss2.html>) <http://www.huffingtonpost.com/2012/12/05/walmartbangladeshfactoryfire_n_2244891.html>. இதை எந்த வளரும் நாடுகளில் உள்ள ஊழல் மலிந்த அரசுகள் கேள்விகேட்பது இல்லை. இதற்கு அடுத்தபடியாக சங்கிலித்தொடராக பாதிக்கப்படுப்வர்கள், தமிழகச் சூழலில் சந்தை, மண்டி வகை தொழில்கள் சிதையும். இவைகள் நேரடியாகவும், உடனடியாகவும் சிதைவுக்கு உள்ளாகும். இதை சிதைத்தால் தான் ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலியை கைப்பற்றுவதும், உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களை மாற்றுவதும் சாத்தியப்படும். இதன் மூலம் இருவரையும் பிரித்து உள்ளே வால்மார்ட் நுழையும். இதன் மூலம் சில்லரை கொள்முதல் செய்பவர்கள், சிறு உற்பத்தியாளர்கள் விவசாயிகள் பிணைப்பு உடைக்கப்பட்டு இருவருக்கும் இடையே வால்மார்ட் நுழையும். பிறகு இருவரது தொழிலையும் ஆக்கிரமிக்கும். இந்த யுக்தியைத் தான் தமிழகத்திற்கு வால்மார்ட் பயன்படுத்தப்போகிறது.

இதன் பிறகு சில்லரை கடைகளான பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், சிறுவணிக வளாக கடைகள் , உற்பத்தியாளர்கள், விவசாயிகள், நெசவாளிகள், மண்டி, சந்தை, இடைத்தரகர்கள், கமிசன் ஏஜெண்டுகள், சிறு வணிகக் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள், மருந்துக் கடைகள், முதலானவை வரை இதனால் பாதிக்கப்படும். கடைகள் விலை குறைவை சமாளிக்க இயலாமல் தடுமாறும், மூடப்படும், அல்லது லாபமற்று இயங்கும் நிலைக்கு தள்ளப்படும்.

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்த மறுவாழ்வு மசோதா போன்றவை இவ்வாறு பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் சிறுதொழில் புரிவோர்கள் பின்னால் போராட்ட களத்தில் நிற்க கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்ட்து எனலாம்.

மேலும் சமீபகாலங்களில் மிக அதிகமாக வால்மார்ட் போன்ற நிறுவனங்களில் சம்பளபாக்கிகள், குறைவான சம்பளம் போன்ற கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் வலுத்து வருவதைக் காண முடியும். (<http://www.davidicke.com/headlines/75847americansholdprotestsagainstwalmartpolicieswithemployees>) ஆகவே வேலைவாய்ப்பு உருவாகும் என்பதும் கண் துடைப்பு. 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் தமிழக சில்லறை வர்த்தகக் கடையினை விட நான்கில் ஒரு பங்கு ஆட்களே இந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படுவார்கள். இதேபோலத் தான் இவர்கள் வாங்கும் உற்பத்தியாளர்களும் ஆட்குறைப்பு செய்யவேண்டிய நெருக்கடி பல நாடுகளில் ஏற்பட்டு உள்ளது. 

அரசியல் நுணுக்க அறிவு மக்களிடையே ஏற்படுத்தப்படாமல் போனால் மக்களின் ஆதரவு இந்த பெரு நிறுவன்ங்களுக்கு அதிகமாக இருப்பது நடக்கவே செய்யும். இது இந்த சங்கிலித் தொடரை முழுமையாக பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றிவிடும்..

இந்த நிறுவனங்களை எதிர்த்துப் போராடும் வலிமையை நமது சிறுவணிகங்கள் பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியே.. வால்மார்ட், செயின்பெரி, டெஸ்கோ போன்ற நிறுவன்ங்கள் பெட்ரோல்பங்க் மட்டுமல்ல, போஸ்ட் ஆபீஸே நட்த்துகிறது. இவர் களின் முதலீடுகள் பல பத்து ஆயிரம் கோடிகளை தாண்டுகிறது. இவர்களது கடைகள் கிட்ட்தட்ட 200 கார்களை பார்க்கிங் செய்யுமளவு பெரியதாக பல ஏக்கர்களை உள்ளடக்கியதாக நகரத்தில் இருப்பது மட்டுமல்ல, 1000 சதுர அடி கொண்ட கடைவகை களையும் இவர்கள் நிறுவ ஆரம்பித்தனர். இதன் விளைவாக அனைத்து சிறுகடைகளும் மூடப்பட்டன. இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாயத்துகளின் எதிர்ப்புகள் பலனிக்கவில்லை, மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க சொல்லிவிட்டு கடைகளை இவர்கள் திறந்தார்கள். இன்றும் இவர்களுக்கு அப்பகுதி வணி கர்களிடம் எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் கடைகள் தொடர்ந்து திறக்கப்படுகின்றன. இவர்களை தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே இருக்கிறது. உள்ளே வரவிடாமல் தடுப்பது மட்டுமே சாத்தியப்படும் நிகழ்வு.